கணினியில் ஆபாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினியில் ஆபாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூன் 2014

கணினியில் ஆபாசம்

 மலேசியா ‘புதிய பார்வை’ நாளிதழில் இன்று 08.06.2014 பிரசுரிக்கப்பட்டது.

திருமதி. பெயர் இல்லை. போர்ட் கிள்ளான், சிலாங்கூர்.
கே: என்னுடைய வீட்டின் கீழ்மாடியில் ஓர் அறையில் ஒரு கணினி இருக்கிறது. மேல்மாடியில் ஐந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். நான் இருக்கும் போது அவர்கள் கணினியைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சில நாட்களாக நான் கணினியைத் திறந்ததும் ஆபாசப் படங்கள் திரையில் வருகின்றன. அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்து விட்டேன். நான் இல்லை நீ இல்லை என்றுதான் பதில் வருகிறது. 

கணினியை எத்தனை மணிக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. கணினியை நான் அடைத்துப் போட்டாலும் திறந்து விடுகிறார்கள். என் மகன்களைப் போல இருக்கிறார்கள். யாரோ ஒருவர் செய்கின்ற குற்றத்திற்காக எல்லாரையும் தண்டிக்க மனம் வரவில்லை. உங்களின் ஆலோசனை தேவைப் படுகிறது.

ப: உங்கள் மனவேதனை புரிகிறது. செம்மறியாட்டுக் கூட்டத்தில் ஒரு கரும் பூனை. கருவாட்டைத் தின்றுவிட்டு, புல்லைத் தின்பதாகப் படம் காட்டுகிறது. சரி, அந்த மாதிரியான கழிசடைகளைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான். தெரியும் தானே. 


ஒரு வீட்டில் உள்ள ஒரு கணினியை எத்தனை மணிக்குத் திறந்தார்கள். எத்தனை மணிக்கு என்ன என்ன பார்த்தார்கள். எத்தனை மணிக்கு அடைத்தார்கள். அவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்ட ஒரு நிரலி இருக்கிறது. இலவசம் இல்லை. இருந்தாலும் ‘புதிய பார்வை’ வாசகர்களுக்கு இலவசமாய்த் தருகிறோம். 



திருடன் கணினியின் முன் உட்கார்ந்து கணினியைத் தொடக்கிய அடுத்த விநாடியே அந்த நிரலி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அவன் என்ன என்ன எழுத்துகளைத் தட்டச்சு செய்கிறான். எங்கே எங்கே போகிறான் என்பதை எல்லாம் பதிவு செய்யும். கணினியைத் தொடங்கிய ஐந்து நிமிடங்களில், அந்த நிரலி உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக செய்தியையும் அனுப்பும். அல்லது கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக  அனுப்பச் சொல்லி நிரலியில் வடிவமைத்துக் கொள்ளலாம்.



அது மட்டும் இல்லை. உங்கள் கணினியில் படம் பிடிக்கும் கருவி இருந்தால் அதையும் நீங்கள் இயக்கி விடலாம். யாருக்கும் தெரியாமல் காமிரா படம் பிடித்து வைத்துக் கொள்ளும். ஆனால், இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. அப்படிப்பட்ட ஒரு நிரலி கணினிக்குள் இருப்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. பார்க்கவும் முடியாது. (Hidden Mode). 



அப்புறம், பாலாபிஷேகம் செய்யலாமா இல்லை கோலாபிஷேகம் செய்யலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் http://uploaded.net/file/acc98lwf இந்த இடத்திற்குப் போய் Free Download என்பதைச் சொடுக்கி விடுங்கள். என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டீர்களே.