சிபில் கார்த்திகேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிபில் கார்த்திகேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஏப்ரல் 2012

மலேசிய வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசு


விக்கிபீடியாவில் இந்தப் புதினம் வெளிவந்துள்ளது. அதன் முகவரி:



மலேசிய வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசு
சிபில் கார்த்திகேசு மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரத் தமிழ்ப் பெண்மணி. பல நூறு சீனர்களின் உயிர்களை ஜப்பானியர்களிடம் இருந்து காப்பாறியவர். அவரை ஒரு வீர மங்கையாக மலேசியச் சீனர் சமுதாயம் கருதி வருகிறது.

மலேசியச் சீனர் சமுகத்தினர் இன்று வரை, சிபில் கார்த்திகேசுவை தியாகி என்றும் போற்றிப் புகழ்கின்றனர். சீனர்கள் பலர் இவருடைய பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி அவருடைய தன்னலமற்றச் சேவையை நினைவு கூறுகின்றனர்.

சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவருடைய அப்பா ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. அம்மா ஒரு தமிழர்.


1940ல் சிபில் கார்த்திகேசு இளமையாக இருக்கும் போது
சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதி. சீன மொழியில் நன்கு சரளமாகப் பேசக் கூடியவர். இவர் இந்தோனேசியா சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர்.

1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடந்தது.

ஆறுமுகம் கணபதி பிள்ளை என்பதன் சுருக்கமே ஏ.சி.கார்த்திகேசு ஆகும். இவர்
சிங்கப்பூர் காலாங் மருத்துவக் கல்லூரியில் படித்து 21 வயதிலேயே மருத்துவர் ஆனவர்.


1948ல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சை பெறும் போது
பின்னர் இருவரும் சேர்ந்து ஈப்போ பிரவுஸ்டர் சாலையில் (இப்போது ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா என்று அழைக்கப்படுகிறது) ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். அந்த மருத்துவ விடுதியில் கணவருக்கு மருத்துவப் பணி. சிபில் கார்த்திகேசுவிற்குத் தாதியர் பணி.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கே
தொழில் புரிந்தனர். டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு சீன சமூகத்தவரிடம் மிகவும் அன்பாகப் பழகினார். நல்ல மரியாதை கிடைத்தது. அதனால் ஈப்போ வாழ் சீனர்கள் அவரைச் செல்லமாக யூ லோய் டெ என்றும் அழைத்தனர்.


2012ல் இப்போதைய பாப்பான் பட்டணம்

1941 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்தனர். ஜப்பானியர்கள் ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும் சிறு நகருக்குப் புலம் பெயர்ந்தனர்.

அங்கே புதிதாக ஒரு மருத்துவ விடுதியைத் திறந்தனர். இந்தப் பாப்பான் சிறு நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஈயச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் போனது. சீனர்கள் அதிகமாக வாழும் இடம்.


1940ல் டாக்டர் கார்த்திகேசு
ஜப்பானியர்கள் மலாயாவிற்கு வந்த சில காலத்தில் டாக்டர் கார்த்திகேசு மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார். பழைய ஈப்போ மருத்துவ விடுதியை மறுபடியும் திறந்து நடத்தினார்.

சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திலேயே தங்கி பாப்பான் மருத்துவ விடுதியைப் பார்த்துக் கொண்டார். ஏழை
எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.


1992ல் ஈப்போ பிரவுஸ்டர் சாலை 
ஜப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.  மலாயா மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தனர்.

இலட்சக் கணக்கான மக்களை சித்ரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் சீனர்கள் ஆகும். இந்தியர்களைப் பார்த்தால் ‘காந்தி.. காந்தி’ என்று சத்தம் போட்டு இரைந்து கைகளைத் தூக்கிச் செல்வார்கள்.


1941 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானியர்களின் அட்டகாசம்
இருந்தாலும் சியாம் மரண இரயில் பாதை போடுவதற்காக பல்லாயிரம் இந்தியர்களை கொண்டு சென்று அங்கு அவர்களைப் பலிக்கடா ஆக்கியது வேறு ஒரு வரலாறு.

ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் Malayan People’s
Anti-Japanese Army (MPAJA) எனும் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம். இந்த இராணுவம் மலாயா நாடு முழுவதும் துளிர் விட்டிருந்தது.


1942ல் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்
பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பாப்பான், பூசிங், கோப்பேங் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல் பட்டது.

இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தான் பின்னாளில் மலாயாக் கம்னியூஸ்டு கட்சி என்று மாறியது. மலாயாவைக் கம்னியூஸ்டு  நாடாக மாற்ற பல திட்டங்கள் போட்டது.

