சவுமியா சுவாமிநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவுமியா சுவாமிநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மார்ச் 2019

சவுமியா சுவாமிநாதன்


உலக சுகாதார அமைப்பின் தலைவராக சவுமியா சுவாமிநாதன்


உலக சுகாதார அமைப்பின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இந்திய நாட்டைச் சேர்ந்த பசுமை புரட்சியின் தந்தை என புகழப்படும் எம்.எஸ். சுவாமிநாதனின் மகளாவார்.

சவுமியா சுவாமிநாதன் சென்னையில் காசநோய் ஆராய்ச்சியாளர். இந்திய மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர் 2017-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். 


தற்போது அவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. உலக மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி.

உலகின் மிக உயர்ந்த பதவிகளில் ஐ.நா. நிறுவனங்களின் தலைமைப் பதவிகள் ஆகும். 2017-ஆம் ஆண்டு உலகின் 194 நாடுகள் உலகச் சுகாதார அமைப்பின் துணை இயக்குநர் பதவிக்குத் தத்தம் பிரதிந்திகளின் பெயர்களைச் சமர்ப்பித்தன. 



அவர்களில் சவுமியா மட்டுமே தேர்வு செய்யப் பட்டார். இவர் ஒரு மருத்துவர். காசநோய் தொடர்பான ஆய்வாளர். நிறைய விருதுகளைப் பெற்று உள்ளார்.

இந்த ஆண்டு அவருக்குத் தலைவர் பதவி கிடைத்தும் இந்திய அரசாங்கத்திடம் இருந்து உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. ஏன் என்றால் இவர் ஓர் அரசாங்க ஊழியர். இருப்பினும் இந்தியப் பெண்கள் இயக்கங்கள் நெருக்குதல் கொடுத்தன. பிரதமர் மோடி உடனடியாக அனுமதி வழங்கி விட்டார்.