கொரோனா: இத்தாலி மருத்துவமனைகளில் இடம் இல்லையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா: இத்தாலி மருத்துவமனைகளில் இடம் இல்லையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மார்ச் 2020

கொரோனா: இத்தாலி மருத்துவமனைகளில் இடம் இல்லையா?

இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து விட்டார்கள். இனி அடுத்து 21 நாள்களுக்கு வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். சமூக வலைத் தளங்களில் வைரலான படம்.

இந்தப் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்தார்கள். இந்தியா டி.வி. இந்தியாவில் ஒரு முன்னணி தொலைக்காட்சி. அதுவும் செய்தி வெளியிட்டது. அந்த அளவுக்கு இத்தாலியில் நிலைமை மோசமாகி விட்டதா? 





கடைசியில் பார்த்தால் அது போலியான செய்தி. குரேஷியா (Croatia) நாட்டின் தலைநகரம் ஜாக்ரெப் (Zagreb). அங்கே கடந்த 22.03.2020-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 5.4 அளவில் நில நடுக்கம். அதன் விளைவுகள்.

அந்தப் படத்திற்கும் இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 




குரேஷியாவில் இப்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாடு உள்ளது. அதனால் அங்கு உள்ளவர்கள் முகத்திரை அணிந்து இருக்கிறார்கள்.

குரேஷியா நாட்டின் பிரதமர் Andrej Plenkovic உரை ஆற்றும் போது, `கடந்த 140 வருடங்களில் இந்த நிலநடுக்கம் தான் மிகவும் கோரமானது' என்றார். மருத்துவமனை என்பதால் அந்த இடமே ஒரு போர்க்களமாகக் காட்சி அளித்தது.

அன்று பிரசவம் முடிந்த பெண்களும் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் இவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டார்கள்.




குரேசியா சுகாதார அமைச்சர் சொல்கிறார். நிலநடுக்கம் ஆபத்தானது. அதைவிட ஆபத்தானது கொரோனா வைரஸ். தற்சமயம் குரேசியாவில் 235 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.