காமராஜர் கயிறு இழுத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் கயிறு இழுத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஜூன் 2016

காமராஜர் கயிறு இழுத்தார்

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்த காலம். 'சட்டமன்ற உறுப்பினர் நாள்' என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்தது அன்றைய தமிழக அரசு.

1957-ம் ஆண்டு ராஜாஜி ஹாலின் வெளிப்புற இடத்தில் எம்.எல்.ஏக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன.


பெண் உறுப்பினர்கள், ஆண் உறுப்பினர்களுடன் சரிநிகராக மாறுவேடப் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி போன்றவற்றில் பங்கெடுத்து அசத்தினார்கள். கயிறு இழுத்தல் போட்டியில் முதல் ஆளாக நின்று காமராஜரும் கயிறு இழுத்தார்.
முதல்வராக இருந்த காமராஜர், வேஷ்டி சட்டையோடு இந்த போட்டியில் கலந்து கொண்டார். இந்த விளையாட்டுகள் அனைத்திலும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு கலக்கினார்கள் என்பதுதான் முத்தாய்ப்பு.

இன்றைய சட்டமன்றங்கள்... அங்கே தமிழகத்திலும் சரி இங்கே மலேசியாவிலும் சரி... படும் பாட்டை நினைக்கும் பொழுது அன்றைய காலம் பொன்னான காலமாகத் தான் தெரிகிறது.


நாம் இன்று போற்றும் அரசியல்வாதிகள் தெய்வங்கள் அய்யா... அவர்கள் எப்படி ஒரு சாதாரண மனிதன் காமராஜரைப் போல இருப்பார்கள்... சாஷ்டங்கமாக நமஸ்கரிக்கவும், கூன்வளைந்து கும்பிடவும் நமக்கு பயிற்சி கொடுத்து விட்டார்கள்.

ஏதோ ஐநூறோ ஆயிரமோ வாங்கிக் கொண்டு தனது பொன்னான வாக்கைப் போடுவதோடு தமிழனின் கடமை முடிந்து போகிறது. அப்புறம் அவர்கள் தெய்வமாகத் தெரிகிறார்கள். கும்பிடுடா தமிழா.. கூன்வளைந்து கும்பிடு...

போங்கடா நீங்களும் உங்கள் சுய மரியாதையும்... காமராஜரும் கக்கனும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கேலி பேசும் கூட்டம்தான் இன்று நம்மை ஆளுகிறது.

-முத்தண்ணா 05.06.2016