இன்றைய சிந்தனை 18.07.2019 - வாழ்க்கை என்றால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய சிந்தனை 18.07.2019 - வாழ்க்கை என்றால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 18.07.2019 - வாழ்க்கை என்றால்


கவியரசு கண்ணதாசனின் வரிகள் வருகின்றன.

வாழ்க்கை என்றல் ஆயிரம் இருக்கும்...
வாசல்தோறும் வேதனை இருக்கும்...
வந்த துன்பம் எதுவென்றாலும்...
வாடி நின்றால் ஓடுவதில்லை...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!


நடந்தது நடந்தது தான். அதுவும் நல்லதுக்காக நடந்து இருக்கலாம். அப்படி நினையுங்கள். இப்படித்தான் நடக்கும் என்பது விதியின் சாசனம். வாழ்வை அதன் போக்கில் விட்டு விடுங்கள். அது போய்க் கொண்டே இருக்கட்டும்.

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என நினைத்து நீங்களும் போய்க் கொண்டே இருங்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Doraisamy Lakshamanan உலகம் செழிக்க உழைக்கும் ஊடகத் துறையினர்களால் உலக மக்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருவதால் உங்கள் வருகை உலகத் தமிழர்களை எல்லாத் துறைகளிலும் உயர்வதற்கு உங்கள வருகையை உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் இவ்வூடகத்தில்!


Doraisamy Lakshamanan கண்பார்வை காரணமாகவும் கை நடுக்கம் காரணமாகவும் பல குறைகளோடு என் மனக் குறையைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன்.



உங்கள் உதவி உலக மக்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் காத்து வளர்க்க ஒன்றிணையும் உலக மக்களாக ஒவ்வொருவரையும் தட்டி எழுப்ப உங்கள் வருகை உதவுகிறது உலக மக்களுக்கு!



Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் ஏற்படும் இயற்கையான உபாதைகளைப் பெரிது படுத்தாமல் தமிழ் உணர்வுகளில் தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறோம்...


Doraisamy Lakshamanan தாய்மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் ஏற்றமுற ஐ.நா சபையோ யுனெஸ்கோவோ முன்வந்து உலக நாடுகளில் உள்ள ஒவ்வொருவரின் தாய்மொழியையும் தாய்மொழிப் பண்பாட்டையும் மீட்டெடுத்துக் கற்பிக்க வாரத்தில் ஒரு நாள் வட்டாப்பள்ளிகளில் ஒன்றிணைந்து படிக்கவும் எழுதவும் பேசவும் வாய்பை அளிக்க வழிகாட்டுங்கள் உலகத் தமிர்களுக்கு!


Muthukrishnan Ipoh மலேசியாவில் தமிழ் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்படும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம்.


Khavi Khavi Acceptence @ ஏற்றுக் கொள்ளுதலே வாழும் கலை. அரவணைப்பு அன்பின் வெளிபாடாகிறது அன்பு ஆசிரியரே..
'தொடரும் பயணங்கள், தொடமுடியா இலக்குகள்..
தொட எத்தனிக்கும் துருவத்தேடல்களில்
தொலைந்தனவே சுயத் தேடல்கள்..
உணர்வின்றி உயிரற்ற நிலையில்
உருவங்கள் பலவாகி,
தேடல்களில் மெல்ல கரைகின்றனவே.. !'



Muthukrishnan Ipoh தொடரும் பயணங்கள், தொடமுடியா இலக்குகள்..
தொட எத்தனிக்கும் துருவத்தேடல்களில்
தொலைந்தனவே சுயத்தேடல்கள்..
உணர்வின்றி உயிரற்ற நிலையில்
உருவங்கள் பலவாகி,
தேடல்களில் மெல்ல கரைகின்றனவே.. !'
மனததைத் தொடுகின்ற வரிகள்.... அருமை அருமை...



Khavi Khavi பாராட்டுதலுக்கு உள மகிழ்கிறேன் ஐயா. இவை எம் மனதை ஆக்கிரமிக்கின்ற உணர்வுகள். எமது ஆழ்ந்த எண்ணங்கள். பல வேளைகளில் பரவலான இவ்வெண்ணங்களை முறையே எடுத்து உரைப்பதற்கு எனது உடல் அவயங்கள் தாமதிப்பதாய் உணர்கிறேன். மறுகணம் அவற்றை என் தாய்த் தமிழ்ச் சொற்களில் எழுதுகிறேன். நன்றி..


யு.பி. வெ ள்ளை ரோஜா. தங்களின் படைப்புகளை படித்து வருகிறேன் சார் அனைத்தும் மிக சிறப்பு


Doraisamy Lakshamanan வணக்கம் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே வாழ்த்துகளோடு வரவேற்கிறோம் உங்களை!


Thanga Raju எப்படிங்க தலைவரே இப்படி அசத்துறீங்க அருமை...


 
Muthukrishnan Ipoh எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான்...


Image may contain: text 

Image may contain: 7 people, people smiling