தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஜூன் 2016

தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...
நெய் மணக்கும் கத்திரிக்கா...
நேத்து வெச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா... 





பட்டி தொட்டிகளைப் பித்தம் கலங்கச் செய்த பாடல். முள்ளும் மலரும் படத்தில் ஒலித்தது. பாடலைக் கேட்கும் போது எல்லாம் மனசுக்குள் கத்திரிக்காய் மணந்தது. மீன்குழம்பு வாசித்தது. படாபட் ஜெயலட்சுமியும் ஒரு மாதிரியாகக் கண் சிமிட்டினார்.

ஆனால் இப்போது அந்தப் படாபட் இல்லை. 1979-இல் காதல் தோல்வி. கண்கலங்கி உதிரிப் பூவாய் உதிர்ந்து போனார். தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு மீளாத் தூக்கத்தில் ஐக்கியமாகி விட்டார். அவள் ஒரு தொடர்கதையில் நடித்த படாபட் ஜெயலெட்சுமியின் வாழ்க்கையும் ஒரு தொடர்கதையாகிப் போனது.




அதே ஆண்டில் பதினேழு வயது ஷோபா. அற்புதமான ஒரு நடிகை. பசி, மூடுபனி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். அவரைப் போன்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தார். இன்றைய வரைக்கும் யாராலும் மறக்க முடியாதவர். பசி படத்தில் சிறப்பாக நடித்தார். தேசிய விருது கிடைத்தது.

ஷோபாவின் மரண மர்ம முடிச்சுகள்

இயக்குனர் பாலுமகேந்திராவைத் திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் மலர்ந்தும் மலராத மலராகிப் போனார். ஏன் என்று கேட்க வேண்டாம். புருசன்காரன் பாலுமகேந்திராவைத் தான் கேட்க வேண்டும். 




இன்று வரை ஷோபாவின் மரண மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத ரகசியங்கள். புகழின் உச்சியில் இருந்த போதே தூக்குக் கயிற்றில் தன் உயிரை விலைபேசிக் கொண்டார். சுத்த அபத்தம்.

முள்ளும் மலரும் ரஜினிக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம். அந்தப் படத்தில் ரஜினிக்குத் தங்கையாக ஷோபாவும் மனைவியாக ஜெயலட்சுமியும் நடித்து இருந்தனர். 


இதில் ஜெயலட்சுமி 1979-ஆம் ஆண்டும் ஷோபா 1980-ஆம் ஆண்டும் தற்கொலை செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்ன தெரியுமா. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. அது தான் ரொம்பவும் வேதனையான விஷயம்.



சினிமா என்று வந்தாலே கதாநாயகிகள் வெறும் ஒரு கவர்ச்சிப் பொருளாகத் தான் பார்க்கப் படுகிறார்கள். அது தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி இல்லை தெலுங்குப் படமாக இருந்தாலும் சரி இல்லை கன்னடப் படமாக இருந்தாலும் சரி.

அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றிச் சுற்றி வருவது. அப்புறம் ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி விளையாடுவது. அப்புறம் ஐந்தே நிமிசத்தில் ஹீரோவைக் கட்டிப்பிடித்துக் காதலிப்பது. அதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தனர்.

ஐந்து நிமிசத்தில் காதல் வருமா… தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்களேன்... எதற்கும் முதலில் ஒரு பெரிய டின்னாகப் பார்த்து முதுகில் கட்டிக் கொள்வது நல்லது.

பணம் புகழ் செல்வாக்கு அதிகாரம் இருந்தும்

தமிழ்த் திரையுலகைப் பொருத்த வரையில் ஒரு  நடிகனுக்கு  வயது 80ஐ கூட தாண்டி இருக்கலாம். நோ புரோபளம்… காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளலாம். டூயட் பாடலாம். ஹீரோயினை ஒரு கையில் தூக்கிக் கொண்டு ஒன்றரை மைல் ஒலிம்பிக் ஓடலாம். 




