இந்தியாவில் கொள்ளை போன பொன் குவியல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியாவில் கொள்ளை போன பொன் குவியல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஆகஸ்ட் 2020

இந்தியாவில் கொள்ளை போன பொன் குவியல்கள்

இந்தியாவின் அரிய பெரிய பொன் குவியல்கள் (பொக்கிஷங்கள்); புதையல்கள்; செல்வங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் கொள்ளை போய் இருக்கின்றன. இந்தியாவிற்கு வந்த கடலோடிகளும் சரி; நாடோடிகளும் சரி; நன்றாகவே கொள்ளை அடித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

இந்தியாவின் தென் கோடியில் வராமல் வந்த வரப்பிரசாதங்கள். இவற்றையும் சும்மா சொல்லக் கூடாது. இன்றைய வரைக்கும் சுத்தமாகச் சுரண்டிக் கொண்டு இருக்கின்றன. மரியாதை கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.



அப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பொன் மணிகளில் *கோகினூர் வைரம்* முதன்மையானது. இந்த வைரம் ஒரு விசித்திரமான பின்னணியைக் கொண்டது.

இந்தியாவுக்குள் படை எடுத்து வந்த அந்நியர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட அரிய பெரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.



தரியா நூர் வைரம் (Daria-i-Noor),

ஷா ஜகானின் மயிலாசன வைரம் (Akbar Shah),

ஹோப் வைரம் (Hope Diamond),

நிஜாம் வைரம் (Nizam Diamond) ,

மகா மொகலாய வைரம் (Great Mogul Diamond),

ஓர்லோவ் வைரம் (Orlov Diamond),

ஜேக்கப் வைரம் (Jacob Diamond),

ரீஜண்ட் வைரம் (Regent Diamond)


இவை ஒவ்வொன்றும் பல ஆயிரம் கோடி ரிங்கிட் மதிப்புள்ள கலைச் செல்வங்கள். எல்லாமே கொள்ளைப் போய் விட்டன.



அவை அனைத்தும் அரிதிலும் அரிதான புனிதமான வைரங்கள். இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்கப் பட்ட அரிய வகை நவரத்தினமணிகள்.

இந்தியாவில் சில பல அரசியல்வாதிகள் ஆயிரம் கோடி அரசியல் பெருமைகள் பேசுகிறார்கள். பேசி என்னங்க இருக்கிறது. இந்திய மண்ணில் இருந்து பட்டப் பகலிலேயே கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டார்களே. என்னங்க பெருமை பேச வேண்டி இருக்கிறது.

அந்த வைரங்கள் எல்லாம் இப்போது வெளிநாட்டு அரும் பொருள் காட்சியகங்களில் இந்திய மண்ணின் சாட்சிப் பொருள்களாகக் காட்சி தருகின்றன.


இந்தியாவில் இருந்து கொள்ளை போன இந்திய வைரங்களை வைத்து ஹாலிவுட் சினிமாக்காரர்கள் *இந்தியானா ஜோன்ஸ் - டெம்பிள் ஆப் டூம்* (Indiana Jones and Temple of Doom) எனும் படத்தை எடுத்து கோடிக் கணக்கில் காசு  பார்த்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களின் புனிதப் பாத்திரமான *ஹோலி கிரைல்* அட்சய பாத்திரம். கேல்விப்பட்டு இருப்பீர்கள். இன்றைய நாள் வரையிலும் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். தேடிக் கொண்டும் வருகிறார்கள்.

அதைப் பற்றி படம் எடுத்து ஆவணங்களைத் தயாரிக்கிறார்கள். எப்பேர்ப்ட்ட புனிதமான செயல். தலைவணங்கும் உரிமைப் போராட்டங்கள்.



ஆனால் இந்தியா நாடு இழந்து போன வைரங்களைப் பற்றி பலரும் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. தொப்பை நிறைந்தால் சரி என்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இந்தியாவின் பெருமைக்குரிய மயிலாசனம் எங்கே இருக்கிறது?

கோகினூர் வைரம் எப்படிக் கொள்ளை போனது?

ஷா வைரம் எப்படி ரஷ்யாவுக்குப் போனது?

தரியாநூர் வைரம் எப்படி ஈரானுக்கு கடத்தல் செய்யப் பட்டது?


இதைப் பற்றி கொஞ்சம்கூட தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. இப்படி எழுதுவதற்காக என்னை மன்னியுங்கள்.



அண்மையில் பத்மநாபசாமி கோயிலின் காப்பறைகளில் கோடிக் கோடியாய் தங்கம் கிடைத்தது. தெரியும் தானே. ஆனால் அதைப் போல பல நூறு மடங்கு; பல ஆயிரம் மடங்கு தங்கம் இந்திய மண்ணில் இருந்து கொள்ளை போய் விட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்கும் தெரியும்.

முக்கால்வாசியை *உலகப் புகழ் சுரண்டல் மன்னன் இங்கிலாந்து* சுருட்டிக் கொண்டு போனது. இந்தியாவைக் கூறு போட்ட சாணக்கியத்திற்காக வருடம் தவறாமல் இங்கிலாந்து நாட்டுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். இது என்னுடைய சிபாரிசு.

இப்படிச் சொல்வதினால் இங்கிலாந்து இங்கே வந்து என் மீது வழக்கு ஒன்றும்  போட முடியாது. வழக்குப் போட்டாலும் ஜெயிக்கவும் முடியாது. விடுங்கள்.

மலாயாவில் வெள்ளைக்காரர்கள் விட்டுட்டு போன கித்தா பால் தோம்புகள் இருக்கவே இருக்கின்றன. அவை போதும். எனக்குப் பின்னால் வந்து பிரட்டுக் களம் போல வரிசை வரிசையாக நிற்கும்.

ஆஜர் ஆஜர் என்று சாட்சி சொல்லத் தயாராகவும் இருக்கும். அப்புறம் என்னங்க. அதனால் கவலையே இல்லை. மீண்டும் சந்திப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.08.2020

Pictures are taken from various sources for spreading knowledge. This is a non- commercial blog.