1919 - 2020 வைரஸ் ஆண்டுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1919 - 2020 வைரஸ் ஆண்டுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஏப்ரல் 2020

1919 - 2020 வைரஸ் ஆண்டுகள்

1919 ஸ்பானிஷ் வைரஸ் - 2020 கொரோனா வைரஸ்

1919 - 2020. இந்த இரண்டு ஆண்டுகளின் எண்களைப் பாருங்கள். 1919-ஆம் ஆண்டில் 19 - 19 எனும் எண்கள் வருகின்றன. 2020-ஆம் ஆண்டில்  20 - 20 எனும் எண்கள் வருகின்றன. 

 

அந்த இரண்டு ஆண்டுகளிலும்; அந்த இரண்டு எண்களிலும் ஏதோ ஒரு மர்மமான ஒற்றுமை இருப்பது தெரிகிறது அல்லவா. கொஞ்சம் ஆழமாக உற்றுப் பாருங்கள். சற்று அச்சமாகவும் இருக்கிறது.

ஓர் ஆண்டின் முதல் 2 எண்களும்; அதே ஆண்டின் இரண்டாவது 2 எண்களும் பொருந்தி வருவது, ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். அது ஓர் அதிசயமான நிகழ்ச்சி.

அந்த வகையில் இந்த 2020-ஆம் ஆண்டில் உயிருடன் இருப்பதும் ஒரு சிறப்பு தான். இந்த மாதிரி அடுத்து 2121-ஆம் ஆண்டில் தான் வரும்.

இப்போது இருப்பவர்களில் அப்போது அந்த 2121-ஆம் ஆண்டில் வெகு சிலரே உயிர் வாழும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் என்றால் அதற்கு 100 வயதைத் தாண்டி இருக்க வேண்டும்.
 

இந்த 1919 - 2020 இரண்டு ஆண்டுகளிலும் உலகம் ஒரு புதுமையான வைரஸால் தாக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல. மிகவும் கொடூரமாகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 1919-ஆம் ஆண்டின் கொடுமையில் இருந்து மீண்டு வருவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டது.

1919-ஆம் ஆண்டில் (19-19) ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu) உலகத்தையே ஆட்டிப் படைத்தது. உலகத்தின் 50 மில்லியன் மக்களைக் கொன்று போட்டது. 500 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துப் போட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மலாயாவில் 34,644 பேரைக் கூறு போட்டது.

தமிழ்நாட்டில் இருந்து வந்து மலாயா இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த 6000 தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை. அதிகமான தமிழர்கள் பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களில் காலமானார்கள். நிபோங் திபால் பகுதியில் அதிகமான இழப்புகள்.
 

பத்து காஜாவில் கெல்லிஸ் காசல் எனும் மர்ம மாளிகையைக் கட்டிக் கொண்டு இருந்த தமிழர்களில் ஏறக்குறைய 100 பேர் பலியானார்கள். மலாயா தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு சோகமான காலச் சுவடு.

இப்போது 2020 ஆம் ஆண்டில் (20-20) கொரோனா வைரஸ் என்கிற மற்றொரு புதிய வைரஸ். உலகத்தைச் சீர்குலைத்து வருகிறது.

மனித வரலாற்றில் மாபெரும் போர்கள். மதிப்புகள் சொல்ல முடியாத மனித இழப்புகள். அவை அனைத்தும் கோடுகள் போட்டுச் சொல்ல முடியாத கொடுமையான இழப்புகள்.

போர்களினால் ஏற்பட்ட இழப்புகளைவிட கொடிய நோய்களினால் ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம். 
 

மகா மோசமான பல தொற்று நோய்கள் உலக மக்களை ஆட்டிப் படைத்து வதைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்பானிய காய்ச்சல்.

(ஸ்பானிஷ் காய்ச்சலால் மறைந்து போன மலாயாத் தமிழர்களின் வரலாற்றை வேறு ஒரு கட்டுரையில் பதிவு செய்கிறேன்.)

1919-ஆம் ஆண்டில் H1N1 எனும் வைரஸ் உலகத்தை ஆட்டிப் படைத்தது. இந்த வைரஸ் எங்கே இருந்து தன் பயணத்தைத் தொடக்கியது என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.

