ஸக்கீர் நாயக் - இண்டர்பால் சிவப்பு அறிவிப்பு செய்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸக்கீர் நாயக் - இண்டர்பால் சிவப்பு அறிவிப்பு செய்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2019

ஸக்கீர் நாயக் - இண்டர்பால் சிவப்பு அறிவிப்பு செய்தால்

நன்றி: Free Malaysia Today

அனைத்துலக இண்டர்பால் போலீஸார் (Interpol), மத போதகர் ஸக்கீர் நாயக் மீது சிவப்பு அறிவிப்பை வெளியிட்டால் அவரைக் கைது செய்வதைவிட மலேசியப் போலீசாருக்கு வேறு தேர்வு இல்லை என்று அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சேவை செய்த வழக்கறிஞர் என். சிவநாதன் கருத்து கூறி உள்ளார். (Malaysian police would have no choice but to arrest him).  


அனைத்துலக இண்டர்பால் அமைப்பில் உறுப்பியம் பெற்ற நாடுகளில் ஒன்றான மலேசியா அதைச் செய்வது அதன் கடமையாக அமையும். ஸக்கீர் நாயக்கைக் கைது செய்து இண்டர்பால் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அவர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் படுவார்.

உறுப்பியம் பெற்ற நாடுகளிடம் தேடப்படும் ஒருவரைக் கைது செய்யக் கோரும் ஓர் எச்சரிக்கையே சிவப்பு அறிவிப்பு ஆகும். (An Interpol red notice is an alert to member police forces to apprehend a wanted person.)

அனைத்துலக இண்டர்பால் அமைப்பின் உதவியை இந்தியா நாடியது ஒரு துரதிருஷ்டவசமாகும். 2010-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒப்படைப்பு ஒப்பந்தம் (extradition treaty) செய்து உள்ளன.


கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஏ.கே.பல்லா (AK Bhalla), இந்தியாவிற்கு வருகை புரிந்த இண்டர்பால் தலைமைச் செயலாளர் ஜர்கன் ஸ்டோக் )Jurgen Stock) என்பவரைச் சந்தித்துப் பேசினார்.

ஸக்கீர் நாயக்  11 கோடி 45 இலட்சம் ரிங்கிட் மதிப்பு (Rs1.9 billion - RM114.5 million) உள்ள குற்றவியல் சொத்துக்களைக் கொண்டு இருப்பதாக, பணச் சலவை சட்டத்தின் கீழ்  அவர் மீது இந்தியா குற்றப் பதிவு செய்து உள்ளது.

https://www.freemalaysiatoday.com/category/nation/2019/09/01/malaysia-obliged-to-arrest-naik-if-interpol-issues-red-notice/