நீல உத்தமன் ஒரு நீலநயனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமன் ஒரு நீலநயனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 செப்டம்பர் 2019

நீல உத்தமன் ஒரு நீலநயனம்

எகிப்திய நைல் நதிக் கரையில் கிளியோபாட்ரா ஒரு நீலநயனம் என்றால் இந்தியத் தக்காணப் பீடபூமியில் ஓர் அசோகர். நீலநயனங்களிலேயே கோபுரம் பார்த்த கோமகன். 



அதே போல மலையகத்தின் சுவர்ணபூமியில் மாறன் மகாவம்சன் ஒரு நீலநயனம் என்றால் சுமத்திரா சுவர்ணதீபத்தில் மகாராஜா நீல உத்தமன் ஒரு நீலநயனம்.

சுவர்ணபூமியில் கடாரம் கங்கா நகரங்கள் உருவாகின. அதே பாவனையில் சுவர்ணதீபத்தில் சிங்கை மலாக்கா நகரங்கள் உருவாகின. அபிராமி அந்தாதிகளாய்ப் பரிணமித்தன. அன்று புகழ் பாடின. இன்றும்  தொடர்ந்து பாராயணம் பாடுகின்றன.

அந்த வகையில் சுவர்ணதீபத்தின் அழகிய நயனம் சிங்கப்பூர். அதை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் அதே நீல உத்தமன் தான். 




அதற்கு நன்றிக் கடனாக, இந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சிங்கப்பூர் அரசாங்கம் நீல உத்தமனுக்கு ஒரு பளிங்குச் சிலையை உருவாக்கிப் பெருமை செய்து இருக்கிறார்கள்.

அந்தப் பளிங்குச் சிலை சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. உலகமே வியந்து பார்க்கிறது.

சிங்கப்பூர் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு மூன்று பெரியவர்கள் அடையாளப் படுத்தப் படுகிறார்கள். மூத்தவர் நீல உத்தமன். அடுத்தவர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ். மூன்றாவதாக லீ குவான் இயூ. மறக்க முடியாத மனிதர்கள்.

Four new sculptures have joined the statue of Sir Stamford Raffles along the Singapore River for the Singapore Bicentennial.

The statues of Sang Nila Utama, Tan Tock Seng, Munshi Abdullah and Naraina Pillai were unveiled on Friday (Jan 4) in recognition of the diverse communities and people who have shaped Singapore over the years.

https://www.channelnewsasia.com/news/singapore/singapore-bicentennial-river-statues-raffles-history-pioneers-11086338



பேஸ்புக் அன்பர்களின் பின்னூடங்கள்




Kalai Selvam: நன்றி ஐயா. நன்றியுடைவர்களும், நன்றி மறவாதர்களும் சிங்கையர்களே. நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh: நன்றிங்க.... மனிதநேயம் கொண்டவர்கள்... நன்றி மறவாதவர்கள்...

Sathya Raman: சிறப்பு... மிகச் சிறப்பு சார். சிங்கப்பூர் ஒரு சின்ன நாடு. ஆனால் எல்லா வகையிலும் சிங்காரமாய்த் திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் பொது வாகனத்திற்காகக் காத்திருந்த போது அங்குள்ள சாலைகளைச் சில தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவிக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரிப்பட்டுப் போனேன்.

அங்கு டாக்ஸி ஒட்டுவதற்குச் சிங்கப்பூரில் பிறந்தவர் மட்டுமே அனுமதிக்க படுவதாக அறியப் பட்டேன் .தூய்மையும், எல்லா இனத்தவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் பின்பலமும், நீண்டு வளர்ந்த நெடுமரங்கள் அங்குள்ள சாலைகளுக்குப் பேரழகு.

பள்ளியில் வரலாற்று பாடத்தில் சங் நீல உத்தமனைப் பற்றி படித்து இருக்கிறேன். ஆனால் அவருக்குப் பளிங்குச் சிலை வடித்து பார் புகழ முதன்மையானதாய் முன்னெடுத்த சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு ஒரு தலை வணக்கம்... வாழ்த்துக்கள்.

வழக்கம் போல் படைப்பாளராய்ப் படிப்பவர்களுக்குத் தகுந்த தகவலை நல்லதொரு பதிவாய்த் தந்ததற்கு நன்றிங்க சார்.