ஆனால் ஸ்பெயின் நாட்டு அரசக் குடும்பத்தை அதிகம் பாதித்ததால் அதற்கு ஸ்பானிஷ் காய்ச்சல் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்போது 2020 கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது.

மனிதர்களைத் தவிர மற்றதை எல்லாம் சாப்பிடும் சாப்பாட்டு முறையினால் பல்லாயிரம் உயிர்களைப் பறி போனது. இதில் இருந்து ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் சைவ உணவர்களாக மாறும் வரையில் அசைவம் அசைந்து கொடுக்காது. அதுவே மனுக்குலத்திற்கு ஒரு சொல். ஒரு பாடம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.04.2020


பேஸ்புக் பதிவுகள்

M R Tanasegaran Rengasamy 1919-ல் ஸ்பானிஷ் புளு, இப்போது 2020-இல் சீனா ஃபுளு. 1940-களில் இரண்டாம் உலகப் போரின் போது மலேரியா என்ற நோய் வந்ததே... அந்த நோயின் பிறப்பிடம்... அப்பொழுதும் சயாம் மரண ரயில் பாதை அமைக்க நம்மவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சென்று கொன்றான் சப்பான்காரன். உலகப் பொருளாதாரப் போட்டியில் வெற்றி பெற நோயை உருவாக்கிப் பிணத்தின் மேலே பணம் பண்ணுகிறார்கள்... பாவிகள்.

Muthukrishnan Ipoh கொரோனா வைரஸ்... ஓர் ஆய்வுக் கூடத்தில் இருந்ததாகவும் ஒரு வதந்தி...

Sathya Raman >>> M R Tanasegaran Rengasamy இதே முகநூல் பகுதியில் இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் என்னவெல்லாம், எப்படியெல்லாம், யாரால், ஏன், எதற்காக என்பதற்கு எல்லாம் அவ்வப்போது மிக தெளிவாக சில அன்பர்கள் விளக்கி, விபரமாக பல பதிவுகளை செய்து வருகிறார்கள்.

சுவாரசியமாகவும், நம்பும் படியாகவும் இருக்கிறது. நாம் வாழும் இந்த பூமியில் இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கிறார்களா என்ற பயமும் ஏற்படவே செய்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். கிருஷ்ணன் சாரின் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துவிட்டு மனம் பற்றி எரிவதைப் போல் அந்தப் பதிவுகளும் பதற வைக்கும்... படபடப்பை ஏற்படுத்தும். 😥

Sathya Raman >>> Muthukrishnan Ipoh ஆளைக் கொள்ளும் வீரியம் நிறைந்த வைரஸ் என்று தெரிந்திருந்தும் அவற்றை உருவாக்கி, உற்பத்தி செய்தவர்களை இந்த உலகம் மன்னிக்கவே கூடாது சார்.

Muthukrishnan Ipoh அமெரிக்காவின் வல்லரசு ஆளுமையைத் தகர்ப்பதற்கு எடுக்கப்பட்ட உயிரியல் போரின் அணுகுமுறையாக இருக்கலாம் என்று ஒரு சந்தேகம் உள்ளது... உறுதிப்படுத்த முடியவில்லை... உண்மை ஒருநாள் தெரிய வரலாம்...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh பல சந்தேகங்களுக்கு விரைவில் வெட்ட வெளிச்சமாகி பல உயிர்களை காவு வாங்கி, உயிரோடு உள்ளவர்களை மன உளைச்சலுக்கு காரணமானவர்களை வீதிக்கு கொண்டு வர வேண்டும். இம்முறை எவ்வித விட்டுக் கொடுத்தலுக்கும் சம்பந்தப் பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கவே கூடாது.

Muthukrishnan Ipoh உண்மை தெரிய வந்தாலும் மூடி மறைத்து விடுவார்கள்... மனிதர்களை ஆயிரக் கணக்கில் பலி கொடுத்தாலும்... ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் பகைத்துக் கொள்ள அவ்வலவு எளிதில் முன் வராது.

பல முறை யோசித்த பின்னர்தான் முடிவு எடுப்பார்கள். பகைத்துக் கொண்டால் ஏற்படக் கூடிய பொருளாதார பின்விளைவுகளையும் முதன்மைப் படுத்திப் பார்ப்பார்கள். முடிந்த வரையில் தட்டிக் கழிக்கவே முயற்சி செய்வார்கள்.

