சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 அக்டோபர் 2015

சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா



               சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்                                      (Svetlana Alexandrovna Alexievich)

பிறப்பு: 31 மே 1948 (வயது 67)

தொழில்: பத்திரிக்கையாளர், எழுத்தாளர்

நாடு: பெலருசியா

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)

”நமது காலத்தின் துயரம் ஒரு துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும்”

எனும் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 14-ஆவது பெண்.

மேற்கு யுக்ரேயினில் சிவெத்லானா பிறந்தவர். பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

பின்னர் பெலருசிய அரசப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1972-இல் பட்டம் பெற்றார். மின்ஸ்க் நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப் பட்டவர்களின் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனால் பெலருஸ் அரசாங்கத்தின் கெடுபிடிகள்.

2000-ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து நாடு கடத்தப் பட்டார். பாரிஸ், பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பெலருஸ் திரும்பினார்.

இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலக இலக்கியவாதிகள் இவரை மனித உரிமைப் போராளியாகப் போற்றுகின்றனர்.