கொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் தயாரிக்கும் தமிழ்ப் பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் தயாரிக்கும் தமிழ்ப் பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் தயாரிக்கும் தமிழ்ப் பெண்கள்

உலகத்தையே கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அந்தக் கொரோனாவையே அசைத்துக் காட்டும் அளவிற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் சாதனை செய்து வருகிறார்கள். உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.


அந்தப் பெண்கள் வீட்டில் இருந்தவாறே கடந்த சில நாட்களில் 2,500,000 மில்லியன் முகக் கவசங்களைத் தயாரித்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் நாடளாவிய நிலையில் 65,936 சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups) உள்ளன. இவற்றுள் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 1927 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் தான் இப்போது முகக்கவசங்கள் தயாரித்துச் சாதனை படைக்கிறார்கள்.

இருப்பினும் இந்தச் சுய உதவிக்குழுப் பெண்கள், தமிழகத்தில் மட்டும் சுமார்  5,000,000 முகக் கவசங்களைத் தயாரிப்பதாகப் பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. 



மருத்துவமனைச் சேவையாளர்கள், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர்; இதர அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் முகக் கவசங்களை இந்தச் சுய உதவிக் குழு பெண்கள் தயாரிக்கின்றனர்.

தவிர பொது மக்களின் பயன்பாட்டிற்கும் விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு முகக்கவசமும் 10 - 12 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. (மலேசியா ரிங்கிட்: 68 சென்)

இந்தியக் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய ஊரக வாழ்வாதார பிரிவு உள்ளது. அந்த அமைப்பின் கீழ் தமிழகத்தின் சுய உதவிக்குழுப் பெண்கள் (Tamil Nadu State Rural and Urban Livelihood Mission) முகக்கவசத் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.



அரசாங்கம் நடத்தி வரும் துணிக் கடைகள் திறக்கும் நேரத்தில், முகக் கவசம் தயாரிப்பதற்கான துணிகளை வாங்கிக் கொள்கிறார்கள். பகல் இரவு நேரங்களில் தையல் வேலைகள். சமயங்களில் இரவு முழுவதும் தையல் வேலைகள் தொடர்வதும் உண்டு.

பெண்களில் சிலர் சுய உதவிக்குழு அலுவலகத்தில் வந்து தைக்கிறார்கள். ஒரு சிலர் அவர்கள் வீடுகளில் ஓய்வு நேரங்களில் தைக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் ஏறக்குறைய 100 முகக் கவசங்களைத் தைத்து விடுகிறார்.

தமிழ்நாட்டுப் பெண்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார்கள். தமிழ்ப் பெண்களின் தார்மீகப் பண்புகள் தழைத்துப் பெருகட்டும். வாழ்த்துவோம். 



சான்று:https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1610981

படங்கள்: பி.பி.சி;
பத்திரிகை தகவல் அலுவலகம், இந்திய அரசு, சென்னை


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.04.2020