வுஹானில் உள்ள Wuhan Virology Institute ஆய்வுக் கழகத்தில் Charles Lieber எனும் அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அந்த ஆய்வுக் கழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அங்கே ’நானோ உயிரியல் ஆய்வுப் பிரிவு’ உருவாக்குவதற்கு மூல காரணமாக இருந்து இருக்கிறார்.

அவருக்கு சீனா அரசாங்கம் மில்லியன் கணக்கில் டாலர் வெகுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் அவர் அமெரிக்காவிடம் கணக்கு காட்டவில்லை.

ஏமாற்ற முயற்சி செய்ததாக அவர் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இப்படி நிறையவே தில்லாலங்கடி வேலைகள் அனைத்துலக அளவில் நடைபெற்று வருகின்றன. சீனா மட்டும் அல்ல. அமெரிக்காவும் பயங்கர கில்லாடி.

சீனா நாடு உலகத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் செய்து வருகிறது. 1990-ஆம் ஆண்டுகளிலேயே காய்கள் நகர்த்தப்பட்டு விட்டன.

கொரோனா போன்ற திடீர் தாக்குதல்கள் எல்லாம், சீனாவைப் பொறுத்த வரையில் சும்மா சாதாரணமான கொசுக்கடிகள். அவர்கள் போய்க் கொண்டே தான் இருப்பார்கள். உலக அளவில் மேலும் மேலும் பல குழப்படிகளை எதிர்பார்க்கலாம். சீனாவில் இருந்து அல்ல... வல்லரசுப் போட்டியில் அணிவகுத்து நிற்கும் நாடுகளிடம் இருந்து...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh இருக்கட்டும் சார். எப்பேர்ப்பட்ட கொம்பன் வேண்டுமானாலும் ஆகட்டும். அத்தனைக்கும் காலனிடம் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். கூடவே இந்த இயற்கையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும்மா என்ன? இனி வரும் காலங்கள் இந்த மனிதக் குலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கே சுவரில் எரிந்த பந்து போல் திரும்ப பெறப் போவது உறுதி. அது நல்லதோ, கெட்டதோ ???? ஆடுகிற ஆட்டம் எல்லாம் அம்பலத்தில் மட்டும் ஏறுவது இல்லை. அந்தரங்கத்திலும் தொங்க விடப்பட்டே தீரும்...

Malathi Nair U are really great anna... very knowledgeble person to get all these information.God bless u...

Muthukrishnan Ipoh வாழ்த்துகளுக்கு நன்றி... மகிழ்ச்சி... தங்களுக்கும் வாழ்த்துகள்...

Mageswary Muthiah இனிய காலை வணக்கம்

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Krishna Ram நல்ல தகவல்...நன்றி ஐயா...

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Parimala Muniyandy இனிய வணக்கம் அண்ணா🙏

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Balamurugan Balu வணக்கம் ஐயா!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

VT Rajan இனிய காலை வணக்கம் ஐயா... 🙏

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்

Selvi Sugumaran Nandri

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்...

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Sundaram Natarajan இனிய காலை வணக்கம் அண்ணா

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Palar Thangamarimuthu கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை நடப்பு நூற்றாண்டில் கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள பேரிழப்புகளை ஒப்பீடு செய்து அடுத்த நூற்றாண்டு எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன்... எதிர் கொள்ள வேண்டியிருக்கும் நிகழ்வுகளுக்காக நோய் நாடி நாள் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவர் கூற்றை வழிமொழிகிறேன்

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்... மிக்க நன்றி ஐயா...

Palar Thangamarimuthu நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்... தட்டச்சுப் பிழையைத் திருத்தம் செய்து வாசிக்கும் படி வேண்டுகிறேன்... தட்டச்சு பிழை பொருத்தருள்க...

KR Batumalai Robert இனிய காலை வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணா.

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Balamurugan Bala நல்ல தகவல்...நன்றி ஐயா...

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Jainthee Karuppayah 2121... சரியான கணிப்பு... முகநூல் இருக்குமா? அப்போதும் பேசலாம்... Super... அருமை

Muthukrishnan Ipoh வணக்கம்... இனிய வாழ்த்துகள்...