பரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 செப்டம்பர் 2019

பரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில்

1985-ஆம் ஆண்டு செங் ஹோவின் 580-ஆம் ஆண்டு நினைவு நாள். அதை முன்னிட்டு சீனா அரசாங்கம் செங் ஹோவிற்காகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு செய்தது. அந்த அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் படம் காட்சிப் படுத்தப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி தரும் செய்தி.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா. 1402-ஆம் ஆண்டில் இருந்து 1414-ஆம் ஆண்டு வரை மலாக்காவை ஆட்சி செய்தவர். இவருக்கும் சீனாவுக்கும் நெருங்கிய அரச தந்திர உறவுகள் இருந்தன.

பரமேஸ்வரா காலத்தில் சீனாவின் கடல்படை தளபதி செங் ஹோ (Zheng He) மலாக்காவிற்கு மூன்று முறைகள் வந்து இருக்கிறார்.

(Images of four stamps printed by photo gravure, and issued by China (PRC) on July 11, 1985 to commemorate the 580th anniversary of Zheng He's sea expeditions, Scott Nos. 1992-95.)

1400-ஆம் ஆண்டுகளில் பரமேஸ்வரா இரு தடவைகள் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அவரின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் துணையாக இருந்து இருக்கிறார்கள்.

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்கு முதல்முறையாகச் சென்று இருக்கிறார்.

யோங் லே (Yongle Emperor) மாமன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். நான்கிங் நகரில் பரமேஸ்வரா (Nanjing) இரு மாதங்கள் தங்கி இருக்கிறார்.

(சான்று: http://eresources.nlb.gov.sg/…/art…/SIP_1540_2009-07-06.html)

யோங் லே மாமன்னர் பரமேஸ்வராவைப் பாராட்டி மலாக்காவின் உரிமைமிகு ஆட்சியாளர் என ஏற்றுக் கொண்டார். சீனாவின் அங்கீகாரச் சின்னமாகச் சீன நாட்டு முத்திரை; சீன நாட்டுப் பட்டுத் துணி; சீன நாட்டு மஞ்சள் குடை போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவின் உரிமை மிக்க ஆட்சியாளர் எனும் அதிகாரப் பூர்வமான கடிதமும் பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது.

அதன் பின்னர் மலாக்கா ஒரு சிற்றரசு எனும் தகுதியைப் பெற்றது. அந்தத் தகுதியை வழங்கியவர் சீன நாட்டு மாமன்னர் யோங் லே. அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு 1411. [1]

மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது பரமேஸ்வராவிற்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றார்கள்.

ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள். [2]

ஆக சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது.

சீனாவின் மிங் அரச வம்சாவளியினர் மலாக்காவிற்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அதனால் மலாக்காவிற்கும் சீனாவிற்கும் அரச தந்திர உறவுகள் மேம்பாடு கண்டன. இந்த அரச தந்திர உறவுகள் வெளிநாட்டவரின் தாக்குதல்களையும் தவிர்த்தன.

குறிப்பாக சயாம் நாடும் மஜபாகித் பேரரசும் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றிக் கொள்ள காத்து இருந்தன.

சீனா - மலாக்கா நல்லுறவுகளினால் அந்தத் தாக்குதல்கள் நடைபெறாமல் போயின. மலாக்காவில் அமைதி நிலவியது. அதனால் மலாக்கா ஒரு முக்கிய வணிகக் கேந்திரமாக விளங்கியது.

சீன நாட்டு அரச தந்திர உறவுகளில் பரமேஸ்வரா காட்டிய அணுக்கத்தின் காரணமாக செங் ஹோ அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

பரமேஸ்வரா வரலாற்று ஆய்வு நூலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

மேல் விவரங்களுக்கு:

https://ksmuthukrishnan.blogspot.com/20…/…/blog-post_38.html

சான்றுகள்:

1. http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786

2. Ming Shilu known as the Veritable Records of the Ming dynasty - http://www.epress.nus.edu.sg/msl/introduction

No photo description available.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Kalai Selvam நன்றி ஐயா. பல முக்கிய செய்திகளை எங்களுக்கு தருகிறீர்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு புத்தகமாக வெளியிடுங்கள். நம் சமூகத்தின் பெருமையை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்குமே. உதவீர்களாக ஐயா. 



Kumar Murugiah Kumar's Arumai aiyya, thodaruttum unggal pani !



Khavi Khavi அற்புதமான சரித்திர தகவல் ஐயா, நன்றி



Kumaravel Muthu Goundan தமிழனின் பெருமையைப் பறை சாட்டும் அரிய தகவல். நன்றி அய்யா🙏


பாரதி கண்ணம்மா இது வரை அறியாத அற்புதமான தகவல்கள். நன்றி சார்.


Arjunan Arjunankannaya அருமை ஐயா.மறைக்கபட்ட உண்மைகள்.


Raghavan Raman அருமையான தகவல. நன்றி ஐயா.





14 ஜூலை 2019

பரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில்

1985-ஆம் ஆண்டு செங் ஹோவின் 580-ஆம் ஆண்டு நினைவு நாள். அதை முன்னிட்டு சீனா அரசாங்கம் செங் ஹோவிற்காகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு செய்தது. அந்த அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் படம் காட்சிப் படுத்தப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி தரும் செய்தி.



