திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2015

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறந்த நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் எனும் காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் காவியம். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். அனைவருக்கும் தெரியும். இந்தத் திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
  • திருக்குறளில் ‘தமிழ்‘ எனும் சொல் பயன்படுத்தப் படவில்லை
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
  • திருக்குறள் அறத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 380
  • திருக்குறள் பொருட் பாலில் உள்ள குறட் பாக்கள் - 700
  • திருக்குறள் காமத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட் பாக்கள் - 1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள் -  14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
  • திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ,ங
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
  • திருக்குறளை உரை ஆசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்று உள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்று உள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் ஆளப்பட்டு உள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்து உள்ளனர்
  • நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.