தியான் சுவா - சிறையில் பகவத் கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியான் சுவா - சிறையில் பகவத் கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 செப்டம்பர் 2017

தியான் சுவா - சிறையில் பகவத் கீதை




தியான் சுவா என்பவர் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். பி.கே.ஆ.ர் கட்சியின் உதவித் தலைவர். பற்பல போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர். பற்பல விசாரணைகளுக்கு உள்ளானவர். இருந்தாலும் இப்போதுதான் முதன் முறையாக ஒரு மாத சிறைவாசம் பெற்றார்.

காஜாங் சிறையில் அவர் தனது அடுத்த ஒரு மாத காலத்தைக் கழிக்கும் போது அங்கே பகவத் கீதையையும், சமஸ்கிருத மொழியையும் படிக்கப் போவதாகச் சொல்கிறார். பகவத் கீதையின் வழி இந்து மதம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றார்.


அவருக்கு அந்தப் புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றை அவர் சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதி கோரி இருக்கிறார். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. 

ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு பெர்சே - 3 பேரணியின் போது போலீஸ் பயிற்சி மையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டதை தியான் சுவா ஏற்க மறுத்தார். அதனால்  கைது செய்யப் பட்டார். 


அவர் மீது வழக்கு தொடுக்கப் பட்டது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு 1000 ரிங்கிட் அபராதமும் 1 மாத சிறைத் தண்டனையும் வழங்கியது.


அந்தத் தீர்ப்புக்கு எதிராக தியான் சுவா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தியான் சுவா தன் மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டார். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் ஒரு மாத சிறைவாசத்தையும் அனுபவிக்கத் தயார் ஆனார்.


தனது சிறைவாசக் காலத்தின் போது பகவத் கீதை, சமஸ்கிருதம், லத்தீன் மொழி, பைபிள் படிப்பதற்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று அவரின்  வழக்கறிஞரும் பி.கே.ஆர். கட்சியின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.