கொரோனா: இந்தியாவில் மக்கள் ஊரடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா: இந்தியாவில் மக்கள் ஊரடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மார்ச் 2020

கொரோனா: இந்தியாவில் மக்கள் ஊரடங்கு

14 மணி நேர ஊரடங்கு

இந்தியா முழுவதும் இன்று ஞாயிறு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் ஊரடங்கு நடப்பிற்கு வருகிறது.

இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லை. தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சி அளிக்கின்றன.
 
Madras

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. 303 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 5.
Nagpur, Maharashtra

தமிழகத்தில் மார்ச் 16-ஆம் தேதி கொரோனா கட்டுப்பாடுகள்

1. தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள்; மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை.
 
Assam

2. தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகின்றன.

3. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டுப் பயணிகள் வருகையைத் தடை செய்து உள்ளது.