நித்தியானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்தியானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூலை 2017

நித்தியானந்தா

ஒரு மனிதனை ஒரு நாய் கடித்து விட்டது என்றால் அது செய்தியா. இல்லீங்க. ஆனால் ஒரு நாயை ஒரு மனிதன் கடித்து விட்டான் என்றால் அதுதாங்க செய்தி. 


ஒரு மனைவியை அவளுடைய புருசன் உரிமையோடு ஏதோ அடித்து விட்டான் என்றால் அது செய்தி இல்லீங்க. 

ஆனால் அதே மனைவி அந்தப் புருசனை வாடா போடா மவனே என்று சொல்லி இழுத்துப் போட்டு நாலு மிதி மிதித்து இருந்தால் அதுதாங்க  செய்தி.

இங்கேதான் நித்தியானந்தா தடுமாறிப் போனார். என்ன போனார். போய் விட்டார். போதுங்களா. ரஞ்சிதா எனும் பெண் செய்தது ஒரு கோளாறு. சும்மா இருந்த சங்கைக் கெடுத்ததாக மீண்டும் ஒரு வரலாறு. தொடர்ந்து படியுங்கள்.

நித்தியானந்தா. நல்ல மனிதர். நாலும் தெரிந்த சின்னவர். ரொம்பவும் அவசரப் பட்டு விட்டார். இவரை எனக்குப் பிடிக்கும். என்ன காரனம் தெரியுமா. அவருடைய ஆன்மீக எழுத்துகள்.

மதுரை ஆதினத்தின் தலைவர் ஆவதற்கு நித்தியானந்தாவிற்கு தகுதி இல்லையா என்று சிலர் கேட்கலாம். அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன. இன்னும் இருக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை.



ஆனால் என்றைக்கு அவர் ரஞ்சித மோகன ராகம் பாடினாரோ அன்றைக்கே அவருடைய அருமை பெருமைகள் எல்லாம் அடிபட்டு போய் விட்டன.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சும்மாவா சொன்னார்கள். என்ன செய்வது. ஏழரை நாட்டு அரசன் அவருக்கு தூது போய் இருக்கிறான். பாவம் அவர்.

குமுதம் வார இதழில் நிதர்சனமான உண்மைகளை எழுதியவர் இந்த நித்தியானந்தா. அவரைப் பற்றி கோடிக் கணக்கான தமிழர்களுக்குத் தெரியும். ஒரு கட்டத்தில் தெய்வமாகக்கூட போற்றினார்கள்.

ஆனால் ரஞ்சிதா – நித்தியானந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. அதுவே உலகத் தமிழர்களிடையே ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தியது.

நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் சேர்ந்து இருந்த படங்களை சன் டிவி ’இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று சொல்லிச் சொல்லி விளம்பரம் செய்தது. 

முதல் முறையாக என்று போட்டுப் போட்டு அறுத்து எடுத்து விட்டது. தயவு செய்து சன் தொலைக்காட்சி கோபித்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு முறை அல்ல. இரு முறை அல்ல. பல நூறு முறைகள். ஏதோ வழக்கமான செய்தி தானே என்று பலர் நினைத்தார்கள். குடும்பம், குழந்தை குட்டிகளோடு சேர்ந்து அந்தப் படங்களையும் பார்த்தார்கள்.

அப்போது தான் தனிப்பட்ட ஒருவரின் விவகாரம் விகாரமாக மாறிப் போனது. பார்த்தவர்கள் முகம் சுழித்தார்கள். வேறு என்ன செய்ய முடியும். சொல்லுங்கள்,



அதன் பின்னர் நித்தியானந்தா உலக அளவில் பிரபலமாகிப் போனார். அது மட்டும் அல்ல. ‘பேஸ்புக்’ எனும் சமூக இணையத் தளத்தில் நித்தியானந்தாவைத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டு விட்டார்கள்.

காயப் போட்டாலும் பரவாயில்லை. அதையும் தாண்டிப் போய் விரசமான விமர்சனங்கள். ம்ம்ம்ம்…. என்ன செய்வது. அதனால் ஒரு கட்டத்தில் ரொம்ப பேர் அந்தப் பேஸ்புக் பக்கம் போவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

இன்னும் ஒரு விசயம். வேலை இல்லாத வெட்டிப் பேச்சுகள். அப்புறம் அப்பா அம்மாவுக்கு சோறு போட முடியாத சில வாக்குப் போக்குகளை அங்கே ரொம்பவுமே பார்க்கலாம். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரிய பெரிய சோம்பேறிகளின் கூடாரமாகப் பேஸ்புக் மாறிக் கொண்டு வருகிறது. ரொம்ப சந்தோஷம்.

