டான்ஸ்ரீ நடராஜா கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டான்ஸ்ரீ நடராஜா கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 மார்ச் 2019

டான்ஸ்ரீ நடராஜா கைது

கோலாலம்பூர் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜாவும் அவருடைய மகன் கண்ணா என்பவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகளினால் கைதி செய்யப்பட்டு உள்ளனர்.


ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த மூன்று நாட்களும் அவர்களிடம் விசாரணை நடத்தப் படும்.

டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லத்தில் 04.03.2019 இரவு 7:45 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தினார்கள். 



டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லம் கோலாலம்பூர் கோத்தா டமான்சாரவில் உள்ளது. அவருடைய இல்லத்தில் எம்.ஏ.சி.சி. சோதனை நடத்திய அதே வேளையில் பத்துமலை கோயில் தலைமை அலுவலகத்திலும் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

பத்துமலையில் இருக்கும் ஶ்ரீசுப்பரமணிய ஆலயக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரிடமும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.



இந்த இரு இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. கோயில் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அவருடைய மகன் டத்தோ கண்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப் பட்டார்கள்.

இதனிடையே பத்துமலை கோயில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரிடம் எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.



கோயில் நிர்வாகச் செயலாளர் சேதுபதியையும் எம்.ஏ.சி.சி. வாக்கு மூலப் பதிவுக்காக அழைத்துச் சென்றனர்.

பத்துமலை ஆலயத்திற்குச் சொந்தமான நில விவகாரம் தொடர்பாகப் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் டான்ஶ்ரீ நடராஜா மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு எதிராக எம்.ஏ.சி.சி. இந்த அதரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.



இந்தச் செய்தி இப்போது நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாகும். டான்ஶ்ரீ நடராஜாவும் அவருடைய மகன் டத்தோ கண்ணாவும் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பத்துமலை நிர்வாகத்திற்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்ததில் ஊழல் நடந்து இருக்கலாம் என்று 2014-ஆம் ஆண்டிலேயே பூச்சோங் முரளி என்பவர் போலீசில் புகார் செய்து இருந்தார். ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.