சுவெட்லானா துளசி - கதக் நாட்டிய மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவெட்லானா துளசி - கதக் நாட்டிய மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஜூன் 2020

சுவெட்லானா துளசி - கதக் நாட்டிய மணி

இந்திய நாட்டியக் கலையில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதகளி, மோகினி ஆட்டம், குச்சிப்பூடி, ஒடிசி, கதக், சத்ரியா, மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. 

சுவெட்லானா துளசி

இந்தி மொழிச் சொல்லான கதாகார் என்னும் சொல்லில் இருந்து கதக் எனும் பெயர் தோன்றியது.

அந்த வகையில் வட இந்தியாவின் முக்கிய நாட்டியம் கதக் (Kathak) ஆகும். இதில் சுவெட்லானா துளசி (Svetlana Trilokovna Tulasi) எனும் ரஷ்யப் பெண்மணி புகழ் பெற்று விளங்குகிறார். ரஷ்யா மாஸ்கோவில் பிறந்தவர். வயது 28.

தகப்பனார் பெயர் திரிலோக மூர்த்தி. இந்தியா, ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர். தாயார் ரஷ்யாவைச் சேர்ந்தவர். ரஷ்யாவுக்குப் போன திரிலோக மூர்த்தி காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 


10 வயதில் இருந்தே சுவெட்லானா கதக் நாட்டியம் கற்று வருகிறார். 2005-ஆம் ஆண்டில் சுவெட்லானாவுக்கு 13 வயதாக இருந்த போது, அவரின் தந்தையார் இதய நோய் காரணமாக காலமானார்.

Ukraine’s Got Talent TV show எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகப் புகழ் பெற்றார்.

2013 ஆம் ஆண்டில் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பாலிவுட் பாடலுக்கு இவர் ஒரு கதக் நாட்டியம் ஆடினார். அதுவே சுவெட்லானாவின் வாழ்க்கையில் முதல் பெரிய திருப்புமுனை,

தகப்பனார் திரிலோக மூர்த்தி - தாயார்
இப்போது அவர் ஒரு தொழில்முறை கதக் நடனக் கலைஞர். அவர் பாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்திய கதக் நடனத்தின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவராத் திகழ்கின்றார்.

சுவெட்லானா துளசியும்; மற்றொரு கதக் நாட்டியக் கலைஞர் குமார் சர்மா (Kumar Sharma) என்பவரும் டைட்டானிக் பாடலுக்கான அபிநயம். இப்போது சுவெட்லானா துளசி, ரஷயாவில் கதக் பள்ளி நடத்தி வருகிறார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.06.2020