ஜப்பானிய ஆதிக்க எதிர்ப்புப் போராளிகள் மறைந்து இருந்து ஜப்பானியர்களைத் தாக்கி வந்தனர். அந்த மாதிரியான தாக்குதலில் பாப்பான், பூசிங் இடங்களில் இருந்த பல போராளிகள் காயம் அடைந்தனர். 


1943ல் பாப்பானில் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதி
காயம் அடைந்த போராளிகள் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப் பட்டனர். மருத்துவ விடுதிக்கு பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது.

மருத்துவ உதவிகள் தேவைப் பட்டு அந்தப் போராளிகளைக்
கொண்டு வரும் போது அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு நல்ல ஒரு மறைவிடமாக அமைந்தும் போனது.


2011ல் மருத்துவ விடுதிக்குப் பின்னால் இருக்கும் காய்கறித் தோட்டம்
அந்தப் போராளிகளுக்கு சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பி இருக்கிறார். சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

அதே நேரத்தில் தன்னுடைய விடுதியில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் சிபில் கார்த்திகேசு வைத்திருந்து இருக்கிறார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு வந்தார்.
செய்திகளை பாப்பான் மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்தும் வந்தார். 1943 ஆம் ஆண்டு வரை அவ்வாறு நடந்து வந்துள்ளது. சிபில் கார்த்திகேசு செய்தவை அனைத்தும் ஜப்பானியர்களுக்கு எதிரானச் செயல்கள்.

பாப்பான் பட்டன மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை Kempetei எனும் ஜப்பானிய இராணுவப் போலீசார் அறிய வந்தனர். அதனால் பாப்பான் பட்டன மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர். 

1943ல் ஜப்பானிய இராணுவப் போலீசார்
அந்த வகையில் சிபில் கார்த்திகேசு 1943 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப் பட்டார்.அப்போது ஜப்பானியர்களின் போலீஸ் தலைமையகயகம்  ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது.

அங்கே விசாரணை எனும் பேரில் கேள்விகள் மேல் கேள்வி. போராளிகளின் பெயர்களைச் சொன்னால் போதும். விட்டு விடுகிறோம். மன்னித்து விடுகிறோம் என்று ஜப்பானியர்கள் கெஞ்சினர்.

சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப் பட்ட பள்ளி - 2011ல் எடுத்த படம்
ஒன்றும் நடக்கவில்லை. சொன்னாமல் மட்டும் விட்டு விடுவார்களா. உண்மையைச் சொன்னால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப் படும்.

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் என்றால் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து
என்பதை சிபில் கார்த்திகேசு உணர்ந்தார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை. உணமையைச் சொல்லாமல் எல்லாவிதச் சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டார்.
1943லிருந்து 1945 வரை சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப்பட்ட இடம்
அங்கேதான் சித்ரவதை எனும் பேரில் பெரிய பெரிய அநியாயங்கள் நடந்து இருக்கின்றன. தன்னுடைய சுயசரிதையில் இவை எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். என்ன மாதிரியான அநியாயங்கள் என்று சொல்ல நமக்கு மனம் வரவில்லை. 

வெளிக்காயம் இல்லாத சித்ரவதைகள்.
தூங்க விடாமல் செய்தல்.

தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்து மூச்சு நின்று போகும் போது தலையை
வெளியே எடுத்தல். 


1943ல் ஜப்பானியர்கள் மலாயாவில் சித்ரவதை செய்யும் காட்சி
ஐஸ் கட்டியில் கட்டிப் போட்டு உட்கார வைத்தல்.

காலைக் கட்டித் தொங்க விடுதல்.

படுக்க வைத்து அவர் மீது ஐந்து பேர் ஏறி
மிதித்தல்.

பிறப்பு உறுப்பில் சவர்க்கார நீரைப் பாய்ச்சி மயக்கம் அடையச் செய்தல்.

இப்படி கணக்கு வழக்கு இல்லாத அநியாயங்கள்.

மிருகத் தனமாகச்
சித்ரவதைகள்.

ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளி தான் ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தலைமை இடமாக இருந்தது. பல சீனச் சமூகத் தலைவர்களும் விசாரணை என்ற பெயரில் சிரச் சேதம் செய்யப் பட்டனர். அதனால் ஆவிகள் உலவுவதாக கூட இன்று வரை வதந்திகள் உலவுகின்றன.


1943 - 1945 வரை ஜப்பானிய சித்ரவதைக்கு ஆளான வில்லியம் பிள்ளை கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசுவைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் கட்டி வைத்து அடித்தனர். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார். அவர்களுடைய மகன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை.

அவனையும் ஒரு மரத்தில் கட்டித்
தொங்க விட்டனர். சித்ரவதை செய்தனர். தாயாரின் முன்னாலேயே பயங்கரமான சித்ரவதைகள் செய்தனர்.