சமூகப் பார்வையில் இன்னும் ஒரு செருகல். ஏற்கனவே சீரியல்களைப் பார்த்து பார்த்துப் பல குடும்பங்கள் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. சீரியல் நாடகங்கள் நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக 24 மணி நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டுமா.

அதனால் குடும்பத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. பிள்ளைகளைக் கவனிக்க நேரம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் எதிர்காலமே அடைமானத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.

எத்தனை மணிக்குப் பிள்ளை வீட்டை விட்டு வெளியே போனான். எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தான். யாரோடு போனான். அதை எல்லாம் தெரிந்து கொள்ள நேரமும் இல்லை. அக்கறையும் இல்லை.

வந்தாளே மொகராசி போனாளே மகராசி வருவாளா முகராசி என்று சீரியல்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரு நாளைக்கு யாராவது ஒருவன் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிச் சொல்லுவான். 



அண்ணே இது உங்க பையன் மாதிரி இல்ல இருக்கு. பேஸ்புக்குல வந்திருக்குங்க. பள்ளிக்கூடத்தில கேங்க் பைட் போட்டு இருக்கிறானாம்.

அப்புறம் அவரே மறுபடியும் கதவைத் தட்டி இது உங்க பொண்ணு மாதிரி இல்ல இருக்கு. பேஸ்புக்குல வந்திருக்கு. எவனையோ கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்து கிட்டு இருக்கா. ஸடேட்டஸ் அப்டேட் பண்ணி இருக்காள் என்று சொல்லுவான்.

அப்புறம் என்ன. பொண்டாட்டியைப் பார்த்து புருசன் கத்துவான். புருசனைப் பார்த்து பொண்டாட்டி கத்துவாள். சீரியல் எல்லாம் தோற்றுப் போகும்.

அந்தச் சண்டையை பதினெட்டு பட்டியும் டிக்கெட் வாங்காமல் பார்த்து ரசிக்கும். சில பலரின் வீடுகளில் இது தான் இப்போது நடக்கிற ஜிங்கு ஜிக்கா பேஸ்புக் ராமாயணங்கள். எங்கேயோ போய் விட்டேன். வயிற்றெரிச்சல். விடுங்கள். நம்ப நித்தி கதைக்கு வருவோம்.

ரஞ்சிதா வீடியோ காட்சிகள் அத்தனையும் பொய். கிராபிக்ஸ். வரைகலை மூலமாக ’மார்பிங்’ செய்யப் பட்டது என்று நித்தியானந்தா போராடிப் பார்த்தார்.

இந்தக் கட்டத்தில் ஹைதராபாத், புதுடில்லியில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வகங்கள் அந்த வீடியோ காட்சிகளைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தன.

அவை உண்மையான வீடியோ காட்சிகள் தான் என்றும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்றும் அறிக்கை கொடுத்தன. பெங்களூர் நீதிமன்றத்தில் உளவுத் துறைப் போலீசாரால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

சும்மா சொல்லக் கூடாது. அந்தச் சலசலப்பு இன்றும்கூட அடங்கவில்லை. ஆனால் அவர் மதுரை ஆதினத்தின் தலைவராகிப் போனது தான் பெரிய ஜில்லாலங்கடி பிரச்சினை. 



ஓர் ஆதினத்தின் தலைவராகும் தகுதி இவருக்கு இருக்கிறதா. இப்படி நான் கேட்கவில்லை. கோடிக் கணக்கான தமிழர்கள் கேட்டார்கள்.

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். மதுரை நகரில் இருக்கிறது. 

ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப் பட்டது.

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்றுவரை 292 பேர் பீடாதிபதிகளாக இருந்து உள்ளனர்.

292 ஆவதாக அருணகிரி என்பவர் இருந்தார். தனக்குப் பின்னர் அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்தார்.

அத்துடன் நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் பட்டமும் வழங்கப் பட்டது.



மதுரை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்ற ஆதீனத் தலைவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரை ஆதீன மடத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக வேறு நித்யானந்தா அறிவித்தார்.

