எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2019

எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் மலேசியா

மலேசியாவில் உயர்ந்த கோபுரமாய் உச்சம் பார்த்து உவகை பூத்தக் கோபுரங்கள் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (Petronas Twin Towers). தெரிந்த விசயம். இப்போது இல்லை. அவை அவற்றின் அருமை பெருமை மகிமைகளை எல்லாம் இழந்து விட்டன.  



போட்டியாக எக்ஸ்சேஞ்ச் கோபுரம் (Exchange 106) வந்து விட்டது. மலேசியாவின் அடுத்த உயர்ந்த கோபுரம்.

இந்த எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் தான், இப்போதைக்கு மலேசியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் மிக உயர்ந்த கோபுரம் ஆகும். உலகின் உயரமான 15 வானளாவிகளில் இதுவும் ஒன்று.

(This building is so tall that it’s now among the top 15 tallest buildings in the world!)

அதையும் தாண்டிய நிலையில் உலகில் மிக உயர்ந்த கோபுரங்களின் பட்டியலிலும் தடம் பதித்து விட்டது.

பெட்ரோனாஸ் கோபுரங்களின் உயரம் 452 மீட்டர். எக்ஸ்சேஞ்ச் கோபுரத்தின் உயரம் 492 மீட்டர். கிட்டத்தட்ட அரை கி.மீ. உயரம். இரண்டுக்கும் 40 மீட்டர் வேறுபாடு. பெட்ரோனாஸ் கோபுரங்கள் 88 மாடிகள். எக்ஸ்சேஞ்ச் 106க்கு; 106 மாடிகள்.



Petronas Twin Towers: 451.9m
Exchange 106: 492.3m

உள்ளே 2116 கார்களை நிறுத்தி வைக்கலாம்.

2000 பேர் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறார்கள்.

The whole operation was so huge that it required:

* 120 cement mixers
* 8.5 million kg of cement
* 16 million kg of sand
* 19 million kg of construction aggregates
* 2 million kg of ice to counter the heat generated in the construction process




பயங்கரமான புயல் காற்று அடித்தாலும் லேசில் அசைத்துவிட முடியாது. பத்து மீட்டர் அளவிற்கு அப்படியும் இப்படியும் வளைந்து கொடுக்கும் ஆற்றலைப் பெற்றது.

ஜப்பானில் அடிக்கடி வந்து போகும் மாமியார் வீட்டு நில நடுக்கங்களையும் தாங்கிக் கொள்ளும் அளவிற்குப் பக்காவாகக் கட்டி இருக்கிறார்கள். பேய்க் காற்று பிசாசு காற்று எல்லாம் ஒன்றும் வாசிக்க முடியாது.

இந்த எக்ஸ்சேஞ்ச் கோபுரத்தின் அடிப்பாகத்தில் நான்கு மாடி உயரத்திற்கு இராட்சச அதிர்ச்சி உறிஞ்சிகளை வைத்து இருக்கிறார்கள். நம்ப புந்தோங் பூச்சிக் கண்ணா பாஷையில் ’லூஸு ஸ்பிரிங்ஸ்’.

பத்து மீட்டருக்கு வளைந்து தளர்ந்து மறுபடியும் நிமிர்ந்து கொள்ளும். கோபுரம் அப்படியும் இப்படியும் வளையும் போது, கட்டடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டவர்களுக்குப் பாதி உயிர் போய் வரலாம். 




இருந்தாலும் பிரச்சினை இல்லை. உயிருக்கு உத்தரவாதம். அப்புறம் என்னங்க.

என்னதான் புயல்காற்று வீசினாலும் கோபுரம் சரிவதற்கான வாய்ப்பு இல்லை. இன்னும் ஒரு பிளஸ் பாயிண்ட். வெடி குண்டு வைத்து தகர்த்துவிட முடியாது. நடக்காத காரியம். வெடி மருந்து நுகர்வுச் சாதனங்கள் மூலைக்கு மூலை வைத்து இருக்கிறார்கள்.

வெடிமருந்து வாடை 100 மீட்டர் தொலைவில் தெரிந்து விடும். மற்றபடி எந்த மாதிரியாகவும் மோடி மஸ்தான் வேலை நடக்காது. ஒன் மினிட் பிளீஸ்.

பக்காவா பிளான் பண்ணி ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போடுகிற மாதிரியான வேலை எல்லாம் நடக்காது என்று சொல்ல வருகிறேன். அந்த மாதிரி பக்குவமாகக் கட்டி இருக்கிறார்கள்.