தவம் கார்த்திகேசு தன் ஆங்கிலேயக் கணவருடன்
கடைசியாக மகள் தவம் கார்த்திகேசுவையும் சிதரவதை செய்து இருக்கின்றனர். இவை அனைத்தையும் பார்த்தும் சிபில் கார்த்திகேசு மனம் தளரவில்லை. ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த மலாயா ஜப்பானிய எதிர்ப்பு போராளிகளைக் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை.

சார்ஜண்ட் எக்கியோ யோஷிமுரா என்பவன் தான் அவர்களைச் சித்ரவதை செய்வதில்
தலைவனாக இருந்தவன். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஒரு குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறது.


சிபில் கார்த்திகேசுவைக் கொடுமை படுத்திய எக்கியோ யோஷிமுரா
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சியும் தோல்வி கண்டது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் வந்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.


இரண்டாவது உலகப் போரில் சரண் அடையும் ஜப்பான்
அவர் பத்து காஜா சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அவர் பாப்பான் பட்டணத்திற்கு கொண்டு வரப் பட்டார். பாப்பான், பூசிங் நகர மக்கள் அனைவருமே திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்திற்கு விமானத்தின் மூலமாகக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் வழங்கப் பட்டது. அப்போதுதான் சிபில் கார்த்திகேசு No Dram of Mercy எனும் தன் சுயசரிதையையும் எழுதினார். அவரால் எழுத முடியவில்லை. மற்றவர் துணை கொண்டு எழுதினார்.


சிபில் கார்த்திகேசு எழுதிய சுயசரிதை
அப்போது சிபில் கார்த்திகேசுவை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப் பட்டார். இந்தச் சமயத்தில் தான் ஜப்பானின் ஹீரோஷிமா, நாகாசாக்கியில் அணுகுண்டுகள் போடப் பட்டன.

அங்கே சிபில் கார்த்திகேசுவிற்கு இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான கிங் ஜார்ஜ் வீர விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் கிங் ஜார்ஜ் வீர விருதை பெற்றது இல்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆங்கிலேய அரசின் சகல மரியாதைகள், மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் சிபில் கார்த்திகேசுவிற்கு வழங்கப் பட்டன.


கிங் ஜார்ஜ் விருது
இருந்தாலும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் வேதனைகளை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி தன்னுடைய 49வது வயதில் அவர் இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. பின்னர் அந்தப் பூதவுடல் லானார்க் சமாதியில் இருந்து 20.3.1949ல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. ஓர் ஆங்கில எழுத்தாளர் இப்படி எழுதி இருக்கிறார்.


ஸ்காட்லாந்தில் உள்ள லானார்க மருத்துவமனை.
இங்கே தான் சிபில் கார்த்திகேசு இறந்தார்.
”Her remains having arrived from Scotland by a ship to Penang and then travelled home to Ipoh 141 Brewster Road. One of the largest funeral processions ever seen in Perak took place. Sybil the Ipoh Heroine was treated in royal style and 100,000 people of Perak and from all parts of the country turned out to say goodbye.Even people came from Thailand,Vietnam,Borneo and Indonesia.”

ஸ்காட்லாந்தில் இருந்து அவருடைய உடல் பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப் பட்டது. அங்கு இருந்து பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.


ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும்
சிபில் கார்த்திகேசுவின் கல்லறை
அவருடைய உடல் ஈப்போ செயிண்ட் மைக்கல் மாதா கோயில் அருகில் இருக்கும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.அதை கொனாலி சாலை கிறிஸ்துவ மயானம் என்று இப்போது அழைக்கிறார்கள்.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து அந்தக் கணக்குச் சொல்லப் படுகிறது.

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். ஆகவே அவ்வளவு பெரிய
மக்கள் கூட்டம் கூடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது நடந்தது 1949 ஆம் ஆண்டில்.

மலேசிய மண்ணிலும் சரி, பேராக் மாநிலத்திலும் சரி இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் பிரபலமாகப் பேசப் படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள்.

சீனர்கள் பலர் தங்கள்
பிள்ளைகளுக்கு சிபில் என்று பெயர் வைத்து சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள். மலேசியத் தமிழர்களில் இப்போதைய இளைஞர்களுக்கு அவரைப் பற்றி தெரியாமல் இருக்கிறது.

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக இப்போது மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு பத்திரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர்.


ஒல்கா கார்த்திகேசு - சிபில் கார்த்திகேசுவின் மூத்த மகள். 
கடைசியாக ஈப்போவில் எடுத்த படம்.

