தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூன் 2017

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம்

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம். தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் மொழியைத் தாயாக மதிக்க வேண்டும். தரணி போற்றும் மொழியாகத் தமிழை உயர்த்த வேண்டும்.


ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் பயின்று இப்போது அமெரிக்கா புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியில் மூலக்கூற்றுத் தொற்று நோய்ப் பிரிவில் பேராசிரியராகப் பணி புரியும் டாக்டர் கலைமதியின் அறைகூவல்.

தமிழ்க்குயிலார் கா.கலியபெருமாள் அறக்கட்டளையின் சார்பில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் *தமிழ்ப்பள்ளி மாணவர்களும் முன்னேற்றப் பாதையும்* எனும் தலைப்பில் நடைபெற்ற  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அந்த அறைகூவலை விடுக்கப்பட்டது.

தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல முக்கியப் பதவிகளில் சேவை செய்கின்றனர் என்பதற்கு டாக்டர் கலைமதி ஓர் எடுத்துக்காட்டு.