கேமரன் மலை - இயற்கை அன்னையின் சீதனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேமரன் மலை - இயற்கை அன்னையின் சீதனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 நவம்பர் 2019

கேமரன் மலை - இயற்கை அன்னையின் சீதனம்

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். 


அந்த வகையில் இயற்கை அழகின் சிகரமாய் விளங்குவது ... தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் இந்த மலைப் பிரதேசம் அமைந்து உள்ளது. வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும்.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத்தளமாக விளங்கியது. வருடத்தைக் கவனியுங்கள். இருந்தாலும் 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகே புகழ் பெற்றது. அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் முதலில் ஒரு குறுகலான மண்பாதை போடப் பட்டது.

அதன் பிறகு சாலைகளை அமைத்தார்கள். தமிழர்கள் நிறையவே சாலை அமைப்புகளில் ஈடுபட்டார்கள். கேமரன் மலை வரலாற்றில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. உறவினர்கள் பலர் அங்கு உள்ளனர்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Sathya Raman: கேமரன் மலையைப் பற்றிய நிறைய பதிவுகளை நீங்கள் எழுதினாலும் எனக்கு மட்டும் என்றுமே சலிக்காமல், திகட்டாத கட்டுரைகள் சார். என் நினைவுகள் வாழ்ந்த, இன்னமும் வாழும் இடங்கள் என்பதால் நன்றிங்க சார்.🙏


Muthukrishnan Ipoh: கேமரன் மலையில் நிறைய இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன... பலருக்கும் தெரியாத இரகசியங்கள்... வாய்ப்பு கிடைக்கும் போது வெளிக் கொணர முயற்சிகள் செய்வோம்... கருத்துகளுக்கு நன்றிங்க....


Melur Manoharan: "இனிய" காலை வணக்கம் ஐயா...!


Kumarasamy G P Govindasamy: கேமரன் மலையில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகவும், அதன் ஆரம்பத்தில் தொழிலாளர்களை எங்கு இருந்து வருவித்து தொழில் தொடங்கப்பட்ட வரலாறு யாராவது எழுதி உள்ளார்களா ?


Kumaravel Muthu Goundan: வரலாறு என்று யாரும் எழுதவில்லை...1940/50- களில் கேமரன் மலையில் வாழ்ந்த கவிதைவேள் கா.பெருமாள் அவர்கள் போ தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வியலை வானொலி மூலமும் கதை கட்டுரைகளின் வழி சங்கமணி வார இதழ்களிலும் வெளியிட்டுள்ளார்.

1920 முதல் 1950-கள் வரை தமிழ் நாடு நாமக்கல் வட்டாரப் பகுதிகளில் இருந்து வெள்ளைக்கார முதலாளிகளின் தரகர்கள் ஆயிரக் கணக்கான தமிழ் குடும்பங்களைக் கேமரன் மலையில் உள்ள போ தோட்டம் உள்பட 7 தேயிலைத் தோட்டங்களை உருவாக்க கொண்டு வரப்பட்டனர்.

அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட தோட்டங்களில் நூற்றுக் கணக்கான தமிழ் குடும்பங்கள் வேலை செய்த இடத்தில் இன்று சில பத்து தமிழ் குடும்பங்களே வேலை செய்கின்றனர்.

இன்று கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் உள்பட பூந்தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்திலும், வங்களாதேசிகள், இந்தோனேசியர்கள், நேப்பாளிகள், மியன்மாரிகள் மற்றும் இந்தியர்கள் என ஆயிரக் கணக்கான அந்நிய நாட்டவர்கள் நல்ல வருமானத்தில் வேலை செய்வதுடன் நிலத்தை வாடகைக்கு எடுத்து சொந்த விவசாயம் செய்வதுடன் பலர் மினி மார்க்கெட், முடி திருத்தகம், உணவகம், தங்கும் விடுதி போன்ற பல் வகை வர்த்தகங்களிலும் ஈடுபட்டு கணிசமான வருமானத்தை ஈட்டி வசதியுடன் வாழ்கின்றனர்.

மலேசியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத வேலை மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் கேமரன் மலையில் கொட்டிக் கிடக்கின்றன!

கேமரன் மலையில், அந்நிய நாட்டவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரிந்த அளவு, மலேசியாவில் பிற பகுதியில் வாழும் வேலை வாய்ப்புக்கள் இல்லாத இந்தியர்கள் கேமரன் மலையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஏன் அக்கறை காட்டவில்லை என்பது தான் புரியவில்லை!


Muthukrishnan Ipoh >>> Kumaravel Muthu Goundan:
நல்ல தகவல்... நல்ல வரலாற்றுப் பின்னூட்டம்... முடிந்த வரையில் பயன்படுத்திக் கொள்வோம்... நன்றிங்க ஐயா...