சிபில் கார்த்திகேசுவிற்கு மூன்று பிள்ளைகள்:

1. வில்லியம் பிள்ளை (பிறப்பு 1918)
2. ஒல்கா கார்த்திகேசு (பிறப்பு 1921)
3. தவம் கார்த்திகேசு (பிறப்பு 1936)

கார்த்திகேசு தம்பதியினரின் முதல் மகன் மைக்கல் கார்த்திகேசு பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இறந்து போனார். அதனால் அவர்கள் வில்லியம் பிள்ளை எனும் சிறுவனை எடுத்து வளர்த்தனர். இவரும் ஜப்பானியர்களால் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு 30 வயதிற்கும் கூடுதலாக இருக்கும். வில்லியம் பிள்ளை, கோப்பேங் சிறையில் சித்ரவதை செய்யப் பட்டார்.

சிபில் கார்த்திகேசுவின் கல்லறையில்
அதற்கு பிறகு அவர் தைப்பிங் சிறைச் சாலைக்கு அனுப்பப் பட்டார். மலாயாவில் இருந்து ஜப்பானியர்கள் வெளியானதும் இவரும் விடுவிக்கப் பட்டார். பின்னர், இவர் நிங் பாய்க் சூ எனும் ஈப்போ சீனப் பெண்ணை மணந்தார். இவரைப் பற்றிய மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.

பெற்றோர்களையும் அண்ணன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு போனதும் தனது பாட்டியையும் கடைசி தங்கை தவம் கார்த்திகேசுவையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இரண்டாவது மகள் ஒல்கா கார்த்திகேசுவின் மீது விழுந்தது.


சிபில் கார்த்திகேசுவின் படுக்கை அறை
தவம் கார்த்திகேசுவிற்கு அப்போது ஏழு வயது. அந்தச் சிறுமியையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை. அவளையும் பிடித்துக் கொண்டு போய் சித்ரவதை செய்துள்ளனர். அந்த வேதனையையும் தாங்க வேண்டிய நிலைமை ஓல்காவிற்கு ஏற்பட்டது.

ஒல்கா கார்த்திகேசு இன்னும் ஈப்போவில்
வாழ்கிறார். இவருக்கு வயது 90. இவருக்கு ஈப்போ சீனர்களும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். (கடைசி தகவல்: 2009)

1952 ஆம் ஆண்டு சிபில் கார்த்திகேசுவின் கடைசி மகள் தவம் கார்த்திகேசுவிற்கு மருத்துவம் படிக்க இங்கிலாந்து அரசு நிதியுதவி செய்தது. அவர் லண்டன் சென்று இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு படிப்பை நிறுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஊர் சுற்றி விட்டு 1957 ஆம் ஆண்டு மலேசியா திரும்பினார். 


பாப்பான் பட்டணத்தில் இருக்கும்
சிபில் கார்த்திகேசு அரும் காட்சியகம்
இங்கிலாந்தில் இருக்கும் போது அங்கேயே தவம் கார்த்திகேசு ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார். நாடு திரும்பிய தவம் கார்த்திகேசு தன் அக்காள் ஒல்கா கார்த்திகேசுவை இங்கிலாந்திற்கு வரும்படி அழைத்தார்.

ஒல்கா மறுத்து விட்டார். தன் தந்தை கார்த்திகேசுவின்
கடைசி காலம் வரை அவருடனே இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். சொன்னபடி தன் தந்தையின் கடைசி கால்ம் வரை இருந்தார். 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய 81 வது வயதில் டாக்டர் கார்த்திகேசு காலமானார். இவருடைய உடல் ஈப்போ தம்பூன் எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.


சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய
மற்றொரு நூல்

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய நூல்கள்:

1. No Dram of Mercy, Neville Spearman, 1954; Oxford University Press.

2. Faces of Courage: A Revealing Historical Appreciation of Colonial Malaya's Legendary Kathigasu Family by Norma Miraflor & Ian Ward

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது.

பின்னர்
மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி நிலையம் Apa Dosaku? எனும் தலைப்பில் 10 வாரங்களுக்கு சிபில் கார்த்திகேசு பற்றிய நாடகத் தொடரை ஒளிபரப்பு செய்தது.


Apa Dosaku தொலைக்காட்சி நாடகத் தொடர். 
சிபில் கார்த்திகேசுவின் பேத்தி

அண்மையில் அவர் வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நானும் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள். 


கண்களைக் குளமாக்கும் சிபில்
கார்த்திகேசுவின் பாப்பான் இல்லம்
அவர்களின் அத்தனை பேரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்த என் கண்களும் குளமாகிப் போயின. என் மனதில் ஓர் இறுக்கம். அவர் பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். சிபில் கார்த்திகேசு அந்தப் பொருட்களில் இருந்து புன்னகை செய்து கொண்டு இருந்தார். இந்தக் கட்டுரையை எழுதும் போது என் மனம் ரொம்பவும் வலிக்கின்றது. சத்தம் போடாமல் அழவும் செய்கின்றது.

