இணையம் மலேசியத் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் மலேசியத் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 பிப்ரவரி 2015

இணையம் மலேசியத் தமிழர் உருவாக்கிய சொல்


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

குமாரி. விலாசினி, ஈப்போ ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி
கே: இணையம் எனும் அழகான தமிழ்ப் பெயரை, மலேசியத் தமிழர் ஒருவர் உருவாக்கியதாக என் ஆசிரியர் சொல்கிறார். உண்மையா?


ப: உண்மை. உங்கள் ஆசிரியர் மிகச் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. நம் நாட்டைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன். 


அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் திரு. ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.