படித்தேன் ரசித்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தேன் ரசித்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஜூன் 2016

படித்தேன் ரசித்தேன்

நதியில் விழுந்த இலை போல... திக்கு திசை தெரியாமல் தத்தளித்து... பலச் சோகங்களைக் கண்டு... பல வேதனைகளைக் கண்டு... பல பந்தங்களை எதிர்க் கொண்டு... விழித்துவரும் நிலையில்... அற்புதமான வரிகள். படித்தேன் ரசித்தேன்.

தமிழ்த் தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி...

தனிக் காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி...

அன்பான உறவுதனில் கூடு கட்டி ஆடிடுவேன்...

பண்பான மறுவாழ்க்கை தனைத் தேடிடுவேன்...

பாரதி வார்த்தைகள் தோற்றதில்லையடி...

தோல்வி என்பதும் எனக்கில்லையடி...

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி...  In the confrontation between the stream and the rock... the stream always wins... not through strength but by perseverance என்று சொல்வார்கள். 

வாழ்க்கையும் அப்படித் தான். பற்பல மேடு பள்ளங்கள்... பற்பல வேதனைகள் பற்பல சோதனைகள்... போராட வேண்டும்... 

ஜெயித்துக் காட்ட வேண்டும். போராடத் தெரியாதவன் மனிதனாகப் பேர் போட முடியாது. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்.