புத்த காயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்த காயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2015

புத்த காயா



புத்த காயா என்பது புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்து உள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் தலை நகரமான பாட்னாவில் இருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.

கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இந்த இடத்தை போதி மண்டா என்று குறிப்பிடுகின்றன.

2002 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது.

கி.மு 530 ஆம் ஆண்டில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த புத்தர், இந்தியாவில் உள்ள காயா என்னும் நகருக்கு அருகில் உள்ள பல்கு ஆற்றங் கரைக்கு வந்தார்.

அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர், சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்றார்.

இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காக மகாபோதி கோயில் (புத்த காயா) அமைக்கப் பட்டது.

புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவி மடத்தையும் அமைத்தார்.

குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில், செங்கற்களால் கட்டப்பட்டது. மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடமும் நிறுவப் பட்டது.

இந்தியாவுக்குச் சென்றால் இந்தப் புனிதமான இடத்திற்குச் சென்று வாருங்கள். மனம் அமைதி பெறும். கவலைகள் தீரும்.

2006ஆம் ஆண்டு அடியேன் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்து இருக்கிறேன்.