அர்ச்சனா செல்லத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச்சனா செல்லத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஆகஸ்ட் 2016

அர்ச்சனா செல்லத்துரை

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானி

இலங்கை வல்லையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் அர்ச்சனா செல்லத்துரை. டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். இப்போது இவர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 


ஆஸ்திரியா நாட்டில் அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர். அடுத்து போயிங், ஏர் பஸ் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். Danish மொழி ஆசிரியை. விமானியாகும் ஆசையில் அமெரிக்கா சென்றார். அங்கே மியாமி டீன் இண்டர்நேசனல் விமானிகள் கல்லூரியில் படித்தார். 




இறுதிச் சோதனையின் போது... விமானத்தைத் தனி ஒருவராக அமெரிக்கா மியாமி விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஆறு மணி நேரம் பறந்து காட்ட வேண்டும். 

அதே சமயத்தில் பாரிஸ், பெர்லின், கோப்பன்ஹெகன் மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கியும் ஏற்றியும் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் விமானிச் சான்றிதழ் வழங்குவார்கள்.



இப்போது Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating விமானிப் பயிற்சியை Diamond Flight Academy Scandinavia-இல் மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் இவர் AFF விமானிகள் உரிமத்தைப் பெற்றார். இருந்தாலும் அதை ஐரோப்பாவில் பயன்படுத்த வேண்டுமானால் ஐரோப்பாவிற்கான EASA விமானிகள் உரிமமாக மாற்ற வேண்டும். இதற்காக டென்மார்க் விமானக் கல்லூரியில் படித்து 14 சோதனைகள் எடுத்தார்.

பின்னர் சுவீடன் நாட்டின் Diamond Flight Academy கல்லூரியில் சேர்ந்து தனியாக விமானங்களை ஓட்டினார். ஐரோப்பிய விமானச் சட்டங்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய உரிமத்தை மாற்றிக் கொண்டார். 




இன்னும் ஒரு செய்தி. இவர் ஒரு சிறந்த திரைப்படப் பின்னணி பாடகியும் ஆவார். ’உயிர்வரை இனித்தாய்’ திரைப்படத்தில் ’என் நெஞ்சே என்னைத் தாண்டி நடக்கின்றதே’... எனும் புகழ்பெற்ற பாடலைப் பாடியவர். 

சங்கீதம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை முறைப்படி கற்றவர். பரத நாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்தவர். 
 
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்கள்... நெஞ்சினில் துணிவு இருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்...

Archana Sellathurai becomes first Tamil woman to become Co-Pilot in Denmark
https://youtu.be/xJAA2tCIdzk