22 ஏப்ரல் 2011

வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசு

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இந்த ஆய்வுப் புதினம் வெளிவந்துள்ளது. அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/சிபில்_கார்த்திகேசு


வீரத் தமிழ்ப் பெண்மணி சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு என்பவர் மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரத் தமிழ்ப் பெண்மணி.பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாறிய ஒரு வீர மங்கையாக அவரை மலேசியச் சீனர் சமுதாயம் கருதுகிறது.

இன்று வரை மலேசியச் சீனர் சமுகத்தினரால் தியாகி என்றும் போற்றிப் புகழப்
படுகிறார். சீனர்கள் பலர் இவருடைய பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி அவருடைய தன்னலமற்றச் சேவையை அழகு பார்க்கின்றனர்.

சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவருடைய அப்பா ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. அம்மா ஒரு தமிழர். இருந்தாலும் சிபில் கார்த்திகேசு தன்னை ஒரு தமிழ்க் கிறிஸ்துவப் பெண்ணாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். அப்படியே வாழ்ந்தும் இருக்கிறார்.

1940ல் சிபில் கார்த்திகேசு இளமையாக இருக்கும் போது
சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதி. சீன மொழியில் நன்கு சரளமாகப் பேசக் கூடியவர். இவர் இந்தோனேசியா சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர்.

1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடந்தது.

ஆறுமுகம் கணபதி பிள்ளை என்பதன் சுருக்கமே ஏ.சி.கார்த்திகேசு ஆகும். இவர்
சிங்கப்பூர் காலாங் மருத்துவக் கல்லூரியில் படித்து 21 வயதிலேயே மருத்துவர் ஆனவர்.

1948ல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சை பெறும் போது
பின்னர் இருவரும் சேர்ந்து ஈப்போ பிரவுஸ்டர் சாலையில் (ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா) ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். அந்த மருத்துவ விடுதியில் கணவருக்கு மருத்துவப் பணி. சிபில் கார்த்திகேசுவிற்குத் தாதியர் பணி.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கே
தொழில் புரிந்தனர். டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு சீன சமூகத்தவரிடம் மிகவும் அன்பாகப் பழகினார். நல்ல மரியாதை கிடைத்தது. அதனால் ஈப்போ வாழ் சீனர்கள் அவரைச் செல்லமாக யூ லோய் டெ என்றும் அழைத்தனர்.

2011ல் இப்போதைய பாப்பான் பட்டணம்

1941 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்தனர். ஜப்பானியர்கள் ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும் சிறு நகருக்குப் புலம் பெயர்ந்தனர்.

அங்கே புதிதாக ஒரு மருத்துவ விடுதியைத் திறந்தனர். இந்தப் பாப்பான் சிறு நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஈயச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் போனது. சீனர்கள் அதிகமாக வாழும் இடம்.

1940ல் டாக்டர் கார்த்திகேசு
ஜப்பானியர்கள் மலாயாவிற்கு வந்த சில காலத்தில் டாக்டர் கார்த்திகேசு மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார். பழைய ஈப்போ மருத்துவ விடுதியை மறுபடியும் திறந்து நடத்தினார்.

சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திலேயே தங்கி பாப்பான் மருத்துவ விடுதியைப் பார்த்துக் கொண்டார். ஏழை
எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.

1992ல் ஈப்போ பிரவுஸ்டர் சாலை 
ஜப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.  மலாயா மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தனர்.

இலட்சக் கணக்கான மக்களை சித்ரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் சீனர்கள் ஆகும். இந்தியர்களைப் பார்த்தால் ‘காந்தி.. காந்தி’ என்று சத்தம் போட்டு இரைந்து கைகளைத் தூக்கிச் செல்வார்கள்.

1941 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானியர்களின் அட்டகாசம்
இருந்தாலும் சியாம் மரண இரயில் பாதை போடுவதற்காக பல்லாயிரம் இந்தியர்களை கொண்டு சென்று அங்கு அவர்களைப் பலிக்கடா ஆக்கியது வேறு ஒரு வரலாறு.

ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் Malayan People’s
Anti-Japanese Army (MPAJA) எனும் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம். இந்த இராணுவம் மலாயா நாடு முழுவதும் துளிர் விட்டிருந்தது.

1942ல் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்
பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பாப்பான், பூசிங், கோப்பேங் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல் பட்டது.

இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தான் பின்னாளில் மலாயாக் கம்னியூஸ்டு கட்சி என்று மாறியது. மலாயாவைக் கம்னியூஸ்டு  நாடாக மாற்ற பல திட்டங்கள் போட்டது.

