விடியல் காலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடியல் காலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2015

விடியல் காலையில்


கடலில் ஒரு கப்பல் கவிழ்ந்தது. பயணித்தவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர். அதில் ஒருவன் ஆள் அரவமற்ற ஒரு தீவுக்குள் வந்து சேர்ந்தான்.

அந்த மனிதன். தாவரங்களைச் சாப்பிடான். தட்டுத் தடுமாறி ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டான்.

சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினான். சமையல் செய்தான்.

கடவுளுக்குத் தன் மேல் கொஞ்சமாவது கருணை இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ஒருநாள் காய் கனிகள் பறிக்கச் சென்றான். திரும்பி வந்த போது அவனுடைய குடிசை பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

கடவுளே! உனக்கு கருணையே இல்லையா... அல்லது நீயே இல்லையா என்று கதறினான்.

சிறிது நேரத்தில் அவனைத் தேடி ஒரு கப்பல் வந்தது. அவனுக்கு ஆச்சரியம்!

நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான்.

தீவில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்து யாரோ அவசர அபய அழைப்பு அனுப்புகிறார்கள் என்று புரிந்து கொண்டோம் என்றார் கப்பலின் தலைவர்.

ஆக, இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை என்ன தெரியுமா...

சோதனைகள் என்பது பெரும்பாலும் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே வருகின்றன.

அப்படி நினைக்க வேண்டும். அப்படி நினைத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று விடியல் காலையில் தூக்கம் வராமல் ஒரு சிலர் அலைமோதி இருக்கலாம்.

அவர்களுக்கும் இந்தக் கதை போய்ச் சேர்கின்றது. அந்த அவர்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.