பிரதாப் சந்திர சாரங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதாப் சந்திர சாரங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூன் 2019

பிரதாப் சந்திர சாரங்கி



 
கடந்த மே 30-ஆம் தேதி நடுவண் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். அப்போது மிகவும் எளிமையான தோற்றத்தில் ஒருவர் மேடை ஏறினார். அந்த மெலிந்த சந்திர சாரங்கியைப் பார்த்ததும் அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்.

அந்தக் கைதட்டலுக்குப் பின்னால் என்ன மாதிரியான உணர்வுகள் இருந்தன. இருந்து இருக்கும். எளிமையானவர் என்பதற்காகவா அல்லது இந்துத்வா எனும் பெயரில் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டவர் என்பதற்காகவா? யாருக்கும் தெரியப் போவது இல்லை.




சந்திர சாரங்கியின் அமைச்சர் பதவியைப் பலரும் வரவேற்கின்றார்கள். இல்லை என்று சொல்லவில்லை. எதிர்க் கட்சியினரும் பாராட்டுகின்றார்கள். ஒடிசாவின் மோடி என அழைக்கப் படுகிறார். உண்மையில் அவரை அப்படிக் கொண்டாட அவர் தகுதியானவரா ?

இவருடைய வாழ்க்கையின் மறுபக்கத்தில் கதை வேறு மாதிரியாகப் பயணிக்கின்றது.

சந்திர சாரங்கிக்கு 64 வயதாகிறது. ஒடிசா மாநிலப் பா.ஜ.க.வில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர். ஒடிசா மாநிலத்திற்கு வெளியே இவரை யாருக்கும் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.


ஆனால் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரின் எளிமையான இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் பரவலாகப் பகிரப் பட்டன.

அதே சமயத்தில் 1999-ஆம் ஆண்டு ஓர் ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவருடைய பிள்ளைகளையும் கொன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட செய்திகளும் பரவலாகி வருகின்றன.




அண்மைய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்டோவில் சென்று தான் வாக்குகள் சேகரித்தார். இவருக்குத் தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. வரி செலுத்தும் அளவிற்குத் தனக்கு வருமானம் இல்லை என்று தன் தேர்தல் வேட்பு மனுவிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது புவனேஷ்வரில் இருக்கும் சட்டமன்றத்திற்குப் பெரும்பாலும் நடந்தே செல்வார். சமயங்களில் சைக்கிளிலும் செல்வார். 




இவ்வளவு பிரபலமான சாரங்கி அவர் நடந்து வந்த பாதை மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. எளிமையானவர் என்று இவர் மீது கட்டு அமைக்கப்படும் பிம்பம் முற்றிலும் போலியானது என்பதை உணரும் போது வேதனையாக உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

எளிமையின் மறுபக்கத்தில் ஒரு கொடூரம் இருப்பதைத் தெரிந்து கொண்டதும் நம்முடைய எழுதுகோலிலும் நேர்மை தேவைப் படுகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)