அருணகிரி பணத்தை வாங்கிக் கொண்டு ஆதினத் தலைவர் பதவியை நித்தியானந்தாவிற்கு வழங்கியதாக ’விஸ்வ இந்து பரிசத்’ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

தவிர தமிழகத்தின் மற்ற திருமடங்களின் ஆதரவுடன் மதுரை ஆதீன மீட்புக் குழு என்று ஓர் அமைப்பு அமைக்கப் பட்டது. இந்தக் குழுவினர் ஆதீனத்தின் வாசல் முன்பு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் செய்தனர்.

தமிழகத்தில் செயல்படும் இந்துமத அமைப்புகளுக்கு அது ஒரு பெரிய மரண அடிச் செய்தி. அது முதல் அடி இல்லை. என்றாலும் முக்கியமான அடி. 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் பட்ட அவஸ்தை இருக்கிறதே சொல்லில் மாளா. அதைப் புரிந்து கொள்ள இன்னும் பல பத்தாண்டுகள் பிடிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் நித்தியானந்தா ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கினார் என்பது தான் அப்போதைக்கு ஒரு கவுண்டமணியார் செய்தி. 



அந்த அலைவரிசையின் பெயர் ஆனந்தம். ஆன்மிகத் தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமைந்தது. 24 மணி நேர டிவி சேனல். அதற்கான உறுதிப் பத்திரமும் கிடைத்தது. இன்றும் போய்க் கொண்டு இருக்கிறது.

யார் இந்த நித்தியானந்தா? இவருடைய முழுப்பெயர் இராஜசேகர். 1978 ஜனவரி மாதம் முதல் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார்.

தன்னுடைய பன்னிரண்டாவது  வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் தியானம் செய்யத் தொடங்கினார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி  பரிவிராஜக  வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.

பின்னர் தியானபீடம் எனும் சேவை மையத்தை 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்கி வைத்தார்.

ரஞ்சிதாவுடன் இருந்த காணொளியை  2010, மார்ச் 2-இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இவரைப்  பற்றிய நிகழ்படம் வெளியானதும், இவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி  தலைமறைவானார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டத்தில் கர்கி எனும் ஊரில் பதுங்கி இருப்பதாக செய்திகள் கசிந்தன. கர்நாடக காவல்துறை 2010 ஏப்ரல் 21 இல் கைது செய்தனர்.  

அப்போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயண காசோலையும் இருந்தன.

நித்தியானந்தா ஆதீனத் தலைவர் ஆனார் என்பதுதான் பலரால் கிரகிக்க முடியாத விசயமாக இருந்தது. ஊடகங்கள் தொடங்கி பாமரர் வரை அழுது தொலைத்தார்கள்.



இப்போது என்ன ஆனது தெரியுங்களா. நித்தியானந்தா வேண்டாம் என்று சொல்லிய ரஞ்சித மலர் தெலுங்கு நடிகர் சஞ்சீவியின் ஆசைநாயகியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். நல்ல நவரசக் கோலங்கள்.

ஆக ஓர் ஆண்மகனின் வாழ்விற்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். அவனுடைய தாழ்விற்குப் பின்னாலும் ஒரு பெண் நிற்கிறாள். அதே போல நித்தியானந்தாவின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருந்தாள்.

மனுசனாகப் பிறந்த அத்தனைப் பேருக்கும் ஆசைகள் இருக்குங்க. இல்லை என்று யாரையாவது ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கள். பிடித்தமானவர் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டால் போதுங்க. 

குடும்ப மகிழ்ச்சி இமயமலையில் இருந்து இறங்கி கீழே அன்னபூர்னா வரை சாய்ந்து நிற்கும். சாகும் வரை சாகடிக்கும் மனச் சாரல்கள். அது போதுங்க.

நித்தியானந்தா பிரம்மசரியத்தைக் கலைத்து விட்டு சாதாரண சாமான்ய நிலைக்கு திரும்பச் சொல்கிறார் ரஞ்சித மலர். திரும்புவாரா நித்தி. அப்படி ஒரு திருப்பம் ஏற்படுமா. வரவே வராது.

ஆண்கள் எல்லாரும் கடுக்காய் சாப்பிட வேண்டும் என்று அண்மையில் நித்தி ஆலோசனை சொல்லி இருக்கிறார்.  எது எப்படியோ. ஒன்று மட்டும் உண்மை. 

தலைப் பாகை கட்டி பிரியாணி சோறு சாப்பிட்டவர்களுக்கு நாசி லெமாக் ரொட்டி சானாய் சரிபட்டு வருமா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.