தோம்... கருவில் இருந்தோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோம்... கருவில் இருந்தோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஜூன் 2016

தோம்... கருவில் இருந்தோம்

தோம்... கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன தூக்கம்
என் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோனலையே...
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான் கூட மச்சாவதாரம் தான்
(தோம் கருவில் இருந்தோம்...)

அலைகளை அலைகளை பிடித்துக் கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக் கொண்டு
சௌக்கியம் அடைவது நியாமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜ திரவம்
கண்ணீர் கூட போதையின் மறு வடிவம்
வலி எது வாழ்க்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவும் இல்லை
கற்பனை வருவது நின்றுவிடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உயிரே தின்று விடும்

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரைதான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையில் பிடிமானம் வேறு இல்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேறு இல்லை
திராட்சை தின்பவன் புத்திசாலியா?
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறது
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே

தோம்... கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோனலையே...