சாக்ரடீஸ் சொன்னது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாக்ரடீஸ் சொன்னது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 அக்டோபர் 2015

சாக்ரடீஸ் சொன்னது

உங்களுக்கு நல்ல மனைவி வாய்த்தால்...
நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்...
கெட்ட மனைவி வாய்த்தால்...
நீங்கள் ஞானி ஆகிவிடுவீர்கள்...


சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி.


ஒருமுறை சாக்ரடீஸ்... தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தார். பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலே இருந்து கொட்டினார். யார் தலையில்... சாக்ரடீஸ் தலையில்! சாக்ரடீஸ் அசரவில்லை. அப்போது அவர் சொன்னார்...

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடி முழங்கியது... இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியைப் பற்றி நன்கு அறிந்தவர் அங்கே அப்போது ஒருவர் இருந்தார். அவர் சாக்ரடீஸிடம் சென்று, திருமணம் செய்து கொள்வதைப் பற்றிய தங்கள் கருத்து என்னவோ என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ் சிரிக்கமல் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப் படுவாய்! “நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ ஞானி ஆகலாம்” என்றார். ஆக, சாக்ரடீஸ் சொன்னது உண்மை. ஐயம் வேண்டாம். சாக்ரடீஸ் என்பவர் மனுக்குலத்தில் ஒரு தத்துவஞானியாக இன்றும் போற்றிப் புகழப் படுகிறார்.