இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 அக்டோபர் 2015

இணையம்

இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. மலேசியாவைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன்.
 

அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய ’நயனம்’ வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின் கூட்ட்ய் இணைப்பான பெரும் வலை அமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பறிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறுகிறது.

இணையம் என்னும் சொல்லானது செப்புக் கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டு உள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும்.

உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்பு கொண்ட கட்டுரைகள், எழுத்துகள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு. உலகளாவிய வலை என்பது வேறு.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் தமிழில் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.