கொரோனா 2020 மலேசியா: 10 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா 2020 மலேசியா: 10 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: 10

நன்றிகள் ஆயிரம்
🙏🙏🙏

மலேசிய மக்கள் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில்... பொதுநலச் சேவையாளர்கள் சிலர் தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். நன்றிகள் ஆயிரம்.

குடும்பத்தை மறந்து, குதூகலத்தைத் துறந்து, தனிப்பட்ட தேவைகளைக் கடந்து அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் செயல் பட்டு வருகின்றார்கள். நன்றிகள் ஆயிரம்.

மருத்துவர்கள், தாதிமார்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், அவசர முன்னணியாளர்கள், போலீசார், இராணுவ வீரர்கள், ரேலா உறுப்பினர்கள், நகராண்மைக் கழகச் சேவையாளர்கள், மற்றும் இதர அத்தியாவசியச் சேவையாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்.

நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள். நன்றிகள் ஆயிரம்.

அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும். அவர்கள் நலத்துடன் சேவைகள் செய்ய வேண்டும். நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோம். வாழ்க அவர்களின் சேவை மனப்பான்மை. வாழ்க அவர்களின் பொதுநலப் பார்வை. நன்றிகள் ஆயிரம்.

இந்தக் கொரோனா வைரஸ் கிருமியால் பல கோடி மக்கள் கதிகலங்கி நிற்கிறார்கள். பல கோடி மக்கள் பதறிப் போய் நிற்கிறார்கள்.

கொரோனா நெருங்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

-முத்துக்கிருஷ்ணன்
23.03.2020