தோடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 ஜூலை 2020

தோடர்கள்

(Todas) அல்லது தொதுவர் என்பவர்கள் தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் சிறு பழங்குடி இனத்தவர். சுமார் 1,600 பேர் மட்டுமே பேசும் ‘தொதவம்’ என்ற மொழியைப் பேசுபவர்கள். 


இவர்கள் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். அதிகமாக எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றிச் சுற்றியே அமைகின்றது.

இதனால் இவர்களைப் பொதுவாக ’எருமையின் குழந்தைகள்’ என அழைக்கிறார்கள். இவர்களுடைய வீடு, கோயில் போன்றவை அரைவட்ட வடிவமானவை. வீடுகளின் நுழைவாயில் மிகமிகச் சிறியது. 



குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். குளிரைத் தவிர்ப்பதற்கும் விலங்குகள் உள்நுழையாமல் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடு.

இவர்களுடைய மொழி மிக விரைவாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்து உள்ளது.

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர்கள். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். நாவல் மரத்தைப் புனிதமான மரமாக மதிக்கின்றனர்.



இவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பார்கள்.

இவர்களில் வயதில் முதிர்ந்தவர்களைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக் - பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்கள்.

தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர். தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். 



இருளர், காடர், குறும்பர், தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர்.

இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது இல்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.

இத்தகைய பழங்குடி மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றார்கள்.

(மலேசியம்)
07.07.2020