முகத்தில் ஒரு சொட்டுக் கிழடு தெரியாது. என்றைக்கும் அவர் ஹீரோ. என்றைக்கும் சினிமாவில் அவருக்கு வயசு பத்து. இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒன்பது. புரியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் கதாநாயகிகள் அப்படி அல்ல. ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தாக்குப் பிடிப்பதே குதிரை கொம்பு. பிறகு வேறு வழி இல்லாமல் அமெரிக்க மாப்பிள்ளையுடன் ஐலசா. அப்புறம் சீரியல் தொடர்கள். அல்லது ரியாலிட்டி ஷோ நடுவர்கள். இப்படித்தான் இன்னமும் காலத்தைக் கழிக்கின்றனர். இனிமேலும் அப்படித்தான் நடக்கப் போகிறது.




இதில் தயவுசெய்து நயனைச் சேர்க்க வேண்டாம். நாலும் தெரிந்த நல்ல மகள். இருந்தாலும் பேர் போட்டு இருக்கலாம். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து இருப்பார்கள். இனிமேல் நோ சான்ஸ்… டூ லேட்...  சரி விடுங்கள். ஊர்வம்பு நமக்கு வேண்டாங்க…

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் மனைவி கேட்பதாக இல்லை. மனைவி சொல்வதைக் கணவன் கேட்பதாக இல்லை. இதில் மாமனார் மாமியாரின் சமகால அர்ச்சனைகள். சின்ன வயதைப் பெரிதாகப் பாதித்தச் சொல்லாடல்கள். செத்தும் போனார் அந்த நடிகர். சுத்தப் பைத்தியக்காரத்தனம். 




நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை தமிழ்ச் சினிமாவையே மீளாச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வாழ வேண்டிய வயது. புகழின் உச்சியில் உலா வந்த நேரம். பணம் புகழ் செல்வாக்கு அதிகாரம் எல்லாமே இருந்தன. இருந்தும் என்ன பயன்.

நல்ல ஒரு பொன்னான வாழ்வு… மண்ணாகிப் போனதே. மிக மிக அற்பத் தனமான செயலினால் வாழ்வின் இலட்சியங்கள் அடிமட்டமாகிப் போனதே… கலகலப்பாக வாழ்ந்தவர்கள் இப்படி எல்லாம் துயரமான முடிவுகளை எடுப்பது அதிர்ச்சி கலந்த வியப்பைத் தரலாம். என்னைக் கேட்டால் முட்டாள்தனம்.

சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் பிரச்சினை

தமிழ்ச் சினிமாவும் நடிகர் நடிகைகளின் தற்கொலைகளும் இணைபிரியாத் தோழர்களாக மாறி விட்டன. அந்த அளவிற்கு நிலைமை மிக மோசமாகி விட்டது. 


ஆக, அந்த வகையில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகர் நடிகைகளில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

சித்தி சீரியலில் நடித்த சாருகேஷ், 2004ஆம் ஆண்டு ஓட்டும் இரயிலுக்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006-இல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.

அள்ளித்தந்த வானம், பாய்ஸ் போன்ற படங்களில் நடித்த முரளி மோகன் வாய்ப்புகள் குறைவானதால் 2014-இல் தற்கொலை செய்து கொண்டார். அரசி சீரியல் தொடரை இயக்கிய பாலாஜி யாதவ் மன இறுக்கம் அதிகமாகித் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்த் திரை உலகில் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது 1974 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. அந்த ஆண்டில் விஜயஶ்ரீ எனும் நடிகையின் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஒரு தற்கொலையா என்பதில்கூட இன்னும் மர்மம் நீடிக்கிறது.

அடுத்து சில்க் சுமிதா. இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையும் அகோரமாக நர்த்தனம் ஆடி இருக்கின்றன. வினு சக்கரவர்த்தியின் மூலமாக அறிமுகமானார்.

நேத்து ராத்திரி யம்மா

 
1980-களில் கவர்ச்சி என்ற வார்த்தைக்கு தன் கண்ணிலேயே பாடம் எடுத்தவர். தன்னுடைய வசீகரப் பார்வையால் வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை சகட்டு மேனிக்குக் கட்டிப் போட்டவர். தன் கண்களாலேயே தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுக்க ஆரம்பித்தார். கொடிகட்டிப் பறந்தார்.

