சிவகங்கை திரளை மலேசியாவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகங்கை திரளை மலேசியாவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஆகஸ்ட் 2020

சிவகங்கை திரளை மலேசியாவில்

சிவகங்கை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம். இப்போது அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. அந்தச் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒருவர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மலேசியா திரும்பி உள்ளார். இவர் மலேசிய நிரந்தர குடியிருப்பாளர்.


கோலாலம்பூர் (KLIA) அனைத்துலக விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும், அவருக்கு COVID-19 அறிகுறிகள் இல்லை என்று தெரிய வந்தது.

இருப்பினும் அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மனிதர் அதைப் பொருட் படுத்தவில்லை. 

கெடா ஜித்ராவில் உள்ள அவருடைய நாசி கண்டார் உணவகத்திற்கு நேராகப் போய் இருக்கிறார். வியாபாரம் பார்த்து இருக்கிறார். தனிமைப் படுத்தல்; கோவிட் பாதுகாப்பு என்று எதுவும் இல்லை.


அப்புறம் என்ன. அவர் மூலமாக கோவிட் நோய் 5 பேருக்குத் தொற்றிக் கொண்டது. அவருடைய உணவகத்தின் நான்கு ஊழியர்கள்; மற்றும் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர். 

அந்த ’நாசி கண்டார்’ கடைக்காரர் சிவகங்கைக்குப் போய் அங்கே இருந்து கோவிட் நோயை இங்கே கொண்டு வந்து பரப்பி விட்டதால், அதற்கு சிவகங்கை திரளை (Sivaganga cluster) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். 


இதன் மூலம் சிவகங்கை பிரபலம் ஆகியுள்ளது. இந்திய வரலாறுக்கும் இந்த சிவகங்கை கோவிட் வரலாற்றுக்கும் தொடர்பு இல்லை. காக்கா உட்காரப் பனம் காய் விழுந்த கதை.

ஒரு மனிதர் செய்த தவற்றினால் வீரம் பேசிய சிவகங்கைக்கு கடாரத்தில் ஒரு தலைகுனிவு.