மலாக்காவைத் தோற்றுவித்தவர் மாமன்னர் பரமேஸ்வரா. 1402-ஆம் ஆண்டில் இருந்து 1414-ஆம் ஆண்டு வரை மலாக்காவை ஆட்சி செய்தவர். இவருக்கும் சீனாவுக்கும் நெருங்கிய அரச தந்திர உறவுகள் இருந்தன. பரமேஸ்வரா காலத்தில் சீனாவின் கடல்படை தளபதி செங் ஹோ (Zheng He) மலாக்காவிற்கு மூன்று முறைகள் வந்து இருக்கிறார்.

(Images of four stamps printed by photo gravure, and issued by China (PRC) on July 11, 1985 to commemorate the 580th anniversary of Zheng He's sea expeditions, Scott Nos. 1992-95.)

1400-ஆம் ஆண்டுகளில் பரமேஸ்வரா இரு தடவைகள் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அவரின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் துணையாக இருந்து இருக்கிறார்கள்.




1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்கு முதல்முறையாகச் சென்று இருக்கிறார். யோங் லே (Yongle Emperor) மாமன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். நான்கிங் நகரில் பரமேஸ்வரா (Nanjing) இரு மாதங்கள் தங்கி இருக்கிறார்.

(சான்று: http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1540_2009-07-06.html)

யோங் லே மாமன்னர் பரமேஸ்வராவைப் பாராட்டிப் பேசினார். பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமைமிகு ஆட்சியாளர் என ஏற்றுக் கொண்டார். சீனாவின் அங்கீகாரமாகச் சின்னமாகச் சீன நாட்டு முத்திரை; சீன நாட்டுப் பட்டுத் துணி; சீன நாட்டு மஞ்சள் குடை அன்பளிப்பாக வழங்கப் பட்டன.




பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமை மிக்க ஆட்சியாளர் எனும் அதிகாரப் பூர்வமான கடிதமும் பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது. அதன் பின்னர் மலாக்கா ஒரு சிற்றரசு எனும் தகுதியைப் பெற்றது. அந்தத் தகுதியை வழங்கியவர் சீன நாட்டு மாமன்னர் யோங் லே. அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு 1411. [1]

மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது பரமேஸ்வராவிற்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றார்கள். ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள். [2]

ஆக சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது.




சீனாவின் மிங் அரச வம்சாவளியினர் மலாக்காவிற்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அதனால் மலாக்காவிற்கும் சீனாவிற்கும் அரச தந்திர உறவுகள் மேம்பாடு கண்டன. இந்த அரச தந்திர உறவுகள் வெளிநாட்டவரின் தாக்குதல்களையும் தவிர்த்தன.

குறிப்பாக சயாம் நாடும் மஜபாகித் பேரரசும் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றிக் கொள்ள காத்து இருந்தன. சீனா - மலாக்கா நல்லுறவுகளினால் அந்தத் தாக்குதல்கள் நடைபெறாமல் போயின. மலாக்காவில் அமைதி நிலவியது. அதனால் மலாக்கா ஒரு முக்கிய வணிகக் கேந்திரமாக விளங்கியது.

1405-ஆம் ஆண்டு இன் சிங் தூதர் மலாக்காவிற்கு அனுப்பப் பட்டார். மலாக்கா ஆளுநருக்கு தங்கப் பட்டுப் பின்னல்; தங்கத்தினால் பின்னப்பட்ட ஒரு முகத்திரை வழங்கப்பட்டது.

இன் சிங் தூதர் மலாக்காவிற்குச் சென்ற போது அங்கே ஒரு சாம்ராஜ்யம் அமைக்கப்படவில்லை. மலாக்காவில் ஒரு நிரந்தரமான மன்னரும் இல்லை. ஆண்டுதோறும் சயாமிற்கு 40 தங்கக் கட்டிகள் வரிப் பணமாக வழங்கப் படுகிறது.

இன் சிங் தூதரைக் கண்டு மலாக்காவின் தலைவர் பாய்-லி-மி-சுலா (Pai-li-mi-su-la) அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். பரமேஸ்வராவை சீனாவிற்கு அழைத்து வந்தார். அவரைச் சீன மாமன்னர் வெகுவாகப் பாராட்டினார்.




மான்-லா-காவின் (Man-la-ka) மன்னராக்கிப் பெருமை செய்தார். அவருக்குச் சீன அரசு முத்திரை; வண்ணம் தோய்ந்த பணத் தாட்கள்; ஓர் ஆடை ஆபரண பெட்டகம்; மஞ்சள் நிற மாட்சிமைக் குடை வழங்கப்பட்டது.



அதற்கு நன்றி கூறிய மலாக்காவின் தூதர் மன்னர் பரமேஸ்வரா மகிழ்ச்சி அடைகிறார். ஆண்டுதோறும் அன்பளிப்பு வழங்க சம்மதிக்கிறார். மலாக்கா அரசிற்கு சாம்ராஜ்யம் எனும் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பதே அவரின் தாழ்மையான வேண்டுகோள். மலாக்கா ஒரு சாம்ராஜ்யமாகக் கருதப்படுகிறது எனும் அரசக் கவிதை பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு வழங்கப் பட்டது. 

சீன நாட்டு அரச தந்திர உறவுகளில் பரமேஸ்வரா காட்டிய அணுக்கத்தின் காரணமாக செங் ஹோ அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.


பரமேஸ்வரா வரலாற்று ஆய்வு நூலில் இந்தத் தகவல் இடம்பெற்று உள்ளது.

சான்றுகள்:

1. http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786

2. Ming Shilu known as the Veritable Records of the Ming dynasty - http://www.epress.nus.edu.sg/msl/introduction