ஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 பிப்ரவரி 2017

ஜக்கி வாசுதேவ் ரகசியங்கள்




ஈஷா யோகா உலப் புகழ்பெற்ெயர்.ந்தப் பெயரில் பிரச்சாரம் செய்ர் கிட்டு. ாவகிட்டு என்கிற கிருஷ்ண மூர்த்தி. அில் ஜாவா வாசுதேவன் என்கிற ஜக்கி வாசுதேவ். அப்பிப் பெயர் ிரிந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் 1957 செப்டம்பர் 3 ஆம் தேதி கர்நாடகம் மைசூரில் பிறந்தவர். 

சின்ன வயதில் சத்குரு தேவ்
ஆன்மீகப் பாதைக்குத் துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்று உலக மக்களுக்குப் போதனை செய்த ஜக்கி வாசுதேவ் மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம் யோகா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்

அங்கு அவர் விஜி எனும் விஜயகுமாரியைச் சந்தித்தார். இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருடன் நெருங்கிப் பழகியதில் காதல். அப்புறம் அவரையே திருமணம் செய்து கொண்டார். ராதே எனும் மகள் பிறந்தாள்.


வாலிப வயதில்
சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கோவையில் சுதர்சன் வரதராஜ் என்பவரின் நட்பு கிடைத்தது. சுதர்சன் தன் மனைவி பாரதியை (முன்னாள் ஆந்திர எம்.பி ஒருவரின் மகள்) ஜக்கி வாசுதேவின் யோகா வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.

அங்கு ஜக்கி வாசுதேவுடன் பாரதி நெருங்கிப் பழகினார். இருவருக்கும் பழக்கம் அதிகமானது. அதனால் மனைவி ஜக்கி வாசுதேவுக்கும் விஜிக்கும்...  பிரச்சினைகள்.



மோட்டார் சைக்கிள் பிரியர்
அதன் பிறகு விஜி தன்னுடைய அணாகத்தா சக்ரா ஆசிரமத்தில் தன் உயிரை விட்டதாக ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் தன் மகளை ஜக்கி வாசுதேவ் கொன்று விட்டதாக விஜியின் தந்தை காங்கன்னா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் நிற்கிறது.

அதன் பின்னர் பாரதி தன்னுடைய கணவர் வரதராஜுவை விவாகரத்து செய்து விட்டு ஜக்கி வாசுதேவுடன் குடும்பம் நடத்தி அப்படியே ஆன்மீகப் பாதைக்கு வந்து விட்டார்.



மனைவி விஜயகுமாரியுடன்
சரி. அடுத்து ஜக்கி வாசுதேவ் கஞ்சா வியாபாரம். 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் புரூபாண்ட் ரோடு மேம்பாலத்திற்கு கீழ் ஜக்கி வாசுதேவ் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார்.

கஞ்சா வியாபாரத்தில் இவருக்கு ரிச்சர்ட் என்ற பிரபல ரவுடி உதவி. அதே சமயத்தில் இவர்கள் இருவருக்கும் உதவியாக இருந்த ஒரு பெண் திடீரென்று காணாமல் போனார்.

அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப் பட்டார். அதே போல ஜக்கியின் மனைவி விஜியையும் ஜக்கி வாசுதேவ் தான் கொலை செய்து விட்டார் என்று ஒரு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



விஜிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் பிறந்த மகள் தான் குழந்தை தான் ராதே. முக்திக்கு வழிகாட்டி என்று பிறர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து சாமியாராக ஆக்கியவர் ஜக்கி வாசுதேவ். ஆனால் அவரின் செல்ல மகள் ராதே குடி, கொண்டாட்டம் என வளர்ந்த நவீன காலத்து மங்கை.

அத்தனைக்கும் ஆசைப்படு என இவர் சொல்வது இவரின் திருப்புதல்விக்கும் இவருக்கும் மட்டும் தான் போல் இருக்கிறது,

அடுத்து ஈஷாவில் சந்நியாசம் எடுக்கிறவர்கள் முதலில் குடும்பத் தொடர்பை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் முதற் கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும். குருகுலப் பள்ளியில் சேர்வதற்கு கட்டணம் 7 லட்சம் ரூபாய்.




சம்பந்தப் பட்டவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தான் என்ன என்று தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அனைவரும் கஞ்சா அடித்த மாதிரி அரை போதையில் தான் எப்போதும் இருப்பார்கள்

இவரால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கா உருவாக்கப் பட்டதே சம்ஸ்கிருதி என்ற குருகுலப் பள்ளி இதில் குழந்தைகளை சேர்த்த கட்டணம் 7 லட்சம்.



ஈஷாவில் அதிகாலை 5மணிக்கு எழுந்து... தீர்த்த குண்டம் எனும் குளத்தில் 10-12° குளிர்ந்த நீரில் குளியல். பின்பு யோகா, களரி பயிற்சி, பின் 2-3kms நடை பயிற்சி. பின் மீண்டும் குளியல். அதன்பின் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவு. பின் மீண்டும் இரவு 7 மணிக்கே அடுத்த வேளே உணவு. இடையில் ஒன்றும் கிடையாது. எப்படி உங்கள் வசதி?
 
ஆசிரம வாழ்க்கை பிடிக்காமல் அல்லது உடல் நலம் குன்றிப் போனால்... அதனால் ஆசிரமத்தை விட்டு விலகினால் வாங்கிய பணத்தில் பத்து பைசா கூட திரும்ப கொடுக்கப்பட மாட்டாது
 
சதுரங்க வேட்டை என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் 



நாம் சொல்லுற ஒவ்வொரு பொய்யிலும் ஓர் உண்மை இருக்கணும்

இது தான் தன்னை உணர்ந்த ஞானி என்று சொல்லித் திரியும் திருட்டுச் சாமியார்களின் தாரக மந்திரம்.

ஈஷா யோகா மையத்தில் சந்நியாசியாக மாறிப் போனவர்களில் 80% பேர் படித்தவர்கள். இப்படி படித்தும் முட்டாள்களாக இருப்பது வேதனையாக இருக்கிறது.




யார் மீது தவறாக இருந்தாலும் சரி நம்மை நாமே மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இறை பக்தி வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. முக்தி என்பது இருக்கிறதா இல்லையா எறு தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக ஒரு வாழ்க்கை இருக்கிறது, உங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதைத் தொலைத்துவிட வேண்டாம்.
 
உனக்குள் நீ மலர வேண்டும். அதற்கு மற்றவர் உதவிகள் தேவை இல்லை