ஜப்பானிய ஆதிக்க எதிர்ப்புப் போராளிகள் மறைந்து இருந்து ஜப்பானியர்களைத் தாக்கி வந்தனர். அந்த மாதிரியான தாக்குதலில் பாப்பான், பூசிங் இடங்களில் இருந்த பல போராளிகள் காயம் அடைந்தனர்.

1943ல் பாப்பானில் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதி
காயம் அடைந்த போராளிகள் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப் பட்டனர். மருத்துவ விடுதிக்கு பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது.

மருத்துவ உதவிகள் தேவைப் பட்டு அந்தப் போராளிகளைக்
கொண்டு வரும் போது அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு நல்ல ஒரு மறைவிடமாக அமைந்தும் போனது.


2011ல் மருத்துவ விடுதிக்குப் பின்னால் இருக்கும் காய்கறித் தோட்டம்
அந்தப் போராளிகளுக்கு சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பி இருக்கிறார். சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

அதே நேரத்தில் தன்னுடைய விடுதியில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் சிபில் கார்த்திகேசு வைத்திருந்து இருக்கிறார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு வந்தார்.
செய்திகளை பாப்பான் மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்தும் வந்தார். 1943 ஆம் ஆண்டு வரை அவ்வாறு நடந்து வந்துள்ளது. சிபில் கார்த்திகேசு செய்தவை அனைத்தும் ஜப்பானியர்களுக்கு எதிரானச் செயல்கள்.

பாப்பான் பட்டன மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை Kempetei எனும் ஜப்பானிய இராணுவப் போலீசார் அறிய வந்தனர். அதனால் பாப்பான் பட்டன மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர்.
1943ல் ஜப்பானிய இராணுவப் போலீசார்
அந்த வகையில் சிபில் கார்த்திகேசு 1943 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப் பட்டார்.அப்போது ஜப்பானியர்களின் போலீஸ் தலைமையகயகம்  ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது.

அங்கே விசாரணை எனும் பேரில் கேள்விகள் மேல் கேள்வி. போராளிகளின் பெயர்களைச் சொன்னால் போதும். விட்டு விடுகிறோம். மன்னித்து விடுகிறோம் என்று ஜப்பானியர்கள் கெஞ்சினர்.
சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப் பட்ட பள்ளி - 2011ல் எடுத்த படம்
ஒன்றும் நடக்கவில்லை. சொன்னாமல் மட்டும் விட்டு விடுவார்களா. உண்மையைச் சொன்னால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப் படும்.

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் என்றால் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து
என்பதை சிபில் கார்த்திகேசு உணர்ந்தார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை. உணமையைச் சொல்லாமல் எல்லாவிதச் சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டார்.
1943லிருந்து 1945 வரை சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப்பட்ட இடம்
அங்கேதான் சித்ரவதை எனும் பேரில் பெரிய பெரிய அநியாயங்கள் நடந்து இருக்கின்றன. தன்னுடைய சுயசரிதையில் இவை எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். என்ன மாதிரியான அநியாயங்கள் என்று சொல்ல நமக்கு மனம் வரவில்லை. 

வெளிக்காயம் இல்லாத சித்ரவதைகள்.
தூங்க விடாமல் செய்தல்.

தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்து மூச்சு நின்று போகும் போது தலையை
வெளியே எடுத்தல்.

1943ல் ஜப்பானியர்கள் மலாயாவில் சித்ரவதை செய்யும் காட்சி
ஐஸ் கட்டியில் கட்டிப் போட்டு உட்கார வைத்தல்.

காலைக் கட்டித் தொங்க விடுதல்.

படுக்க வைத்து அவர் மீது ஐந்து பேர் ஏறி
மிதித்தல்.

பிறப்பு உறுப்பில் சவர்க்கார நீரைப் பாய்ச்சி மயக்கம் அடையச் செய்தல்.

இப்படி கணக்கு வழக்கு இல்லாத அநியாயங்கள்.

மிருகத் தனமாகச்
சித்ரவதைகள்.

ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளி தான் ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தலைமை இடமாக இருந்தது. பல சீனச் சமூகத் தலைவர்களும் விசாரணை என்ற பெயரில் சிரச் சேதம் செய்யப் பட்டனர். அதனால் ஆவிகள் உலவுவதாக கூட இன்று வரை வதந்திகள் உலவுகின்றன.

1943 - 1945 வரை ஜப்பானிய சித்ரவதைக்கு ஆளான வில்லியம் பிள்ளை கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசுவைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் கட்டி வைத்து அடித்தனர். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார். அவர்களுடைய மகன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை.

