மலாயா ஒரு தமிழ்ச்சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயா ஒரு தமிழ்ச்சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூன் 2017

மலாயா ஒரு தமிழ்ச்சொல்

மலாயா எனும் பெயர் எப்படி தோன்றி இருக்கலாம் என்பதை வரலாற்றுச் ான்றுகின் வியாகப் பார்க்கப் போகிறோம். வரலாற்றுப் படிவங்களில் இருந்து சான்றுகள் தொகுக்கப் படுகின்றன. 

மலாக்கா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னாலேயே மலாயா எனும் பெயர் வரலாற்றில் தடம் பதித்து விட்டது. 

இந்து சமயத்தில் 18 முக்கியமான புராணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வாயு புராணம். மகாபாரத்தின் எழுத்துச் சுவடிகளில் அந்த வாயு புராணம் எழுதப்பட்டு இருக்கிறது. வாயுபுராணம் 24,000 சுலோகங்களைக் கொண்டது.

அந்த வாயு புராணத்தில் மலாயாத் தீபம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது (Malayadvipa). மலாயாத் தீபம் என்றால் மலைகள் சார்ந்த பெருநிலம் என்று பொருள். 



(முதல் சான்று: Pande, Govind Chandra (2005). India's Interaction with Southeast Asia, Vol. 1, Part 3. பக்கம். 266.) 


(இரண்டாம் சான்று: Mukerjee, Radhakamal (1984). The culture and art of India. பக்கம். 212. 


(மூன்றாம் சான்று: Sarkar, Himansu Bhusan (1970). Some contributions of India to the ancient civilisation of Indonesia and Malaysia. பக்கம். 8.)

அடுத்து பிரகதீஸ்வரர் கோயில் எனப்படும் தஞ்சைப் பெரிய கோயிலின் தென் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் மலாயாவை மலையூர் (Malaiur) என்று செதுக்கி இருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செதுக்கப்பட்ட கல்வெட்டு. 



(முதல் சான்று: Langer, William Leonard (1973). An Encyclopedia of World History: Ancient, Medieval, and Modern, Chronologically Arranged. பக்கம். 362.) 



(இரண்டாம் சான்று: Satchidananda Murthy; S., Sankaranarayanan (2002). Life, thought, and culture in India, c. AD 300-1000. பக்கம். 121.)

அடுத்து கி.பி. 100ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பெத்தோலமி (Claudius Ptolemy). இவர் ஓர் அறிவியலாளர். உலகம் பார்த்த மாபெரும் கிரேக்க அறிஞர். ஒரு கணித மேதை. ஒரு வானியல் வல்லுநர். ஒரு புவியியலார். ஒரு சோதிடர்.

இவர் எழுதிய தங்கத் தீபகற்பம் எனும் நூலில் மலாயாவை மலாயு கோலன் (Maleu-kolon) என்று எழுதி இருக்கிறார்.

மலாயு கோலன் எனும் சொல் மலாயா கோளம் (malayakolam) அல்லது மலாய்க்கூரம் (malaikurram) எனும் சமஸ்கிருதச் சொற்களில் இருந்து மருவி வந்தச் சொற்களாகும்.

மலாயா எனும் சொல் மலை எனும் சொல்லில் இருந்து உருவானதால் மலைக் கோளம் என்பது தான் மலாயா கோளம் என்று மாறி இருக்கலாம். இது என்னுடைய கருத்து. 




(சான்று: Gerini, Gerolamo Emilio (1974). Researches on Ptolemy's geography of eastern Asia (further India and Indo-Malay archipelago. பக்கம். 101.)
 

கோளம், கூரம் எனும் இரு சொற்களுமே சமஸ்கிருதச் சொற்களாகும். கோளம் என்பது ஒரு பெயர்ச் சொல். இங்கே முப்பரிமாண வடிவம் எனும் பொருள் கொண்டது.

அடுத்து சீனாவின் யுவான் அரசப் பரம்பரையின் காலவரிசை வரலாறு. அதில் மலாயாவை மலையூர் (Ma-li-yu-er) என்று சொல்லி இருக்கிறார்கள். 




(முதலாம் சான்று: http://www.guoxue.com/shibu/24shi/yuanshi/yuas_210.htm). 



(இரண்டாம் சான்று: Hall, Daniel George Edward (1981). History of South East Asia. பக்கம் 190.)

அடுத்து வருபவர் மார்க்கோ போலோ. உலக வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். கி.பி. 1570களில் கால் நடையாகவே ஆசிய நாடுகளைச் சுற்றி வந்தவர். அவர் எழுதிய பயண நூலில் மலையூர் (Malauir) எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்.

யுவான் அரசப் பரம்பரையின் காலவரிசை வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட அதே சொல்லைத் தான் மார்க்கோ போலோவும் பயன்படுத்தி இருக்கிறார். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். 




(முதலாம் சான்று: Cordier, Henri (2009). Ser Marco Polo. பக்கம். 105.) 



(இரண்டாம் சான்று: Wright, Thomas (2004). The travels of Marco Polo, the Venetian. பக்கங்கள். 364–365.)

ஆக மலாயா எனும் சொல் மலை எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானது என்பதைச் சான்றுகளுடன் முன்வைக்கிறேன். மலாயா என்பது ஒரு தமிழ்ச்சொல். தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு மருவியச் சொல்.

அந்த வகையில் மலாயா எனும் சொல் மலை + ஆயம் எனும் தமிழ்ச் சொற்களில் இருந்து உருவான ஒரு கூட்டுச்சொல் என்று பாரபட்சம் இல்லாமல் சொல்லலாம். 


மலை என்றால் ஆயிரம் அடிகளுக்கும் மேலே உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. ஆயம் என்றால் கூட்டம் அல்லது திரள்.

இதற்கு உள்நாட்டு வரலாற்று அறிஞர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். அங்கோர் வாட், பொரபுடுர், பூஜாங் பூர்வீகம் போன்றவை எல்லாம் அவர்களின் பூர்வீகச் சொத்து என்று பரப்புரை செய்ின்றர். 


ிரச்சினை இல்லை. இரந்தாலும் இந்த வரலாற்றுச் சான்றுகள் அவர்குக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்ும் என்று நம்ாம். அுவே இந்த ஆய்வாளின் பிவான ிர்பார்ப்ப. நன்றி.

(ஆய்வு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)