பிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 அக்டோபர் 2017

பிரபாகரன் வேலுப்பிள்ளை - 1



 அதே இந்த நாளில் ஈழ மண்ணின் பச்சைக் குழந்தை பாலச்சந்திரனின் 18-வது பிறந்த நாள். ஒரே சுவடியில் இரு சுவடுகள்...

காந்திய யுகத்தின் அடிப்படைப் பண்புகள். தன் வாழ்நாளின் கடைசி விநாடி வரையில் அந்தக் கொள்கைப் பண்புகளில் இருந்து இம்மியும் பிசகவில்லை.

தன்னுடைய ஒட்டு மொத்தக் குடுமபத்தையே தமிழ் இனத்திற்காகத் தாரை வார்த்துக் கொடுத்தவர். அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.


பார் போற்றும் வீரப் பொக்கிஷமே... ஈழத் தமிழர்களின் பொற்கலசமே... உன்னை நினைக்கின்றேன்... இந்த உலகத் தமிழர்களுக்காக உன்னையும் உன் குடும்பத்தையும் அர்ப்பணித்துச் சென்றாயே... கண்ணீருடன் கைகூப்புகின்றேன்...

பால் மனம் மாறா பச்சை சிசுக்கள் வெட்டி வீசப் படுகிறார்கள். பருவம் மாறா பெண்கள் துகில் உரியப் படுகிறார்கள். பச்சைக் கணவர்கள் கண் முன்னாலேயே கசக்கிப் பிழியப் படுகிறார்கள். நலிந்த பெண்கள் நாசம் செய்யப் படுகிறார்கள்.
 

அதே அந்த வாசலில்… ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அருவம் தெரியாமல் அழிக்கப் படுகிறார்கள். வேடிக்கை பார்த்தது ஒரு தாய் நாடு. விலை பேசியது ஒரு தமிழர் நாடு. வெட்கித் தலைகுனிந்தது உலகத் தமிழர்க் கூட்டம். வெட்கம் வெட்கம் என்று வையகமே இப்போது வாரி உமிழ்கின்றது.

இந்த இலட்சணத்தில் இந்த மண்ணில் இலங்கா இராட்சசன் இடது காலை எடுத்து வலது காலை வைக்கின்றான். எதிர்த்து நின்றது மலேசிய இளைஞர் கூட்டம்.
 

உதிர்த்த உணர்வுகளினால் எழுச்சியின் வீர வேகங்கள். தற்போதைக்குத் தற்காலிக விடுதலை. தரணி போற்றும் மாந்தர்கள். வாழ்த்துகிறோம். அந்த ராகங்களுக்கு எல்லாம் தலைமகனாக விளங்கிய ஓர் அழகிய மகனின் வரலாறு வருகிறது. படியுங்கள்.

ஈழ மக்களின் ஈடு இணையற்றத் தலைவராக இன்றும் அந்தத் தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகத் தமிழர்களின் ஊனிலும் உயிரிலும் உரிமை உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்கின்றார். அந்த மாமனிதரின் வீர வரலாற்றை ஓர் ஆவணமாக முன் வைக்கிறேன்.

ராஜபக்சேயின் ஈனச் செயல்களை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்பவில்லை. காலம் அந்த மனிதரை அப்போதும் இப்போதும் எப்போதும் தண்டிக்கும். அந்த மனிதர் தலைகால் தெரியாமல் ஓடுகிறார் ஓடுகிறார்… வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிக் கொண்டு இருக்கிறார். ஓடட்டும்.
 

அந்த மனிதரின் பாவச் செயல்கள் எல்லாம் நம் நெஞ்சங்களை கிழித்துப் பார்க்கும் வேதனையின் விரிசல்கள். ஆக… வெந்து போன புண்ணில் மறுபடியும் பழுத்துப் போன ஆணிகளைப் பாய்ச்சாமல் இருப்பதே நல்லது.

படியுங்கள். படித்து விட்டு மனசுக்குள் மௌனமாக அஞ்சலி செய்யுங்கள். அதுவே மறைந்து போன வீர ஆத்மாக்களுக்கும் அவர்களைச் சார்ந்த ஜீவன்களுக்கும் நாம் செய்யும் கைமாறு. அதுவே ஒரு வீர வணக்கம் ஆகும்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் இறக்கவில்லை. எங்கோ மறைந்து வாழ்கிறார். சரியான நேரத்திற்காகக் காத்து நிற்கிறார் என்று பலர் சொல்கின்றனர். சொல்லியும் வருகின்றனர். உண்மை அப்படியே அமையட்டும். அதுவாகவே இருக்கட்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் தேதி. முன்னிரவு நேரம். போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு மூலையில் சார்லஸ் ஆண்டனி என்பவர் நேரடியாகக் களம் இறங்குகிறார்.
 

இன்னும் ஒரு மூலையில் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம். ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்காக அவர்கள் கூடி நிற்கிறார்கள்.

இந்தச் சார்லஸ் ஆண்டனி என்பவர் வேறு யாரும் இல்லை. அவர்தான் பிரபாகரனின் மூத்த மகன். அவரைப் பாதுகாப்பாகப் போர் முனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று மற்றத் தலைவர்கள் விரும்புகிறார்கள். சார்லஸ் ஆண்டனியைப் போருக்கு அனுப்பலாமா வேண்டாமா என்றும் தலைவர்கள் விவாதம் செய்கின்றனர்.

ஒரு நீண்ட நெடிய மௌனத்துக்குப் பிறகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்படிச் சொல்கிறார். ’விடுதலைக்காகப் போராடும் போது என் பிள்ளைகளுக்கு மட்டும் தனியாகச் சிறப்பு சலுகைகள் எதையும் கொடுக்க விரும்பவில்லை.
 

அவனைக் கடைசியாகப் பார்ப்பதாக இருந்தாலும் கூட நான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அவன் போர்க் களத்தில் இறந்து போவதை யாரும் தடுக்க வேண்டாம்’ என்கிறார்.

அதுதான் பிரபாகரனின் தன்னல மறுப்பு மனப்பான்மை. தியாகம், எளிமை, அடக்கம் ஆகியவை

காந்திய யுகத்தின் அடிப்படைப் பண்புகள். தன் வாழ்நாளின் கடைசி விநாடி வரையில் அந்தக் கொள்கைப் பண்புகளில் இருந்து இம்மியும் பிசகவில்லை.

தன்னுடைய ஒட்டு மொத்தக் குடுமபத்தையே தமிழ் இனத்திற்காகத் தாரை வார்த்துக் கொடுத்தவர். அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.