மகாபாரத எலும்புக்கூடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாபாரத எலும்புக்கூடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 மார்ச் 2017

மகாபாரத எலும்புக்கூடு

 பொய்யாக இருந்தாலும் அந்தப் பொய் உவாக்கப்பட்ட பரபரப்பின் மேல் நம் அனைவருக்குமே சற்று அலாதியா ஆர்வம். அண்ல்மையில் ஒரு செய்தி. இணையத்தில் காய்ச்சல் பிடித்து கலாய்க்கும் செய்தி... அப்படிப் பரவிய ர் அதிசயமான பொய்.

ராமாயண மகாபாரத எலும்புக்கூடு என்று ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு செய்தியை உருவாக்கி அதைப் பரவ விட்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் கடோத்கஜன். அவனுடைய 40 அடி எலும்புக்கூடு வட இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று ஒரு செய்தி. கடைசியில் இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ‘தொல்பொருள் ஆராய்ச்சி’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் பிடிக்கப்பட்டவை.

வவை டிஜிட்டல் புகைப்பட ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியின் போது எடுக்கப்பட்வை. எப்படியோ உண்மை ஒரு வழியாகத் தெரிய வந்தது. இருந்தாலும் மகாபாரத ரசிகர்கள் விடுவதாக இல்லை. ஆப்பிரிக்காவில் கிடைத்த எலும்புக் கூடுகளையும் சீனாவில் 
கிடைத்த எலும்புக் கூடுகளையும்  இணையத்தில் போட்டுத் தாக்குத் தாக்கு என்று தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.



உண்மையில் இது 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி கினோ டி டொமினிசிஸ் (Gino De Dominicis) எனும் இத்தாலிய சிற்பி இத்தாலி மிலான் நகரில் உருவாக்கிய இராட்சச மனித எலும்புக்கூடு. 




இந்த எலும்புக்கூடு ராமாயணம், மகாபாரதம் எதிலும் இல்லை. ஆனால் ராமாயண மகாபாரத எலும்புக்கூடு என்று ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு செய்தியை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து அதைப் பரவ விட்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
(சான்று: https://shewalkssoftly.com/page/227/?pages-list)