வாடிக்கை மறந்ததும் ஏனோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாடிக்கை மறந்ததும் ஏனோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜூன் 2020

வாடிக்கை மறந்ததும் ஏனோ



வாடிக்கை மறந்ததும் ஏனோ – என்னை
வாட்டிட ஆசை தானோ – பல
கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை
கொள்ளை அடிப்பதும் ஏனோ?

வாடிக்கை மறந்திடுவேனோ – என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ – புது
மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? – பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? – நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
தனித்துப் பெற முடியாது

அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும் போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ?
காந்தமோ இது கண்ணொளி தானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

பொறுமை இழந்திடலாமோ? – பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ? – நான்
கருங்கல்லுச் சிலையோ காதல் எனக் கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ?

சைக்கிளும் ஓட மண் மேலே – இரு
சக்கரம் சுழல்வது போலே – அணை
தாண்டிவரும் சுகமும், தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே

திரைப்படம்: கல்யாணப்பரிசு (1959)
இசை: A.M.ராஜா
வரிகள்: கவிஞர் கல்யாணசுந்தரம்
பாடியவர்கள்: A.M.ராஜா – P.சுசிலா