அப்புறம்... ஏரோபிளேன் வைத்து மாஸ்டர் பிளேன் போட ஒசாமா மாதிரியான ஆட்கள் இல்லையே. கொஞ்சம் கூடுதலான மகிழ்ச்சி அடையலாமே.

இதற்கு முன்னர் தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக வியட்நாம் நாட்டின் லேண்ட்மார்க் 81 (Landmark 81) கோபுரம் இருந்தது. இப்போது இல்லை. அந்த விருதை மலேசியாவின் எக்ஸ்சேஞ்ச் கோபுரத்திற்குக் கொடுத்து விட்டார்கள். 




ஓர் ஒப்பீடு செய்தால்... சிங்கப்பூரின் தஞ்சோங் பாகார் குவோகோ (Guoco Tower) கோபுரம் 290 மீட்டர் உயரம்.

இலங்கையின் தாமரை கோபுரம் 356 மீட்டர். பெட்ரோனாஸ் கோபுரங்கள் 452 மீட்டர்.

துபாய் நகரின் புர்ச் கலிபா (Burj Khalifa) 830 மீட்டர். போதுங்களா.

கோலாலம்பூருக்கு அருகாமையில் துன் ரசாக் நகர் மாற்றுத் திட்டம் (Tun Razak Exchange) உருவாகி வருகிறது. சுருக்கமாக டி.ஆர்.எக்ஸ். (TRX). 2015-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

இந்த 2019-ஆம் ஆண்டில் எண்பது விழுக்காட்டு வேலைகள் முடிவு அடைந்து உள்ளன. 2021-ஆம் ஆண்டில் முற்றாக நிறைவு பெறும்.




இது கோலாலம்பூரின் மிகப் பெரிய... மிகப் பிருமாண்டமான நிதி வளாகமாக மாறி வருகிறது. முன்னாள் பிரதமர் துன் ரசாக் நினைவாக இந்தத் திட்டம்.

கோலாலம்பூரில் உள்ளவர்களுக்கு நிறையவே கொடுக்கல் வாங்கல் நிதி பரிமாற்றங்கள். அனுதினமும் புத்ராஜெயாவிற்குப் போய் வர முடியாது என்று சொல்லி இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

புத்ராஜெயாவைக் கொண்டு வந்தது மகாதீர். அதற்குப் போட்டியாக உருவாக்கப் பட்டது தான் இந்த எக்ஸ்சேஞ்ச் கோபுரம் (Exchange 106). கொண்டு வந்தது யார் தெரியுங்களா?

நம்ப ரோசாப்பூ ரோசம்மாவின் அன்புக் கணவரும்... டிவிட்டர் மன்னரும்... பிக் பாஸ் என்று புகழாரம் செய்யப்படும் முன்னாள் பிரதமர் ஐயா அவர்கள் தான்.

இந்தத் துன் ரசாக் நகர் மாற்றுத் திட்டத்தைக் கையில் எடுத்த பின்னர் தான் பல கோடிகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கொஞ்ச நஞ்ச லஞ்சம் இல்லை. முதலையை முழுக்காடு போட்டு முழுங்கிய மாதிரி...




இப்போது நீதிமன்றத்தில் நஜீப் சார் படும் வேதனைகள் சொல்லில் மாளா. பொம்பள பேச்சைக் கேட்டு பொசுங்கி நசுங்கிப் போயிட்டாருங்க. பாவம் அவர். பிளே பாய் ஜோ லோ என்பவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நஜீப் சாருக்கு ரொம்பவுமே உதவி செய்தவர் ரோசாப்பூ. பெரியவரின் புத்ராஜெயா அலுவலகத்திலேயே ஒரு பகுதியை இடித்து உடைத்து ஓர் உளவுத் துறையை உருவாக்கினார் ரோசாப்பூ. அங்கே ஒரு குட்டி மாபியா கும்பலையே நடத்தி இருக்கிறார். பற்பல மில்லியன்களில் பணப் பட்டுவாடா. எல்லாமே கமிஷன் கரைத்தல் காஞ்சனா சமசாரங்கள்.

