சம் தம் மர்ம ஒலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சம் தம் மர்ம ஒலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஏப்ரல் 2019

சம் தம் மர்ம ஒலி

உலகம் முழுவதும் உள்ள பாலைவனங்களில் விநோதமான ஒலிகள் அடிக்கடி கேட்பது உண்டு.  பகலிலும் கேட்கும். இரவிலும் கேட்கும். அது காற்றின் ஒலி அல்ல. 


கடற்கரைகளிலும் அப்படிப்பட்ட விவரிக்க முடியாத விநோதமான ஒலிகள் கேட்கும். அவை கடல் அலைகளின் ஒலிகள் அல்ல. உயிர் உள்ள பொருட்கள் அழைப்பது போன்ற விசித்திரமான ஒலிகள். சமயங்களில் மயிர் கூசும் ஒலிகள். பயம் வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

மீன்கள் பாடுகின்றன; மணல் பாடுகின்றது என்றும் மீனவர்கள் கதை சொல்வார்கள். கடல் அலைகள் உறுமுகிறது; விசில் அடிக்கிறது என்றும் பயமுறுத்துவார்கள். அந்த மாதிரியான அதிசய ஒலிகள் கேட்பது முற்றிலும் உண்மை.

அதற்கு என்ன காரணம். ஆராய்ச்சி பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த அதிசயமான ஒலிகள் மட்டும் நின்ற பாடு இல்லை.


பாலைவனங்களில் கேட்கும் விசில் ஒலி, முனகல் ஒலி, உறுமல் ஒலி போன்றவற்றிற்கு மூல காரணம் மணல்திட்டுகளின் அதிர்வுகள் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மணலின் ஈரப் பதமும் காற்றின் வேகமும் அந்த ஒலிகளுக்குக் காரணம் என்று சொல்லப் படுவதும் உண்டு.

பாலைவனங்களில் வாழும் ஆப்பிரிக்க மக்கள் அந்த மர்ம ஒலிகளைப் பற்றி ஆயிரக் கணக்கான கதைகள் சொல்கிறார்கள்.

எகிப்தில் மெம்னோன் கொலோசி (Memnon colossi) எனும் பிருமாண்டமான சிலைகள் உள்ளன. இவை 3400 ஆண்டுகள் பழைமையானவை. இவற்றில் மூன்றாவது *அமன்ஹோடெப்* (Amenhotep III) எனும் அரசனின் இரு சிலைகள்.

இந்த அரசன் ஒரு சமண அரசன். புகழ்பெற்ற அரசன். இந்த அரசனின் சிலைகள் 36 அடி உயரம் கொண்டவை. ஒவ்வொரு சிலையும் 250 டன் எடை கொண்டவை.

இந்தச் சிலைகளில் இருந்து இரவு நேரங்களில் மர்மமான ஒலிகள் கேட்குமாம். இன்றும் கேட்கின்றன. இந்த மனிதன் (அரசன்) இறந்து 3400 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசனின் குரல் இன்றும் கேட்பதாகப் பாலைவன மக்கள் சொல்கிறார்கள். என்னே அதிசயம்.

அந்த ஒலியில் சம் தம்... சம் தம்... எனும் குரல் ஒலியும் வருமாம். அப்படித்தான் பாலைவன மக்கள் சொல்கிறார்கள். உண்மையா என்று என்னைக் கேட்க வேண்டாம். அவர்களைத் தான் கேட்க வேண்டும்.

உண்மையில் *சம் தம்* என்பது பாரசீகச் சொற்கள். சமஸ்கிருதத்தில் இருந்து புலம் பெயர்ந்த சொற்கள். சம் என்றால் ஆசையை அறவே ஒழித்தல். தம் என்றால் சுயக் கட்டுப்பாடு.  அதாவது தன்னடக்கம். 


அதனால் அமன்ஹோடெப் அரசனின் ஒரு சிலைக்கு *சம்* என்றும் இன்னொரு சிலைக்கு *தம்* என்றும் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தச் *சம் தம்* சொற்களில் இருந்து உருவானதே *சலாமாத்* எனும் அரபுச் சொல். அதில் இருந்து மருவி இந்தப் பக்கம் வந்தது தான் *Selamat* எனும் மலாய்ச் சொல்.

எது எப்படியோ இந்தச் *செலாமாட்* எனும் மலாய்ச் சொல்லில் ஒரு மர்மக் குரல் இருப்பதையும் இன்றைக்குத் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். நாளைய தினம் வேறு ஒரு புதிய தகவல்.