மலேசிய ஐஜிபி மீது வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய ஐஜிபி மீது வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூலை 2014

மலேசிய ஐஜிபி மீது வழக்கு போட அனுமதி

ஈப்போ, ஜூலை 1-


தன்னுடைய முன்னால் கணவரைக் கைது செய்து மகளை மீட்டுத் தரும்படி அரச மலேசிய போலீஸ் படைத் தலைவரை (ஐஜிபி) கட்டாயப் படுத்தும் நீதிமன்ற உத்தரவைக் கோரி பாலர் பள்ளி ஆசிரியை எம். இந்திராகாந்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.


இதன் தொடர்பில் கடந்த மே 30ஆம் தேதி ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி லீ சுவீ செங் விடுத்த இரண்டு உத்தரவுகளுக்கு டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் அடி பணிய வேண்டும் என்று அம்மனுவில் கோரப் பட்டு உள்ளது.