Kumaravel Muthu Goundan >>> Muthukrishnan Ipoh: இன்றும் உழைப்பதிலும் சேமிப்பதிலும் கேமரன் மலை இந்தியர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. விவசாயம், கடை வர்த்தகம், தங்கும் விடுதி, சொத்து முதலீடு, மற்றும் பிள்ளைகளின் உயர் கல்வி போன்ற எல்லாவற்றிலும் சீனர்களுக்கு ஈடாக கேமரன் மலை இந்தியர்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பது நிதர்சனம்.


Arjunan Arjunankannaya: என்ன வளம் இல்லை திருநாட்டில். உழைக்காத சோம்பேறிகள் கையில் சிக்கிய நாடு எப்படி சீரும் சிறப்பாய் இருக்கும். எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டது. இன்று வட்டி கட்டும் நாடாகிவிட்டது. சரியா அண்ணா?


Sathya Raman >>> Arjunan Arjunankannaya: வட்டி கட்டுகிறோம் என்று வடிகட்டிய முட்டாளாக்கப்பட்டு வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை சார். நான் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகளின் பேச்சும் அல்லூறு தண்ணீரும்... 🤔


Muthukrishnan Ipoh: உண்மைதான் தம்பி... ஊட்டி ஊட்டி வளர்த்து சோம்பேறிகளாக ஆக்கி விட்டார்கள்...


Muthukrishnan Ipoh: சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.... அரசியல் என்பது இப்போதைக்கு தனி ஒருவரின் நலனுக்காகப் பயன்படும் வாகனமாகத் தெரிகின்றது...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: சோம்பேறிகளுக்குத் தான் இந்த நாடு சொந்தம், சொர்க்கம் என்கிறார்களே சார்.


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உண்மையிலும் உண்மை சார். அதற்குத் தான் ஆரம்பக் கட்ட ஆப்புக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.


M R Tanasegaran Rengasamy: தமிழன் கைப்படாத இடம் ஏதுன்னேன். தமிழன் போகாத இடங்கள் காய்ந்து கிடக்கும். இல்லை கானகமாய்க் கிடக்கும். நம்ம வியர்வைத் துளி பட்டால் மண்ணும் பொன்னாகும்.


Muthukrishnan Ipoh: உழைக்கப் பிறந்து உழைப்பால் வாழ்ந்து காட்டிய இனம் தமிழர் இனம்... உண்மைங்க...

Ramarao Ramanaidu >>> Muthukrishnan Ipoh: உழைப்பின்றி உயர்வேது வாழ்வில்?


Sunthararajoo Msrajoo: தற்பொழுது பச்சையாகிவிட்டது.


Muthukrishnan Ipoh: நன்றாகவே தெரியத் தொடங்கி விட்டது


Sheila Mohan: இனிய வணக்கம் சார்..


Sudar KS: காலை வணக்கம் ஐயா..


பாக்ய ராஜ் மதுரை:
இனிய காலை வணக்கங்கள்


Mageswary Muthiah: இனிய காலை வணக்கம்


Malathi Nair: Good morning anna.


Sundaram Natarajan: Inniya Kaalai Vanakam Anna


Inbachudar Muthuchandran >>> Muthukrishnan Ipoh: அங்கு தமிழர்களுக்கு சொந்தமான புளு வெளி தோட்டம் இருந்தது. ஆனால் தற்போது இல்லை. அது தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக இருந்தது.


Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க.... புளு வேலி தோட்டம் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தனி இடம் பெற்றது... 1995-ஆம் ஆண்டில் அருகில் இருந்த ரிங்லெட்டில் நண்பருடன், கொஞ்ச காலம் இடியப்பம் வியாபாரம் செய்து இருக்கிறேன்... 😃


Govind Bala >>> Inbachudar Muthuchandran: புளு வேலி தேயிலை தோட்டத்தை என்றோ விற்று விட்டார்கள் கூட்டுறவு சங்கத்தினர்.


Muthukrishnan Ipoh: தெரியும் ஐயா... 1990களில் என்று நினைக்கிறேன்...


Manickam Nadeson: அங்க இப்போது இயற்கையும் இல்லை அழகும் இல்லை. அது ஒரு கனாக் காலமாகி விட்டது.


Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா...


Ramarao Ramanaidu: ஆமாம்... கேமரனுக்கு என்ன ஆயிற்று? எங்கே அவர்? தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் பதிலை ...


Jainthee Karuppayah: இனிய வணக்கம் சகோதரரே... அருமை தமிழ் ... அண்மையில் தங்களின் புத்தகம் ஒன்றை நண்பர் அரவிந்தன் வாயிலாகப் படித்து மகிழ்ந்து இருக்கிறேன். சிலருக்கு மட்டுமே தமிழ் வார்த்தைகள் அத்துணை அழகாக வருகின்றன. தாங்கள் ஒருவர். வாழ்த்துக்கள்


Muthukrishnan Ipoh: மிக நன்றிங்க.... மகிழ்ச்சியாக உள்ளது...


Shantakumar Dilip: கலை வணக்கம் ஐயா


Vijikrish Krishnasamy:
Kaalai vanakkam aiya.