கொரோனா 2020 மலேசியா: 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா 2020 மலேசியா: 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: 9

மலேசியாவில் 10-ஆவது இறப்பு

பினாங்கு மருத்துவமனையில் 74 வயது முதியவர் கொரோனா கோவிட் தாக்கத்தினால் இன்று காலமானார். இவர் கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்த ஒரு சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

கடந்த மார்ச் 13-ஆம் தேதிக்கு அவருக்கு மூச்சுத் திணறல். பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இன்று மாலை 4.05-க்கு காலமானார்.



மலேசியாவில் இதுவரையில் 1,306 பேருக்கு கொரோனா பாதிப்பு. இவர்களில் 62 விழுக்காட்டினர் அதாவது 743 பேர் குறிப்பிட்ட அந்தச் சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் தொடர்பு உடையவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்துள்ளார் (Datuk Seri Dr Noor Hisham Abdullah).
மலேசியச் சுகாதார அமைச்சில் பணிபுரியும் 460 மருத்துவ அதிகாரிகள் கொரோனா தொடர்பாகப் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 270 பேருக்கு தொற்று இல்லை (negative) என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 190 பேர் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்து இருக்கிறார்கள்.

அந்த மருத்துவ அதிகாரிகள் கோவிட் -19 நெருக்கடியால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மனநல சேவைகள் மற்றும் உளவியல் உதவிகளை அமைச்சகம் வழங்கி வருகிறது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.