தொட்டால் சிணுங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொட்டால் சிணுங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஆகஸ்ட் 2017

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில் தொட்டால் சிணுங்கும்... அதுதான் தொட்டால் சிணுங்கி என்று சொல்வது உண்டு. 


உலகத்தில் முதன் முதலில் இந்தத் தொட்டால் சிணுங்கி தாவரம் South America and Central America நாடுகளில் பிறந்து தான் சிணுங்கத் தொடங்கியதாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்தத் தாவரமும் ஒரு மிகப் பெரிய இடத்தைப் பிடித்து இருக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப உபயோகித்தால் தீராத பிணிகள் நீங்கி விடுகின்றன. தாவரங்களில் மிக விநோதமாக உள்ள ‘தொட்டாச் சிணுங்கி’ என்ற ஒரு வகைச் செடியைத் தாவரவியலாளர் _மிமோஸாபொடிக்கா_ (Mimosa pudica) எனும் பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

நாம் தொட்டவுடனே சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச் சுருங்கி என்று பெயர் வந்தது. காலப் போக்கில் இந்தப் பெயர் தொட்டால் சிணுங்கி என்று மருவியதாம்.

இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும் போது காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.

தொட்டால் சிணுங்கி ஒரு மூலிகை. சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில் இரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப் படுகிறது. 

சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.