இப்போது மாட்டிக் கொண்டு கோர்ட்டும் வாசலுமாய் ஓடிக் கொண்டுத் திரிகிறாரே முன்னாள் அமைச்சர் துங்கு அட்னான்... அவரும் இதில் மாட்டிக் கொண்டவர் தான். நஜீப் சாரைச் சொல்லவே வேண்டாம். கறுப்புப் பட்டியலில் முதலிடம்.

எக்ஸ்சேஞ்ச் கோபுரம் தொடர்பான கூடுதலான தகவல்களை இன்று இரவில் பதிவு செய்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைய பத்திரிகைக்கு கட்டுரை தயாரிக்கணும்... சரிங்களா...

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.10.2019

 

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Mangala Gowri வணக்கம் சார். கட்டுரையைப் படித்த பின்னர் வாய் வார்த்தை ஏதுமின்றி இருக்கிறேன். தமிழக டிவி சீரியல்கள் நம்ப ரோசாப்பூவிடம் ஒரு நாள் பேட்டி எடுத்தால் போதும், எத்தனையோ சீரியல்களை உருவாக்கி விடுவார்கள்... அவரின் ஊழல் நாடகத்தை மையமாக வைத்து. ஒரு பெண் இத்தனை அராஜகமாகவா?! கடவுளே அறிவான்
 
Muthukrishnan Ipoh உண்மையிலேயே நஜீப் ஒரு நல்ல மனிதர்... அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே ரோசாப்பூ தான்... நஜீப் நம்ப இந்தியர்களுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்... அதை மறக்கக் கூடாது...
Mahdy Hassan Ibrahim கோபுரங்களின் உச்சியில் எல்லோரையும் கொண்டு போய் அமர்த்தி விட்டது உங்கள் பதிவு!
 
Muthukrishnan Ipoh நன்றிங்க... என்ன இருந்தாலும் இலங்கையின் தாமரை கோபுரம் கண்ணுக்குள் இருக்கிறது... கண்டிப்பாக பார்க்க வேண்டும்... விரைவில்...
 
Hamba Mu Umar Umar Tamilar muthukrishnan.vazgah valamudan ayyah Tamil saritarah guruveh. (தமிழர் முத்து... வாழ்க வளமுடன் ஐயா... தமிழ் சரித்திர குருவே)
 
Santhanam Baskaran இனிய வணக்கம். நல்ல தகவல்கள்.
 
Melur Manoharan "இனிய" மதிய வணக்கம் ஐயா...!
 
Image may contain: one or more people, people standing, outdoor and nature 
 
Muthukrishnan Ipoh அழகு அழகு மேலூர் தம்பி....
Sathya Raman வணக்கம் சார். அம்மாடியோ! இந்த எக்ஸ்சேஞ் கோபுரத்தின் பின்னணியில் இவ்வளவு பிரளயம் இருக்கிறதா? கோலாலம்பூர் செல்லும் பொழுது எல்லாம் இந்தச் சாலை வழியாகப் போகும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் முழுமை பெறாத அந்தக் கட்டிடத்தை அண்ணார்ந்து பார்க்கும் போது இந்த நாட்டு அரசியல் மாற்றதால் சிறிது காலம் கட்டிட வேலைகள் நிறுத்தப் பட்டதாகக் கேள்விப் பட்டேன்.
ஆனால் அந்தக் கட்டிடம் முழுமைப் பெற்று பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருப்பதைத் தங்களின் ஆய்வுக் கட்டுரையைப் படித்து அறிய முடிந்தது சார்.
நாட்டின் முக்கால் வாசி கருவூலத்தையே களவாடிய நம் நாட்டின் முன்னாளும், அவரின் [உங்கள் பாஷையில் சொன்னால்] ரோசாப்பூ ரோஸ்மாவும் மற்றும் மந்திரி பரிவாரங்களும் வெச்சி செய்த ஊழல்களுக்கு மத்தியிலும் இந்தக் கட்டிடம் களைக் கட்டி நிற்பது ஆச்சரியமே.

நானும் என் மகனும் பேசிக் கொள்ளும் பொழுது இத்தகைய பொது விசயங்களை அவ்வப்போது அலசுவது உண்டு. அப்படி அளவளாவியதில் ஒரு விசயம் அறியப் பட்டேன். இந்த எக்ஸ்சேஞ் கட்டிடத்தை மிஞ்சும் அளவிற்கு பி.எம்.பீ. கட்டிடமே மலேசியாவில் வருங்காலத்தில் அதிக உயரமான கட்டிடமாம்.