அவனையும் ஒரு மரத்தில் கட்டித்
தொங்க விட்டனர். சித்ரவதை செய்தனர். தாயாரின் முன்னாலேயே பயங்கரமான சித்ரவதைகள் செய்தனர்.
தவம் கார்த்திகேசு தன் ஆங்கிலேயக் கணவருடன்
கடைசியாக மகள் தவம் கார்த்திகேசுவையும் சிதரவதை செய்து இருக்கின்றனர். இவை அனைத்தையும் பார்த்தும் சிபில் கார்த்திகேசு மனம் தளரவில்லை. ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த மலாயா ஜப்பானிய எதிர்ப்பு போராளிகளைக் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை.

சார்ஜண்ட் எக்கியோ யோஷிமுரா என்பவன் தான் அவர்களைச் சித்ரவதை செய்வதில்
தலைவனாக இருந்தவன். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஒரு குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறது.

சிபில் கார்த்திகேசுவைக் கொடுமை படுத்திய எக்கியோ யோஷிமுரா
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சியும் தோல்வி கண்டது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் வந்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.

இரண்டாவது உலகப் போரில் சரண் அடையும் ஜப்பான்
அவர் பத்து காஜா சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அவர் பாப்பான் பட்டணத்திற்கு கொண்டு வரப் பட்டார். பாப்பான், பூசிங் நகர மக்கள் அனைவருமே திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்திற்கு விமானத்தின் மூலமாகக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் வழங்கப் பட்டது. அப்போதுதான் சிபில் கார்த்திகேசு No Dram of Mercy எனும் தன் சுயசரிதையையும் எழுதினார். அவரால் எழுத முடியவில்லை. மற்றவர் துணை கொண்டு எழுதினார்.

சிபில் கார்த்திகேசு எழுதிய சுயசரிதை
அப்போது சிபில் கார்த்திகேசுவை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப் பட்டார். இந்தச் சமயத்தில் தான் ஜப்பானின் ஹீரோஷிமா, நாகாசாக்கியில் அணுகுண்டுகள் போடப் பட்டன.

அங்கே சிபில் கார்த்திகேசுவிற்கு இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான கிங் ஜார்ஜ் வீர விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் கிங் ஜார்ஜ் வீர விருதை பெற்றது இல்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆங்கிலேய அரசின் சகல மரியாதைகள், மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் சிபில் கார்த்திகேசுவிற்கு வழங்கப் பட்டன.

கிங் ஜார்ஜ் விருது
இருந்தாலும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் வேதனைகளை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி தன்னுடைய 49வது வயதில் அவர் இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. பின்னர் அந்தப் பூதவுடல் லானார்க் சமாதியில் இருந்து 20.3.1949ல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. ஓர் ஆங்கில எழுத்தாளர் இப்படி எழுதி இருக்கிறார்.

ஸ்காட்லாந்தில் உள்ள லானார்க மருத்துவமனை.
இங்கே தான் சிபில் கார்த்திகேசு இறந்தார்.
”Her remains having arrived from Scotland by a ship to Penang and then travelled home to Ipoh 141 Brewster Road. One of the largest funeral processions ever seen in Perak took place. Sybil the Ipoh Heroine was treated in royal style and 100,000 people of Perak and from all parts of the country turned out to say goodbye.Even people came from Thailand,Vietnam,Borneo and Indonesia.”

ஸ்காட்லாந்தில் இருந்து அவருடைய உடல் பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப் பட்டது. அங்கு இருந்து பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.

ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும்
சிபில் கார்த்திகேசுவின் கல்லறை
அவருடைய உடல் ஈப்போ செயிண்ட் மைக்கல் மாதா கோயில் அருகில் இருக்கும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.அதை கொனாலி சாலை கிறிஸ்துவ மயானம் என்று இப்போது அழைக்கிறார்கள்.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து அந்தக் கணக்குச் சொல்லப் படுகிறது.

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். ஆகவே அவ்வளவு பெரிய
மக்கள் கூட்டம் கூடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது நடந்தது 1949 ஆம் ஆண்டில்.

மலேசிய மண்ணிலும் சரி, பேராக் மாநிலத்திலும் சரி இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் பிரபலமாகப் பேசப் படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள்.

சீனர்கள் பலர் தங்கள்
பிள்ளைகளுக்கு சிபில் என்று பெயர் வைத்து சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள். மலேசியத் தமிழர்களில் இப்போதைய இளைஞர்களுக்கு அவரைப் பற்றி தெரியாமல் இருக்கிறது.

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக இப்போது மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு பத்திரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர்.

