கோபியோ மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோபியோ மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 செப்டம்பர் 2019

கோபியோ மாநாடு

கோலாலம்பூரில் அனைத்துலக கோபியோ மாநாடு (Global organization of People of Indian Origin) செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பு என்பதை ’கோபியோ’ (GOPIO) என்கிறார்கள். கடல் கடந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Global organization of People of Indian Origin.

1989-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1-ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலாவது இந்திய வம்சாவளி மக்களின் மாநாட்டில் இந்த கோபியோ அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது.

தோற்றுவித்தவர் டாக்டர் தாமஸ் அபிரகாம் (Dr. Thomas Abraham). 2004-ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். இப்போதைய தலைவர் நிராஜி பாக்சி (Niraj Baxi). அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்தது.

இந்த அமைப்பு இந்திய வம்சாவளி மக்கள் சார்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றது. (The initial thrust of GOPIO was fighting human rights violation against people of Indian origin.)

இந்த ஆண்டு 13-ஆவது அனைத்துலக மாநாடு. இன்று செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

ஐந்து துணை மாநாடுகள்

1. சமூக, கலாசார, மொழி, கல்வி மாநாடு

2. வர்த்தக மாநாடு

3. பாரம்பரிய மருத்துவ உடல்னல ஆரோக்கிய மாநாடு

4. டிஜிட்டல் நிறுவனவியல் மாநாடு

5. இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்திய வம்சாவளிகளின் சுற்றுலா - சுற்றுப்பயண மாநாடு.

வெளிநாடுகளில் இருந்து 100 பேராளர்கள். மலேசியாவில் இருந்து 400 பேராளர்கள்.


இந்த அமைப்பின் அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் அண்மைய காலங்களில் மனநிறைவு அளிப்பதாக அமையவில்லை எனும் குறைபாடு சற்றே பரவலாக நிலவி வருகிறது. கல்வியாளர்கள் பலரின்  ஈடுபாடுகள் நலிந்து வருவதாகவும் சொல்லப் படுகிறது.

(Although this has been improved in the last decade, human rights violations continue to be a major issue for PIOs living outside India. GOPIO has now set its priorities in pooling its resources, both financial and professional, for the benefit of PIOs, the countries they come from and India)

இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்.

(பி.கு. இந்த மாநாடின் சமூக, கலாசார, மொழி, கல்வி துணை மாநாட்டில் ‘மலேசியாவில் இந்திய வம்சாவளி வரலாற்று மீட்சிகள்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு... இயலவில்லை.)