நீல உத்தமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே 2019

நீல உத்தமன்

நீல உத்தமனின் இயல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா

(Sri Maharaja Parameswara Tribuwana). 

 

கி.பி.1324-ஆம் ஆண்டில் இருந்து 1372-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய பேரரசின் ஆட்சியின் கீழ் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். பலேம்பாங் தனி ஓர் அரசாக இயங்கி வந்தது. அதை ஸ்ரீ விஜய அரசு அடித்துப் பிடித்துக் கொண்டது. அதன் பின்னர் பலேம்பாங் அரசர்கள் ஸ்ரீ விஜய அரசிற்கு அடி பணிந்தனர்.

Nila Utama - King of Singapore
Reign - 1299-1347
Successor - Sri Wikrama Wira
Born - 13 Century, Sumatra, Indonesia
Die - Kingdom of Singapore
Burial - 1347 Fort Canning Hill
Religio - Hinduism

Source: Abshire, Jean (2011). The History of Singapore. The Greenwood Histories of the Modern Nations. ABC-CLIO. p. 19. ISBN 978-0-313-37743-3.

நீல உத்தமனுக்கு முன்னர் அவருடைய தந்தையார் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Maharaja Sang Sapurba Paduka Sri Trimurti Tri Buana). இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).

நீல உத்தமனுக்கு மூன்று தம்பிமார்கள். அவர்களின் பெயர்கள்:

1. பிச்சித்திரம் (Bichitram),

2. பலதூதானி (Paladutani),

3. நீலதனம் (Nilatanam).


நீல உத்தமனின் தாயாரின் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari). பெயர்களைப் பாருங்கள். அனைத்துமே சமஸ்கிருதம் கலந்த தமிழ்ச் சொற்கள்.

(F1. 1324 - 1372 Sri Maharaja Sang Utama Parameswara)

நீல உத்தமனுக்கு மேலும் ஒரு பெயர் இருந்தது. ஸ்ரீ நீல பல்லவன் (Sri Nila Pahlawan). நீல உத்தமனின் பரம்பரையினர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் அழைப்புப் பெயரே சான்றாக அமைகின்றன. 




பல்லவன் எனும் சொல்லில் இருந்து தான் பாலவான் (Pahlawan) எனும் மலாய்ச் சொல் உருவானது. பாலவான் என்றால் மாவீரன் என்று பொருள். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

(2. Buyers, Christopher);
(3.  Taylor, Nora A.)

மஜபாகித் அரசினால் பலேம்பாங் அரசு தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவு (Bintan) சுமத்திராவிற்கு வடக்கே சிங்கப்பூருக்கு அருகாமையில் இருக்கிறது.

ஸ்ரீ விஜய அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த மேலும் ஓர் ஆயிரம் பேர் பிந்தான் தீவில் தஞ்சம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் தலைவர் ஆனார்.

(4.Tsang, Susan; Perera, Audrey)

இதற்கு முன்னர் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 1280-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரைத் தெமாகி (Temagi) எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek).

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக நியமனம் செய்து வைத்து பாதுகாத்து வந்தது. தெமாகிக்கு சயாம் அரசின் பாதுகாப்பு இருந்து வந்தது. இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலுக்குச் சிங்கப்பூரில் இருந்த கடல் கொள்ளையர்கள் நீல உத்தமனுக்கு உதவியாக இருந்தார்கள்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கு உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் அதைப் பற்றி கவலைப் படவில்லை.

சிங்கப்பூரைக் கைப்பற்றியதும் அதற்கு அரசர் ஆனார். தெமாசிக் எனும் பழைய பெயரை சிங்கப்பூர் எனும் புதிய பெயருக்கு மாற்றினார்.




இப்போது இருக்கும் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் தான் முந்தைய சிங்கப்பூர் நகரம் உருவாக்கப் பட்டது. ஆற்று நெடுகிலும் சின்னச் சின்னக் குன்றுகள் இருந்தன. அவற்றில் ஒன்று கெனிங் குன்று.

அந்தக் குன்றை நீல உத்தமன் மேரு மலை (Mount Meru) என்று அழைத்தார். அங்கு இருந்து குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நன்னீர் கிடைத்தன. இப்போது அந்த இடம் கெனிங் கோட்டைக் குன்று (Fort Canning Hill) என அழைக்கப் படுகிறது.

(5. Dr. John Leyden 1821. Malay Annals)

அப்போது சிங்கப்பூர் ஒரு நகரம் அல்ல. ஒரு சின்ன ஊர் தான். சொல்லப் போனால் அது ஒரு சின்ன மீன்பிடி கிராமம். கடற் கொள்ளையர்களின் மறைவிடமாக விளங்கியது. சீனா நாட்டுக் கப்பல்கள் வந்து போய்க் கொண்டு இருந்தன.

மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் நீல உத்தமன் தான். 




சிங்கப்பூரின் ஆட்சியாளர் ஆனதும் நீல உத்தமன் தன்னுடைய பெயரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) என்று மாற்றிக் கொண்டார்.

அப்போது நீல உத்தமனின் வளர்ப்புத் தாயார் ஸ்ரீ பரமேஸ்வரி ராணியார் (Queen Paramisuri) பிந்தான் தீவில் இருந்தார். நீல உத்தமனுக்குத் தேவையான வேலையாட்கள்; அடிமைகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார். தவிர படகுகள்; குதிரைகள்; யானைகள் போன்றவற்றையும் அனுப்பி வைத்தார்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.