ஒல்கா கார்த்திகேசு - சிபில் கார்த்திகேசுவின் மூத்த மகள்

சிபில் கார்த்திகேசுவிற்கு மூன்று பிள்ளைகள்:

1. வில்லியம் பிள்ளை (பிறப்பு 1918)
2. ஒல்கா கார்த்திகேசு (பிறப்பு 1921)
3. தவம் கார்த்திகேசு (பிறப்பு 1936)

கார்த்திகேசு தம்பதியினரின் முதல் மகன் மைக்கல் கார்த்திகேசு பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இறந்து போனார். அதனால் அவர்கள் வில்லியம் பிள்ளை எனும் சிறுவனை எடுத்து வளர்த்தனர். இவரும் ஜப்பானியர்களால் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு 30 வயதிற்கும் கூடுதலாக இருக்கும். வில்லியம் பிள்ளை, கோப்பேங் சிறையில் சித்ரவதை செய்யப் பட்டார்.
சிபில் கார்த்திகேசுவின் கல்லறையில்
அதற்கு பிறகு அவர் தைப்பிங் சிறைச் சாலைக்கு அனுப்பப் பட்டார். மலாயாவில் இருந்து ஜப்பானியர்கள் வெளியானதும் இவரும் விடுவிக்கப் பட்டார். பின்னர், இவர் நிங் பாய்க் சூ எனும் ஈப்போ சீனப் பெண்ணை மணந்தார். இவரைப் பற்றிய மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.

பெற்றோர்களையும் அண்ணன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு போனதும் தனது பாட்டியையும் கடைசி தங்கை தவம் கார்த்திகேசுவையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இரண்டாவது மகள் ஒல்கா கார்த்திகேசுவின் மீது விழுந்தது.

சிபில் கார்த்திகேசுவின் படுக்கை அறை
தவம் கார்த்திகேசுவிற்கு அப்போது ஏழு வயது. அந்தச் சிறுமியையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை. அவளையும் பிடித்துக் கொண்டு போய் சித்ரவதை செய்துள்ளனர். அந்த வேதனையையும் தாங்க வேண்டிய நிலைமை ஓல்காவிற்கு ஏற்பட்டது.

ஒல்கா கார்த்திகேசு இன்னும் ஈப்போவில்
வாழ்கிறார். இவருக்கு வயது 90. இவருக்கு ஈப்போ சீனர்களும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். (கடைசி தகவல்: 2009)

1952 ஆம் ஆண்டு சிபில் கார்த்திகேசுவின் கடைசி மகள் தவம் கார்த்திகேசுவிற்கு மருத்துவம் படிக்க இங்கிலாந்து அரசு நிதியுதவி செய்தது. அவர் லண்டன் சென்று இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு படிப்பை நிறுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஊர் சுற்றி விட்டு 1957 ஆம் ஆண்டு மலேசியா திரும்பினார்.

பாப்பான் பட்டணத்தில் இருக்கும்
சிபில் கார்த்திகேசு அரும் காட்சியகம்
இங்கிலாந்தில் இருக்கும் போது அங்கேயே தவம் கார்த்திகேசு ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார். நாடு திரும்பிய தவம் கார்த்திகேசு தன் அக்காள் ஒல்கா கார்த்திகேசுவை இங்கிலாந்திற்கு வரும்படி அழைத்தார்.

ஒல்கா மறுத்து விட்டார். தன் தந்தை கார்த்திகேசுவின்
கடைசி காலம் வரை அவருடனே இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். சொன்னபடி தன் தந்தையின் கடைசி கால்ம் வரை இருந்தார். 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய 81 வது வயதில் டாக்டர் கார்த்திகேசு காலமானார். இவருடைய உடல் ஈப்போ தம்பூன் எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய
மற்றொரு நூல்

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய நூல்கள்:

1.No Dram of Mercy, Neville Spearman, 1954; Oxford University Press.

2.Faces of Courage: A Revealing Historical Appreciation of Colonial Malaya's Legendary Kathigasu

Family by Norma Miraflor & Ian Ward

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது.

பின்னர்
மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி நிலையம் Apa Dosaku? எனும் தலைப்பில் 10 வாரங்களுக்கு சிபில் கார்த்திகேசு பற்றிய நாடகத் தொடரை ஒளிபரப்பு செய்தது.

Apa Dosaku தொலைக்காட்சி நாடகத் தொடர்

அண்மையில் அவர் வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நானும் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள்.

கண்களைக் குளமாக்கும் சிபில்
கார்த்திகேசுவின் பாப்பான் இல்லம்
அவர்களின் அத்தனை பேரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்த என் கண்களும் குளமாகிப் போயின. என் மனதில் ஓர் இறுக்கம். அவர் பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். சிபில் கார்த்திகேசு அந்தப் பொருட்களில் இருந்து புன்னகை செய்து கொண்டு இருந்தார். இந்தக் கட்டுரையை எழுதும் போது என் மனம் ரொம்பவும் வலிக்கின்றது. சத்தம் போடாமல் அழவும் செய்கின்றது.

(இந்தக் கட்டுரை மலேசிய நண்பன் நாளிதழில் விரைவில் பிரசுரம் ஆகிறது)