ஏற்கனவே முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் அவர்களின் திட்டத்தில் உருவாகிக் கொண்டிருந்த இந்த பி.எம்.பீ. கட்டிடத்தை ஒரு சில வடிவமைப்பில் மாற்றம் செய்து, இந்நாள் அரசாங்கம் அந்தப் பணிகளை ஏற்று நடத்துவதாகத் தகவல்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் அந்தக் கட்டிட வேலைகளும் முழுமையாகப் பூர்த்தி ஆகிவிடுமாம். நஜீப் அரசாங்கத்தால் 108 மாடிகளாக நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கட்டிடம் மகாதீர் அரசாங்கத்தால் 118 மாடிகளாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது எக்ஸ்சேஞ்சை 106-ஐ விட பி.எம்.பீ. கட்டிடமே மலேசியாவிலும், ஆசியாவிலும் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்குமாம்.

இதில் என்ன உறுத்தல் என்றால் நாட்டில் காசின் கையிருப்பு காலி எனவும், கடன் சுமையே அதிகம் என்றும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது மக்களிடம் தங்கள் குறைகளை முன் வைத்த போது நம் மக்களும் கோடிக் கோடியாய் நிதியை வாரி வழங்கினர்.

ஆனால் இன்று நிலைமையே வேறு. நாட்டின் சுமைகளைத் தங்களின் தோளில் சுமந்த மக்களுக்கு நன்றிக் கடனாக இந்த அரசாங்கம் தன் மூப்பாகவும், இஷ்டத்திற்கு விலைவாசியையும் ஏற்றி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிற கெட்ட குணமதியாளர்களாய்க் காட்டிக் கொள்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்களுக்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆர்ப்பரித்தவர்கள், அளந்து விட்டவர்கள் இன்று ஆடம்பரங்களில் நாட்டின் கையிருப்பில் கைவைத்து, கவலை இல்லாமல் ஊதாரிச் செலவுகளைச் செய்துவிட்டு அந்தச் சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்துவார்கள்.

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் முன் நீலிக் கண்ணீரோடு, நீதிக் கதைகளைக் கட்டவிழ்த்து விடவும் இப்போதே காத்து இருப்பார்கள் என்பதே இப்போதைய என் கவலை சார்.

 
Kumar Murugiah Kumar's Sathya Raman எனக்கும் அந்த உருட்டல் இருக்கிறது...
 
Muthukrishnan Ipoh வணக்கம் சகோதரி... நீண்ட ஒரு பதிவு. நிறையவே தகவல்கள் நிறைந்த பதிவு... தங்களுக்கே உரித்தான சாயலில் தொகுத்து இருக்கிறீர்கள்... PNB 118 கட்ட்டிடம் 2012 ஆண்டில் நிறைவு பெறும்...

>>>
நாட்டின் சுமைகளைத் தங்களின் தோளில் சுமந்த மக்களுக்கு நன்றிக் கடனாக இந்த அரசாங்கம் தன் மூப்பாகவும், இஷ்டத்திற்கு விலைவாசியையும் ஏற்றி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிற கெட்ட குணமதியாளர்களாய்க் காட்டிக் கொள்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்களுக்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆர்ப்பரித்தவர்கள், அளந்து விட்டவர்கள் இன்று ஆடம்பரங்களில் நாட்டின் கையிருப்பில் கைவைத்து, கவலை இல்லாமல் ஊதாரிச் செலவுகளைச் செய்துவிட்டு அந்தச் சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்துவார்கள்.

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் முன் நீலிக் கண்ணீரோடு, நீதிக் கதைகளைக் கட்டவிழ்த்து விடவும் இப்போதே காத்து இருப்பார்கள்

>>>

உங்களின் இந்த ஆதங்கம் உண்மையிலேயே நியாயமானது... இப்போதைய அரசாங்கம் இப்படிச் செய்யும் என்று கொஞ்சமும் எதிர்பார்பார்க்கவில்லை சகோதரி... தொடர்ந்து பயணியுங்கள்.. தங்களின் பதிவுகளில் இருந்து நிறைய விஷயங்களை நானும் தெரிந்து கொள்கிறேன்... நன்றிங்க... நன்றி...
 
Meena Govindan Sathya nandraha unmaiyaga sonneergal... (சத்யா... நன்றாக உண்மையாக சொன்னீர்கள்...)
 
Vijikrish Krishnasamy Nantri aiya... (நன்றி ஐயா)