இவரின் போஸ்ட்டரைப் பார்த்தே தியேட்டருக்கு வருபவர்கள் பலர். ஐட்டம் டான்சைத் தமிழுக்கு அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும். மூன்றாம் பிறை படத்தில் இவர் பாடிய பொன்மேனி உருகுதே பாடலையும், சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற நேத்து ராத்திரி யம்மா பாடலையும் மறக்க முடியுமா.

அவருடைய கவர்ச்சியே கடைசியில் அவருக்கு ஆபாத்தாகிப் போனது. தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை என்ற முடிவை தேடிக் கொண்டார். 1996-ஆம் ஆண்டு தூக்கு மாட்டி இறந்து போனார். இன்று வரை இவரின் தற்கொலைக்கு யார் காரணம் என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை.

இருந்தாலும் காதல் தோல்வி, தொழில் பிரச்சினை, கடன் தொல்லை, மதுப்பழக்கம் ஆகியவை மரணத்திற்கு மூல காரணங்களாக கூறப் படுகின்றன. உண்மை என்ன என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

இவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தியில் டர்ட்டி பிச்சர் (Dirty Picture) என்ற படம் வெளிவந்தது. இதில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

அடுத்து இந்தி நடிகை ஜியாகான். இவருடைய மரணத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியில் தயாரான 'கஜினி' படத்தில் நயன்தாரா வேடத்தில் இவர் நடித்தார். அதனால் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவராக அறியப் பட்டார்.

ஜியாகானுக்கு 25 வயது. அமிதாப் பச்சனுடன் ‘நிஷப்த்’ படத்தில் நடித்தார். சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். அக்ஷய் குமாருடன் நடித்த ஹவுஸ்புல் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. முன்னணி நடிகை நிலைக்கு உயர்ந்து பேர் போட்டுக் கொண்டு இருந்தார்.

அந்தக் கட்டத்தில் அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது சினிமா உலகையே உலுக்கிப் போட்டது. தற்கொலைதானா என இன்று வரையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

ரசிகர்களின் காமப் பார்வை

போகிற இடம் எல்லாம் ரசிகர்களின் ஆரவார வரவேற்பு. அப்புறம் பணம், புகழ், அழகு. இப்படி உச்சத்தில் இருந்த நடிகைகள் ஏன் செத்துப் போகும் முடிவை எடுக்கின்றனர். புரியாத புதிராகவே இருக்கிறது.

வாழ்க்கையில் மனச்சிதைவுகள் ஏற்படலாம் விரக்திகள் ஏற்படலாம் மன இறுக்கம் ஏற்படலாம் அதனால் அவர்கள் சாகத் துணிகின்றனர் என்று மனநல வல்லுநர்கள் கருத்துச் சொல்கின்றனர். எது எப்படியோ போன உயிர் போனது தானே. திருப்பிக் கிடைக்குமா.

பெரும்பாலான நடிகைகளின் தற்கொலைக்கு முக்கியமாக அமைவது ரசிகர்களின் காமப் பார்வை தான். அப்படி நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமான கருத்து. நடிகை என்றாலே ஒரு விலைமாது எனும் ஒரு தனிப்பட்ட கருத்து வந்துவிடுகிறது.

அது மட்டும் அல்ல. இயக்குநர்கள் நடிகைகளை பொதுவாகவே லூசு பெண்களாகத் தான் சித்தரிக்கிறார்கள். சில நடிகைகள் காதல் வார்த்தைகளில் ஏமாற்றம் அடைவது, காதலித்தவனால் கை விடப்படுவது... பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

சிம்ரனின் தங்கையான மோனல். இவர் நடிகர் விஜய்யின் 'பத்ரி' படத்திலும் குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே எனும் படத்திலும் நடித்துப் புகழ்பெற்றவர். இவரும் காதல் வலையில் சிக்கினார். 


நடன இயக்குநர் பிரசன்னா சுஜித்துடன் காதல். அப்புறம் அவர்களுக்குள் பிரச்சனைகள். 2002-ஆம் ஆண்டு சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 21.

என்ன பைத்தியகாரத்தனம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்ரன் ‘எந்த ஒரு முடிவுக்கும் தற்கொலை தீர்வாகாது’ என்று கண்ணீருடன் கூறினார்.


மோனல் இறந்த அதே ஆண்டு கடல் பூக்கள், தவசி படங்களில் நாயகியாக நடித்த பிரதியுஷா (வயது 23) தற்கொலை செய்து கொண்டார். காதலர் சித்தார்த் ரெட்டியுடன் காரில் அமர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த பிரதியுஷா காரிலேயே இறந்து போனார்.

பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை

ஆனால் பிரதியுஷாவின் காதலர் அந்தத் தற்கொலை முயற்சியில் இருந்து பிழைத்துக் கொண்டார். காதலனுக்கு ஆயுசு கெட்டி. இருந்தாலும் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டப் பட்டது. இன்னும் தீர்ந்தபாடு இல்லை. பிரதியுஷாவின் தற்கொலையைத் தழுவி ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்றொரு திரைப்படம் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் பின்னர் வெளிவந்தது.

மோனலுடன் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த குணாலும் (வயது 31) காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் குணால் நடித்து இருக்கிறார். குணால், மோனல் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போல கோழி கூவுது படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜி எனும் நடிகை 2௦௦௦-ஆம் ஆண்டு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் காதல் தோல்விதான் காரணம்.

தமிழில் ‘நிலாப் பெண்ணே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி (வயது 19). தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த திவ்யபாரதி 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மும்பை வீட்டின் பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தள்ளி விடப்பட்டாரா என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அடுத்து நடிகை ஷோபனா (வயது 31). நடிகர் வடிவேலுவுடன் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த காமெடி நடிகை. 2004-ஆம் ஆண்டு தன்னுடைய கோட்டூர்புரம் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போனார். உடல்நலப் பிரச்சினைகளே ஷோபனாவின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அடுத்து இந்தி நடிகை பர்வீன் பாபி. இவர் 2005-ஆம் ஆண்டில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வாரத்திற்ப்கு பிறகு அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப் பட்டது.

சரி. ஹாலிவுட் திரைப்பட உலகைத்தையும் மறந்துவிட வேண்டாம். ஒரு காலத்தில் தன் கடைக்கண் பார்வையால் சொக்க வைத்து பலரின் கனவுக் கன்னியாய்த் திகழ்ந்தவர் மர்லின் மன்றோ. 


ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கு அல்ல… மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே... என வெளிப்படையாய்ச் சொன்னவர். மர்லின் மன்றோவின் மரண மர்மம் இன்னும் நீடிக்கிறது.

அவ்வை ஷண்முகி ராபின் வில்லியம்ஸ்

பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ். இரு ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார். அவ்வை ஷண்முகியின் ஆங்கில மூலத் திரைப்படமான ‘மிஸஸ் டவுட்பயர்’ படத்தில் நடித்துப் புகழ் பெற்றவர். ஆஸ்கார் பரிசுகளை வென்றவர். 


அவருடைய முடிவு சோகமானது. பலரை மகிழ்வித்த அந்தக் கலைஞன் கடைசியில் மன உளைச்சலால் பாதிக்கப் பட்டது கொடுமையின் உச்சம்.

இறைவன் கொடுத்த உயிரை அழிப்பதற்கு அந்த இறைவனுக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதைக்கூட அவர் நேரம் காலம் பார்த்துத் தான் செய்கிறார். மற்றபடி சட்டத்திற்கு முன் நீதியரசரும் சத்தம் போட்டுத் தான் உயிர்த் தண்டனையையும் வாங்கிக் கொடுக்கிறார். 


ஆக அந்த உயிருக்குச் சொந்தமான அந்த மனிதருக்குக்கூட அந்த உரிமை இல்லை. என்னைக் கேட்டால் தற்கொலை என்பது சுத்தமான கோழைத்தனம்!

19 மார்ச் 2016

தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள்



நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை தமிழ்த் திரையுலகத்தை ஓர் அதிர்ச்சியான சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பணம், புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தது. இருந்தாலும் தங்களின் பொன்னான வாழ்க்கையை அற்ப காரணங்களுக்காக முடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவையும் நடிகர் நடிகையர்களின் தற்கொலைகளையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. அந்த வகையில் இதுவரை தற்கொலை செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்தத் தகவல்களைச் செய்தியுலகம் இணையத்தில் இருந்து பெற்றேன். அவர்களுக்கு நன்றி.

நடிகை லட்சுமி ஸ்ரீ 1979 ஆம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மயுத்தம் படத்தில் அவரின் தங்கையாக லட்சுமி ஸ்ரீ நடித்திருந்தார்.

படாபட் ஜெயலட்சுமி ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழ் பெற்றவர். இவர் 1979 ஆம் ஆண்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவள் ஒரு தொடர்கதை, ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ஜெயலட்சுமி நடித்திருக்கிறார்.

படாபட் ஜெயலெட்சுமி

பசி, மூடுபனி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஷோபா. பசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர். இயக்குநர் பாலு மகேந்திராவைத் திருமணம் செய்து கொண்ட ஷோபா, தனது 18 ஆவது வயதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

15-1458024853-tamil-actress-shoba-dead-60

முள்ளும் மலரும் ரஜினிக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம் முள்ளும் மலரும். அப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஷோபாவும், மனைவியாக ஜெயலட்சுமியும் நடித்திருந்தனர். இதில் ஜெயலட்சுமி 1979 ஆம் ஆண்டும் ஷோபா 1980 ஆம் ஆண்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

15-1458024883-mullummalarum-600

சில்க் ஸ்மிதாவின் தற்கொலை தமிழ் சினிமாவை அதிகம் உலுக்கி எடுத்த மரணமாக இன்றளவும் கருதப் படுகிறது. 1996 ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா தூக்கு மாட்டி இறந்து போனார் காதல் தோல்வி, தொழில் பிரச்சினை ஆகியவை இவரின் மரணத்திற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.

15-1458024921-silk-smitha-600

இதே போல காதல் தோல்வியால் கோழி கூவுது புகழ் விஜி 2௦௦௦ ஆம் ஆண்டு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

15-1458027225-viji-s-600

தமிழில் ‘நிலாப் பெண்ணே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த திவ்யபாரதி 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மும்பை வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தள்ளி விடப் பட்டாரா? என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

15-1458025039-actress-divyabharti-600

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் விஜய்யுடன் பத்ரி, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் 2002 ஆம் ஆண்டு சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நடன இயக்குநர் பிரசன்னா சுஜித்துடன் மோனல் கொண்ட காதலே இந்தத் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.

15-1458025087-actress-monal-dead-600

மோனல் இறந்த அதே வருடம் கடல் பூக்கள், தவசி படங்களில் நாயகியாக நடித்த பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டார்.

‘புன்னகை மன்னன்’ பாணியில் காதலர் சித்தார்த் ரெட்டியுடன் காரில் அமர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பிரதியுஷா இறந்து போனார். ஆனால் அவரது காதலர் இந்த தற்கொலை முயற்சியில் பிழைத்துக் கொண்டார்.

15-1458025189-kadal-pookal-actress-600

மோனலுடன் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த குணாலும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் குணால் நடித்திருக்கிறார்.

15-1458025229-kunal-tamil-actor-600

பார்வை ஒன்றே போதுமே இப்படத்தில் இணைந்து நடித்த குணால், மோனல் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

15-1458025273-paarvai-ondre-podhume-tamil

வடிவேலுவுடன் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்த காமெடி நடிகை ஷோபனா 2004 ஆம் ஆண்டு, தன்னுடைய கோட்டூர்புரம் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போனார். உடல்நலப் பிரச்சினைகளே ஷோபனாவின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

15-1458025310-actress-shobana--600

இறந்து போன நடிகைகளில் பெரும்பாலானோர் தங்கள் பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளாமல் அவற்றைக் கண்டு பயந்தே தற்கொலை முடிவை தேடிக் கொண்டுள்ளனர். 

அதிலும் நிறைய பேர் நிறைவேறாத காதல் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் பல நடிகைகளின் தற்கொலைகளுக்கு இன்னும் காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. 

நன்றி: செய்தி உலகம்