தமிழினமும் தமிழ்மொழியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழினமும் தமிழ்மொழியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆகஸ்ட் 2016

தமிழினமும் தமிழ்மொழியும்

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அதிகம் அறியாத ஓர் இனம் உலகில் இருக்கிறது என்றால் அது தமிழ் இனமாகத்தான் இருக்கும். 


அதனால் தான் ஒரு தமிழன் என்று அறியாமல்... புரியாமல்... தெரியாமல் தன்னைத் திராவிடன் என்றும்... இந்தியன் என்றும் தமிழர்களே சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

மொழி இன வரலாற்றை அறிந்த தமிழர்களில் ஒரு பகுதினர் தாம் இன்னமும் தமிழினத் தொப்புள் கொடி அறிந்து போகாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களால் தான் இன்னமும் உலகத்தில் தமிழினமும் தமிழ்மொழியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையன்று.

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத நிலையிலும்... அறிந்து கொள்ள விரும்பாத நிலையிலும் தமிழர்கள் பலவகையிலும் தாழ்ந்து போய் இருக்கின்றனர்.

அதுமட்டும் அல்ல... அன்னிய மொழி, இன, பண்பாடு, கலை, நாகரிகத்திற்கு அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய சொந்தக் கால் இருப்பதே தெரியாமல் செயற்கைக் காலில் நின்று கொண்டு இருக்கிறனர்.

என்னே பரிதாபம்... என்னே அறியாமை...

இத்தகைய மூட நம்பிக்கையின் காரணமாக தமிழையும் தமிழின மரபுகளையும் எதிர்க்கவும் துணிகின்றனர்... வேரோடு அழித்துவிட முயற்சியும் செய்கின்றனர்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறிந்து இருக்கிறதோ... அந்த இனமே தன்னம்பிக்கை கொண்ட இனமாக இருக்கும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை உயர்த்திப் பிடிக்கிறதோ... அந்த இனமே தன்மானத்துடன் வாழும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை முன் எடுக்கிறதோ... அந்த இனமே தலை நிமிர்ந்து முன்னேறும்.

மொழி இன வரலாறு அறியாமல் தெரியாமல் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என எப்படி முன்னேறினாலும் அது முழுமையான முன்னேற்றமாக அமைந்து விடாது.