தெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 செப்டம்பர் 2017

தெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும்

கே: தெள்ளுப்பூச்சி ஒரு சிலரை மட்டும் தாக்கும் என்பது உண்மையா?

ப: உண்மை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடலில் ஒவ்வொரு விதமான ரசாயன கூட்டமைப்பு உள்ளது. மனிதர்களின் தோலின் சுரப்பு நீர் (Skin secretions); வாயு உமிழ்வு (gas emissions) ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்.


எந்த ஒரு மனிதரின் ரசாயன கூட்டமைப்பு சரியாக அமைகிறதோ அந்த மனிதரை மட்டும் தான் தெள்ளுப்பூச்சிகள் தேடிப் போய் ஒட்டிக் கொள்ளும். அவரே அந்தப் பூச்சிகளுக்கு விருந்தாளி ஆகின்றார்.

ஒருவரின் உடலில் அதிகப்படியான கரியமில வாயு வெளியானால் தெள்ளுப்பூச்சிகள் அவரைத் தேடி வரும்.
 
கே: தெள்ளுப்பூச்சிகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன?

ப: தெள்ளுப்பூச்சிகள் சமிக்ஞை மூலமாகத் தொடர்பு கொள்கின்றன. ஒரு பொருத்தமான இடம் கிடைத்ததும் அது சமிக்ஞை ஒலியை வெளியாக்கும். அந்த ஒலி வரும் இடத்தை நோக்கி மற்ற பூச்சிகள் படை எடுக்கும்.

ஆகவே சமிக்ஞை ஒரு மனிதரின் உடல்பகுதியில் இருந்து வந்தால் அந்த மனிதரை மட்டுமே மற்ற பூச்சிகள் தேடிச் செல்லும். அதனால் உங்கள் அருகாமையில் இருக்கும் மற்றவர்களை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்வது இல்லை.
(Fleas send signals to other fleas, alerting them of the presence of a warm-blooded meal.)

(http://fleascience.com/flea-encyclopedia/life-cycle-of-fleas/adult-fleas/what-attracts-fleas/)

1. ஈரப்பசை இல்லாமல் 3 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை உயிர் வாழும்.

2. இருந்த இடத்தில் இருந்து படுக்கை நிலையில் (horizontal) 11 அங்குலம் தாண்டும். செங்குத்தாக (vertical) 6 அங்குலம் குதிக்கும்.

3. புவியீர்ப்பு சக்தியின் (g force) 7 மடங்கு சக்தியை மனிதனால் தாங்க முடியும். ஆனால் தெள்ளுப்பூச்சி 300 புவியீர்ப்பு சக்தியைத் தாங்க முடியும்.

4. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த தளவாடப் பொருட்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு ஈரப்பசை படாமல் இருக்க வேண்டும்.

5. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த துணிகளைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடங்களுக்குப் போட்டு எடுத்து உலற வைக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பூச்சிகளைக் கொல்ல முடியும்.

6. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு சுத்தம் செய்தால் பூச்சி இறந்து போகாது. துவைக்கப்பட்ட துணி உலர்ந்ததும் மீண்டும் அந்தப் பூச்சி இயக்கம் பெறும்.

தெள்ளுப்பூச்சி வாழ்க்கைச் சுழற்சி

தெள்ளுப்பூச்சியின் வாழ்க்கையின் 4 கட்டங்கள்
முட்டை (Egg), முட்டைப்புழு (Larva), கூட்டுப்புழு (Pupa), முழுவளர்ச்சி (Adult).

அதன் வாழ்க்கைச் சுழற்சி 20 - 35 நாட்கள். தட்பவெப்ப நிலை, ஈரப்ப்சை பொருத்து அதன் இனப்பெருக்கம் அமைகின்றது. 85 பாகை வெப்பச் சூழல்; 85 விழுக்காடு ஈர்ப்பசை மிகப் பொருத்தமாக அமைகின்றன. ஈரப்பசை இல்லை என்றால் தெள்ளுப்பூசியினால் இயங்க முடியாது. செயலற்ற நிலையில் இருக்கும். ஒரு வருட காலம் வரையிலும் அமைதியாக உறங்கும்.

ஓர் அறையின் தட்பவெப்ப நிலை 55 பாகைக்கும் கீழே குறைந்து போனால் தெல்ளுப்பூசிகளின் இயக்கம் முடங்கிப் போகும். தெள்ளுப்பூச்சியின் இனப்பெருக்கம் வீட்டின் உள்ளே தான் நடைபெறும். வீட்டிற்கு வெளியே அதிக வெப்பம் என்பதால் அங்கே இனப்பெருக்கம் மிகக் குறைவு.

தெள்ளுப்பூச்சி முட்டை
 
ஒவ்வொரு தெள்ளுப்பூச்சியும் 2 - 14 முட்டைகள் இடும். மனித முடிகள் இருக்கும் இடங்களில் முட்டை இடும். மெத்தை, கம்பளம், தரை விரிப்புக் கம்பளம், பாய் போன்றவை அவை முட்டையிடும் இடங்கள்.

தெள்ளுப்பூச்சி முட்டைப்புழு

14 நாட்களில் முட்டையில் இருந்து முட்டைப்புழு ஆகும்

தடுக்கும் முறைகள்

வெற்றிடத் தூய்மிப்பு (vacuum cleaner) கொண்டு தடுக்கலாம். ஒவ்வோரு நாளும் தூய்மை செய்ய வேண்டும். மருந்துநீர்த் தெளிப்பான் மூலமாக பூச்சிகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.