பக்காத்தான் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்காத்தான் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 அக்டோபர் 2019

பக்காத்தான் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம்

தமிழ் மலர் - 06.10.2019

முன்பைவிட மலேசியர்கள் அதிகமான கருத்து சுதந்திரம் பெற்று இருக்கிறார்கள் என்று சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் கூறினார். என்னையும் அரசாங்கத்தையும் பலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

அந்த நிலையிலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சுதந்திர காலத்திலிருந்து இப்படி ஒன்று நடந்தது இல்லை.

ஆட்சி மாற்றம் நடந்து கடந்த 16 மாதங்களில் மக்களுக்கு இந்தக் கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்தையே விமர்சிக்கிறார்கள்.

யாரையும் நாம் தண்டிக்கவில்லை என்று இங்கு நடைபெற்ற ஒரு சட்ட மாநாட்டை முடித்து வைத்த போது அவர் பேசினார்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியப் பொதுத் துறைகளில் ஏராளமான மாற்றங்களும் மறுமலர்ச்சிகளும் வந்து உள்ளன. அதில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. ஆனால் நஜிப் காலத்தில் இது இல்லை.

பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்கள் நிந்தனை சட்டத்தால் குற்றம் சாட்டப் பட்டார்கள் என்றார் அவர்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Moon Noom   நடப்பவை யாவும் நன்மைக்கே

Sathya Raman மலேசியர்களுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது கருத்து சுதந்திரம் அதிகம் என்கிறார் சட்டத் துறை தலைவர். இந்த வாய் பந்தல்களுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை. இந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு தானே இந்நாட்டு அரசியல் வாதிகளும் செய்யக் கூடாத அட்டூழியத்தை எல்லாம் செய்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு... தேர்தல் முடிந்து ஒரு பேச்சு... இந்த அழகான, அமைதியான நாட்டை பல ஏவல் வேலைகளைச் செய்து குட்டிசுவராய் ஆக்கிக் கொண்டிருக்கும் தரம் கெட்ட அதிகாரத்தில் உள்ளவர்களின் சுதந்திரத்தைத் தான் முதலில் கண்டித்துக் கட்டுப்பாடுகளை விதிக்கணும் இந்தச் சட்டத்துறை தலைவர்.


Muthukrishnan Ipoh நல்ல தெளிவான கருத்துகள்... >>> தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தல் முடிந்து ஒரு பேச்சு >>> முற்றிலும் உண்மைங்க... நன்றி... தொடர்ந்து பதிவு செய்யுங்கள் சகோதரி... 
Perry Muthan   AG is talking politics.. Attacking the former government!

Manickam Nadeson    AG loyal to his boss.
 
Ravi Purushothaman   நம்ம பிரதமர் ரொம்ப தெளிவானவரு!
Varusai Omar   AG must angkat tong kat Bossnylahh! Duap un Mallu.apatak lagi.?
Malabari ngan Mallu abang adik loh!
 
அதுக்குத் தானே முத்து... முன்பே பதிவிட்டேன்... "பாம்புக்கும் மீனுக்கும் கதையை...!
 
Appalasamy Jetakiah தலைவர்களைச் சிறையில் வைத்த கலாச்சாரத்தை மகாதீர்தான் தொடக்கி வைத்தார்.

Muthukrishnan Ipoh அந்த வகையில் அன்வார் அவர்கள் 20 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறார்...

Sathya Raman Muthukrishnan Ipoh  இன்னும் அவர் முழுமையான சுதந்திரத்தை பெறவில்லை என்றே தோன்றுகிறது சார் .