இருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 அக்டோபர் 2017

இருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு


 
 
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளிக்கு எதிரான வழக்கு

இந்த வழக்கு 2017 செப்டம்பர் 28-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணைக்கு வந்தது. 

அதைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் தோற்றுப் போனது. அதனால் இந்த வழக்கு முழுமையான விசாரணைக்கு உட்படும் என அறிவிக்கப் பட்டது.


இருமொழித் திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகள் அமலாக்கம் செய்யக் கூடாது என்று மே 19 இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அந்தப் பள்ளியில் அமல் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரி ஒரு நீதி மறுசீராய்வு (Judicial Review) மனுவைக் கடந்த 5.9.2017-இல் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

அதன் சார்பாக அந்த வழக்கின் முழு விசாரணைக்கு முன்பாக அப்படிப் பட்ட வழக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அத்துடன் அந்த வழக்கு நீதி மறுசீராய்வுக்கு உகந்ததா என்பதையும் உயர் நீதி மன்றம் பரிசீலனை செய்யும். 



அந்த வகையில் கடந்த 28.9.2017-இல் நீதிபதி டத்தின் ஹாஜா அசிசா பிந்தி ஹாஜி நவாவி அவர்கள் முன் பரிசீலனக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த வழக்கு மறுசீராய்வுக்கு உகந்தது என்ற தீர்ப்பையும் வழங்கியது.

இந்த வழக்கின் பிரதிவாதிகள்:

1.     பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. பஞ்சினியம்மாள்; 

2.     மலேசியக் கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர்; 

3.     மலேசியக் கல்வி அமைச்சர்;



பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளிக்கு எதிரான இந்த வழக்கின் வாதிகள்: 
 
1.     பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராஜரெத்தினம்;

2. பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர் டாக்டர் செ. செல்வம்; 

3.      சுவராம் இயக்கத்தின் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் 
4.     ஒரு பெற்றோர்.

இவர்களின் வழக்குரைஞராகத் தினகரன் வாதாடினார். இந்த வழக்கு மீண்டும் இந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

செய்தி: செம்பருத்தி